வியாழன், 14 ஏப்ரல், 2011

HH on Thirukkudanthai Andavan's Thirunakshathram

பங்குனி புஷ்யம்! பாரோர் போற்றும் திவ்ய தினம்! உலகெலாம் உய்ய உத்தமோத்தமன் திருவவதாரம் செய்த திருநாள்! மன்பதையெல்லாம் மானுடராய் வாழ வழிகாட்டிய அற்புதர் நிலவுலகில் தோன்றிய நாள்! எட்ட இருந்து ஸேவிக்கின்ற சிஷ்ய வர்க்கங்களையெல்லாம் அன்பால் ஆதுரத்தால் ஆகர்ஷித்து அரவணைத்தவர் வந்து உதித்த அந்த நன்னாளை வழக்கம்போல் சென்னை ஆண்டவன் ஆச்ரமத்தில் வெகு சிறப்பாக ஸ்ரீமத் ஆண்டவன் மனம் மகிழ சிஷ்யர்கள் எல்லாரும் பெருந்திரளாகக் கூடியிருந்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆசார்யன் திருநக்ஷத்ரோத்ஸவம் நம் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனை எவ்வளவு உத்ஸாகப் படுத்தியுள்ளது  என்பதை இந்த வீடியோ காண்பிக்கும்!