வியாழன், 26 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

தரு இராகம் -- சுருட்டி -- தாளம் -- ஆதி
பல்லவி
ஆராலறியலாஞ் சீரார்தூப்புலவதாரதேசிகர்வைபவமே.
அனுபல்லவி
நாராயணர்கச்சிப் பேரருளாளரை
நேராயனுதின மாராதனைசெய்த (ஆரா)
சரணங்கள்
மாயாவாதிசன்னியாசி வாதத்தில்வல்லமைபேசி
வாயாமலேசல்லியமோசி வந்துகுளத்தில்வாரிராசி
வற்றவுறுஞ்சியு மத்தையிவரின்வ
யிற்றுநிரம்பவும் வைத்தததுகண்டு (ஆரா)
வயிறானதுப்பல்மீற மந்திரமீதென்றுதேறக்
கையினாலொருதூணைக்கீறக் கண்டுவிடவேஜலமுமாறக்
கருவமடங்கியே மறுபடியுமிவர்
கிருபைபெறுமவ னுறுதிசெயவைத்த (ஆரா)
ராமானுஜஸித்தாந்த ராமுபயவேதாந்த
சீமானுமானசாந்த ஸ்ரீவேங்கடாத்திரிக்காந்தத்
திருவனந்தசூரி தருசுதமணியாய்
வருபெறுமையுள்ள குருதிலகர்தம்மை (ஆரா)

விருத்தம்
வருவிஜயநகரமதுதனிலேராஜ
வல்லபர்பாலிருக்கும்வித்யாரணியனன்பு
பரிபாலயஸ்னேகிதத்தாலிவருமிங்கு
பாதானவிருத்தியின்வைபவத்தைக்கேட்டி
வரிடத்தேராஜனைக்கொண்டுபகரிக்க
வரவழைக்கவேண்டுவென்றுமனத்திலெண்ணி
ஒருதரமிரண்டுதரமுப்ரகார
மொப்பந்தானெழுதினன்விண்ணப்பந்தானே.
இதுவுமது
இப்படியேதேவரீரிவளவாக
வெழுந்தருளினீராகிலரசனைக்கொண்
டப்படியேதேவரீர்க்கடிமையாகி
யதிகமாம்பிரயோஜனங்கள்தானேசெய்து
வைப்பனென்றேயிட்டுவந்தவிண்ணப்பத்தை
வாசித்துக்கொண்டதனிற்சுலோகமாக
முப்பிரகாரம்மாறுசுலோகமிட்ட
மூர்த்திதான்வைராக்யமூர்த்திதானே.

