ஞாயிறு, 12 நவம்பர், 2006

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

ஸ்ரீதேசிகவைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
தரு--இராகம்--அசாவேரி--தாளம்--ஆதி
பல்லவி
நாராயணனெங்க ளாராவமுதனை
நாவேதுதிருண மேலே
அனுபல்லவி
சீரார்குடந்தையிற் செழிக்கும்கோமளவல்லி
சீரங்கர்தழுவிய காரங்கமேனி சாரங்கபாணி (நாரா)
சரணங்கள்நலமிகுந்ததன்மார்பிற் கவுத்துபமணிபோலே நாடுஞ்சகலஜீவ கோடிகளொருகாலே
கலுஷமதியார்கிங்க ராதிராச்சியமேலே
கடந்ததன்றிருவடி காணவேபரிவாலே
சொலுங்கரணகளேப ராதிகளைத்தொடுத்துத்
தொடர்ந்ததினாலன்னிய பரஞ்சேராமற்றடுத்து
உலகம் பிழைக்கவேண்டி வேதங்களைக்கொடுத்து
உரையறிந்திடவேநற் சாத்திரங்களுமடுத்து
நலவிதிகாசப்பிர மாணங்கள்செய் புராணங்கள்தந்த (நாரா) சநற்குமாராதிகளால் மோட்சசாத்திரங்களோதித்
தானேநாரதபரா சரசுகசவுகனாதி
கனத்தரிஷிகளிட்டாத் துமசம்பிரதாயரீதிகண்டு
நடத்தியின்னம் வியாஸமுனிவராதி
கனித்தமுனிவர்களுந் தாமாகவேபிறந்து
சாரீரகாதிகளைபிர வர்த்திசெய்தேதிறந்து
அனைத்துலகங்களிலும் யாவைகளுநிறைந்து
அணுவுக்கணுமலைக்கு மலையாகவேசிறந்து
மனத்திலெண்ணியதருள் வாசுதேவநங்கேசவதிரு (நாரா)
ஆளிட்டுப்பிரவர்த்திக்கை செயவும்வேண்டுமென்றன்றே
அன்னமச்சவயக்கிரீவ நரநாராயணரென்றே
நாளிட்டுவராகராம கீதாசாரியரென்றே
நல்லவவதாரங்க ளாலேதான்வெளிநின்றே
ஆளுந்திறமைசொல்லிப் புருஷார்த்தங்கள்விண்டு
அறிவிக்கச்சீவன்கள் தன்னையறிந்துகொண்டு
தாளுந்தடக்கைகளுங் கூப்பிப்பணிதல்கண்டு
தானேதரிசனத்தை வளர்த்திநின்றானே
பண்டுவாளுஞ்சங்கமுந்திரு வாழியாருயராழியாரரி. (நாரா)
விருத்தம்
கோதிலாத்தமிழாசாரியர்களின்னங்
குகதேவர்பாவருசிகபர்த்திமூவர்
மாதிரமேற்ப்ரவர்த்தகராம்டீகாசார்யர்
வாக்கியகாரருமெனவேபிரமநந்தி
ஓதுமிவர்களுக்குப்பின் யுகாரம்பத்தி
லுற்றநம்மாழ்வாரெனவேதூப்பிற்பிள்ளை
யாதிசம்ப்ரதாய பரிசுத்திதன்னி
லருள்செய்தார் வேதாந்தப்பொருள்செய்தாரே.

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

ஸ்ரீதேசிகவைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
தரு--இராகம்--அசாவேரி--தாளம்--ஆதி
பல்லவி
நாராயணனெங்க ளாராவமுதனை
நாவேதுதிருண மேலே
அனுபல்லவி
சீரார்குடந்தையிற் செழிக்கும்கோமளவல்லி
சீரங்கர்தழுவிய காரங்கமேனி சாரங்கபாணி (நாரா)
சரணங்கள்நலமிகுந்ததன்மார்பிற் கவுத்துபமணிபோலே நாடுஞ்சகலஜீவ கோடிகளொருகாலே
கலுஷமதியார்கிங்க ராதிராச்சியமேலே
கடந்ததன்றிருவடி காணவேபரிவாலே
சொலுங்கரணகளேப ராதிகளைத்தொடுத்துத்
தொடர்ந்ததினாலன்னிய பரஞ்சேராமற்றடுத்து
உலகம் பிழைக்கவேண்டி வேதங்களைக்கொடுத்து
உரையறிந்திடவேநற் சாத்திரங்களுமடுத்து
நலவிதிகாசப்பிர மாணங்கள்செய் புராணங்கள்தந்த (நாரா) சநற்குமாராதிகளால் மோட்சசாத்திரங்களோதித்
தானேநாரதபரா சரசுகசவுகனாதி
கனத்தரிஷிகளிட்டாத் துமசம்பிரதாயரீதிகண்டு
நடத்தியின்னம் வியாஸமுனிவராதி
கனித்தமுனிவர்களுந் தாமாகவேபிறந்து
சாரீரகாதிகளைபிர வர்த்திசெய்தேதிறந்து
அனைத்துலகங்களிலும் யாவைகளுநிறைந்து
அணுவுக்கணுமலைக்கு மலையாகவேசிறந்து
மனத்திலெண்ணியதருள் வாசுதேவநங்கேசவதிரு (நாரா)
ஆளிட்டுப்பிரவர்த்திக்கை செயவும்வேண்டுமென்றன்றே
அன்னமச்சவயக்கிரீவ நரநாராயணரென்றே
நாளிட்டுவராகராம கீதாசாரியரென்றே
நல்லவவதாரங்க ளாலேதான்வெளிநின்றே
ஆளுந்திறமைசொல்லிப் புருஷார்த்தங்கள்விண்டு
அறிவிக்கச்சீவன்கள் தன்னையறிந்துகொண்டு
தாளுந்தடக்கைகளுங் கூப்பிப்பணிதல்கண்டு
தானேதரிசனத்தை வளர்த்திநின்றானே
பண்டுவாளுஞ்சங்கமுந்திரு வாழியாருயராழியாரரி. (நாரா)
விருத்தம்
கோதிலாத்தமிழாசாரியர்களின்னங்
குகதேவர்பாவருசிகபர்த்திமூவர்
மாதிரமேற்ப்ரவர்த்தகராம்டீகாசார்யர்
வாக்கியகாரருமெனவேபிரமநந்தி
ஓதுமிவர்களுக்குப்பின் யுகாரம்பத்தி
லுற்றநம்மாழ்வாரெனவேதூப்பிற்பிள்ளை
யாதிசம்ப்ரதாய பரிசுத்திதன்னி
லருள்செய்தார் வேதாந்தப்பொருள்செய்தாரே.