தரு -- இராகம் - கல்யாணி - தாளம் -- ஆதி
பல்லவி
ஜகத்திலேவைராக்யமிகுந்த தேசிகருக்குநிகராரையா
அனுபல்லவி
யுகத்திலேகலிக்குப் புதுமையாக
வுண்டானவரெங்கள் கண்டாவதாரரே. (ஜக)
சரணங்கள்
குவலயத்தில் வெகுகோடியிலேயொரு
கோடியில்நூறுபங்கி லொருபங்கு
கவலைகொண்டுபரிபாலனஞ்செய்துவரு
கலையிருக்கிறதென்று மிகவுங்க
ருவமடைந்துவருந்தேசராஜர்களி
னுறுதிவெகுமதியெண் ணலையங்கு
அவலிலேயொருபிடியையமுதுசெய்த
தாங்குசேலரைக்குபேர னாக்கிவிளங்கு
மந்தத்தேவனையே வந்திப்பேனென்றாரே (ஜக)
உஞ்சவிருத்தியிலும் பொறுக்குநெற்றண்டுல
முதரத்தின்பசியைத் தீராதா
கொஞ்சமோதெருவிற்கந்தைபொறுக்கித்தைத்துக்
கொண்டுகுளிருந்தீர்த்தா லேறாதா
பஞ்சமென்னகாணுங்குளத்திலொருசேரங்கை
பாணிதாகத்தைத்தீர்க்க நேராதா
வஞ்சமேமிகுந்ததேசராஜர்களின்
வாசல்சென்றுவிபுதர்கெஞ்சுவதே போராதா
மருளாதீர்களென்று பொருளானதுரைத்தார்.
மனஞ்சலிகப்பிலாமற் கஷ்டப்பிரபுக்களுடை
வாசல்முகப்புத்திண்ணை தனிலொட்டி
யெனுமிருப்பதற்கோரஞ்சலிசெய்தேனென்று
யெங்குங்கீர்த்தியுள்ள துசங்கட்டிக்
கனம்பொருந்தும்நல்ல அஞ்சனமேனியாங்
கனகநிரபாயமென் பதையொட்டித்
தனஞ்சயன்றோதிலலங்காரமாகிய
தனமேரென்னிடத்திலிருக்கிறதென் றதயீடிச்
சப்தார்த்தமெழுதி வித்யாரண்யருக்கிட்டார் (ஜக)
தோயமேநிறைந்தவாரிதிமத்தியினிற்
ஜொலிக்கும்வடமுகாக் கினிபோலே
பாயுமுதரரவனலெழும்பியென்னவென்று
பரவினாலுமிந்தப் புவிமேலே
சாயங்காலத்தில்மருமல்லிகைப்புஷ்பவா
சந்தருநமது வாக்கினாலே
ஆயுமோர்திரணத்தைக்கூடராஜரிட
யாசிக்கிறதில்லையாக்குமேன் மேலே
வயிராக்கியமதுதானே சிலாக்கியமாகக்கொண்டார் (ஜக)
தேகமுள்ளவரைக்குமூடப்ரபுக்களைச்
சேவித்துச்சம்பா திக்குந்தனமே
சேகரமென்னவப்பைவிறகாய்க்கொண்டுதனஞ்
செயனையடக்குந்தனந் தந்தனமே
யோகமுள்ளதனஞ்செயனுக்குவர்த்தன
முயரவெடுத்த கோவனர்த்தனமே
யாகுஞ்சாதனமபாதனந்தேவர்கட்கு
மாராதனமானதனமே யென்றனமே
யாமத்திகிரியில் பிதாமகன்வைத்தானென்றார்சகல (ஜக)
விருத்தம்
செல்லுமுன்னால்தமதுபிதாதானேசம்பா
தித்ததொன்றுந்தனதுசம்பாத்தியமதொன்று
மில்லையுண்டியானைமலைச்சிகரமீதே
யிருப்பதுபிதாமகன்சம்பந்தமான
நல்லதனமென்றெழுதிவிடவேவித்தியா
ரணியரிவர்வைராக்யாதிசயங்கண்டு
மெல்லடியிற்பிரவணராயிருந்தாரென்றும்
விள்ளுவாரெவர்களுமீதுள்ளுவாரே.

புதன், 25 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப்
பிரகாசிகைக் கீர்த்தனை

தரு - இராகம் - புன்னாகவராளி - தாளம் - ரூபகம்
பல்லவி
தேசிகனே தூப்பில்வருந் திருவேங்கடத்தானே - எங்கள்
தெரிசனத்தைநிலைநிறுத்தச்செகத்தினில்வந்தானே.

அனுபல்லவி
பாசமதுபோலவரும் பரமதங்கள்பங்கஞ்செய்து
காசினியிலெங்குஞ்சொல்லுங்கவிதார்க்கிகசிங்கம்ஆன

சரணங்கள்
தாமரையடியிணைகட்கேற்ற
தண்டைசதங்கை சேர்த்தியுங்
கோமளமுழந்தாடிருத்தொடை
கொண்டவரையி னேர்த்தியுந்
தாமதின்மேலேபீதாம்பரத்தைத்
தகதகவெனச் சாத்தியும்
அபிராமமாயிசைந்தருளும்வேங்கட

நாயகர்தம்மைப் போற்றியுங்கண்ட (தேசி)
அலர்மேன்மங்கையுங்கண்டலங்காறை
யணிவியாக்கிரநகத் திறங்களும்
நலமிகுந்திடுங்கர்ணாசரியும்
நான்குதோளுங் கரங்களும்
பலவிதமானமணிகடகத்தின்
பாங்குந்தோள்வளை யுரங்களுஞ்
சொலுந்திருவாழிதிருச்சங்குகளுந்
துலங்குமனோ கரங்களுங்கண்ட (தேசி)
மந்தகாசத்துடன்கூடிய
வள்வதரமு நீள்தொடி
கந்தமுங்கிருபாகடாக்ஷங்களுங்
கபோலகங்களுங் கண்ணாடி
இந்துப்பிறையினெற்றியுமதி
விசைமுத்துநாடி மைவடிக்
குந்தளச்சுட்டிவரிசையுந்திருக்
கோரம்பச்சேவை யிப்படிக்கண்ட (தேசி)
மகரகுண்டலந்தொடுசெவிப்பூ
வாய்த்திடுமபி ஷேகமும்
வகைகண்டேதிருவடிமுதன்முடி
வரைக்குஞ்சேவிக்கும் யோகமும்

பகர்வர்மீளருமுடிதிருவடிப்
பரியந்தத்தின் வைபோகமும்
பகவனெம்பெருமானென்றேயனு
பவசனித்தப்ரதி யேகமுங்கண்ட (தேசி)

விருத்தம்
ததிபரத்துவஸவுலப்பியகாரணத்துவ
ஸ்வாமித்துவஸார்வஞ்ஞஸர்வஸக்தித்
வதிரக்ஷாவாத்ஸலியசௌசீல்யாதி
யனந்தகல்யாணகுணமிருக்கவேதம்
மதிவிளங்கிக்காருண்யமாகிநின்ற
மாகாகுணத்திலீடுகொண்டுவேங்கடாத்திரி
பதிதயாவிஷயமொருசதகஞ்செய்து
பரவினார்தூப்புனகர்வரவினாரே.

இதுவுமது

தசகமொருபத்தெனவேவிளங்குகின்ற
தயாசதகந்தலைக்கட்டப்பணிதல்கொண்டு
மிசைதிருவேங்கடமுடையான்கடாக்ஷஞ்செய்து
மெமதுகிருஷிபலன்பலித்ததென்றேயெட்டுத்

திசைபுகழ்வேதாந்தாசாரியராயிங்கே
தெரிசனப்பிரவர்த்தகராம்படியேசெய்தார்
அசையாதுதிருமலைமேல்வீற்றிருப்ப
ஆக்கினார்கலிதோஷம் போக்கினாரே.

தரு - இராகம் - ஆநந்தபைரவி - தாளம் - ஆதி
பல்லவி

பாதாரவிந்த வந்தனந்தானென்றன்
பலமேபுண்ணியபலமே.

அனுபல்லவி
தோதாரம்மனைப்பெற்ற மாதாவாகவிசைந்து
மேதானவதரி வேதாந்ததேசிகன் (பாதா)

சரணங்கள்

தடமலைமீதிலங்குள்ளவர்க்குப்பொரு ளோதி - எழுந்தருளியிருந்து
ஸர்வதந்திரஸ்வாதந்திரஸ்வாமிவெகு கியாதி
வடதிசைமதுரைசாளக்கிராம மாதி - யாந்திவ்யதேசங்களின்
வரிசைதரிசனமேதிருவுள்ளமாய் வந்தரீதி (பாதா)
கூடப்படித்தவித்தியாரணியருஞ்ஸன்னியாஸியாகித்தீர்த்த—யாத்திரைக்காகவே
கூடிப்புக்கராயப்பட்டணம்பெருமாள்கோயில்காத்த
நாடுக்கரசன்பண்ணினபிரமராக்ஷஸைதீரப்பார்த்த-- வித்தியாரணியரைவிட்டு
நடந்துபிருந்தாவனங்கோவர்த்தனஞ்செல்லவேற்ற (பாதா)
திருவாய்ப்பாடிமுதலாந்திவ்யதேசங்களுமயோத்தி -- திருப்பிருதிகண்டம்என்னுஞ்
சேர்ந்தகடிகைநகர்நைமிசாரண்யமதை யேத்தித்
திருத்துவாரகையின்மங்களாசாஸனஞ் சாத்திக் - காசிக்கெழுந்தருளி
ஜெயவிஷ்ணுபதிதன்னிலவகாசித்ததேசிகமூர்த்தி (பாதா)

விருத்தம்
திருப்புருஷோத்தமத்திலெழுந்தருளியங்கே
சேவித்துமேதீந்திரராம்பாஷ்யகாரர்
திருத்தியருள்கூர்மமுதலாந்தலங்கள்
சிங்காத்திரிபீடமஹோபிலமதெங்குங்
கருத்துடனேயெம்பெருமான்களைவணங்கிக்
கண்டுதிருவேங்கடத்தைத்தொழுதுபோந்து
திருக்கறுமவ்வெவ்வுளூரைப்பணிந்த
சீலர்தாம்தோதைபெற்றபாலர்தாமே.

இதுவுமது
பூசிகர்தான்றிருநின்றவூர்பணிந்து
புகழ்வல்லிக்கேணிநீர்மலைவிடந்தை
ஆசில்திருக்கடன்மல்லைதொழுதுகொண்டே
அணிபெரும்புதூரிலெதீந்திரரையேத்திக்
காசிமுதலாகியநன்னகரியெல்லாங்
கார்மேனியருளாளர்கச்சிக்கொவ்வாப்
பாசுரத்தையனுசந்தித்திசைந்தகாஞ்சிப்
பதிசென்றார்வேதாந்தநிதியென்றாரே.

ஞாயிறு, 22 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனை

 

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனை

தரு -இராகம் - சாவேரி - தாளம் - ஆதி

பல்லவி

தேசிகன்றிருவடி மறவாரே -- இந்த

செகத்தில்மறுபிறவிபிறவாரே.

அனுபல்லவி

காசினிபுகழ்வேங்க டாசலபதிதிருக்

கண்டாமணியவதாரங் கொண்டாரெங்கணிகமாந்த

(தேசி)

சரணங்கள்

பரிவாந்திருமலைமேற்

- கோயிலதனிற்சென்று

பலிபீடஞ்செண்பகப்பிரா காரம்

வரிசையுடன்வலஞ்செய்

- தாஸ்தானமண்டபத்தை

வணங்கித்தண்டுலங்கள்சம் பாரம்

திரவியசாலைகளச்சேவித்துமேவடக்குத்

திருமடப்பள்ளிமேவு வாரங்

கரசிகளானநாச்சி

- யாரைப்பணிந்துகொண்டே

யமுனைத்துறைவரையும் சேவித்தவேதசாரம் (தேசி )

ஸ்வாமிபுஷ்கரணியை

- வலமாகவந்துஜோதி

சொர்ணமண்டபத்தையுங் கடந்தார்

அவாறழகியமண

- வாளன்மண்டபத்துக்கே

அஞ்சலித்துஞ்செண்பக நடந்தார்

அவாமிகுந்துதெண்டன்

- சமர்ப்பித்துள்ளேயெழுந்

தருளிமடப்பள்ளிமேற் றொடர்ந்தார்

இவாறேநாச்சிமாரையுந்

- திருவடி பணிந்துகந்

தியாகசாலையைவந்தித் தெழுந்தாரன்புபடர்ந்தார் (தேசி )

அணிதிவ்யவிமானத்து

- நம்பெருமாளென்னு

மானந்தநிலயனைப் போற்றி

மணிமண்டபமுதலான

- மாஸ்தானமண்டப

வரிசைப்பிரகாரங்களை யேத்திப்

பணிகொண்டுங்கண்ணாலே

- யாரப்பருகியனு

பவித்துஞ்சேனாநாதனை வாழ்த்தி

மணியுருவாகிவந்தார்

- பின்னும்பாஷியகாரரை

வணங்கியவர்தம்மனு மதிபெற்றதிவ்யமூர்த்தி (தேசி)

வேங்கடாத்திரிதிருச்

- சேவடிதலைக்கொண்டு

வென்றுமாலையிட்டானிற் சென்றார்

தீங்கில்லாததெதிர்நிலைக்

- கண்ணாடிபோற்பெரிய

திருவடிநயினாரைப்பரவு கின்றார்

ஓங்குந்துவாரபாலர்

- சக்ரவர்த்தித் திருமக

னுடனிவர்களையெல்லாம்பணி கின்றார்

நீங்காதவன்பினாலே

- யானந்தவெள்ளந்தானே

நிறைந்தலர்மேன்மங்கை நாயகர்முன்னேநின்றார் (தேசி)

விருத்தம்

படியாய்க்கிடந்துன்பவளவாய்

காண்பேனேன்னும்படியேதானே

அடியேனென்றேகுலசேகரன்படி

யருகினின்றகலுகில்லேனென்

றிடுபாட்டையனுசந்தித்தெம்பெருமானே

யாராவமுதேயென்றே

அடிதொடுத்துமுடிவரைக்குந்

தரிசனஞ்செய்தார் வேதாந்தாசாரியர்தாமே

--