சனி, 8 டிசம்பர், 2012

ரெடியா இருங்க!

கணிணியோ, மொபைலோ அதில் தட்டச்சிடுவது பலருக்கு ஒரு கஷ்டமான காரியமாகவே இருந்து வருகிறது. இந்திய மொழிகளில் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் தமிழ் என்றால், இன்னும் பலருக்கு ஒரே குழப்பம்தான். நேற்று குடுகுடுப்பைக்காரர் வந்து சொன்னார். எல்லாக் குழப்பமும் இன்னும் சில நாள்களில் போய்விடுமாம். 1,2,3 தெரிந்தால் மட்டும் போதுமாம். இந்திய மொழிகள் எதில் வேண்டுமானாலும், (கணிணியோ, மொபைலோ,) தட்டச்சிடலாமாம். சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். inscript keyboard என்று ஒன்று. அது பழகியிருந்தால் (அனேகமா ரொம்பப் பேர் பழகாதது) எந்த இந்திய மொழியிலும் சர்வ சாதாரணமாக தட்டச்சிடமுடியும். எல்லாவற்றுக்கும் விசைகள் ஒரே மாதிரி இருக்கும். அதேபோலவே வரப்போற புதிய முயற்சியிலும் 1 என்று அடித்தால் எல்லா இந்திய மொழிகளிலும் ஒரே எழுத்து வருகிற மாதிரி பண்ணியிருக்கிறார்களாம். சோதனைகளெல்லாம் முடிஞ்சு வெற்றியாம். காப்புரிமைக்காகக் காத்திருக்கிறார்களாம்! 2013 மார்ச்சுக்குள் வந்துவிடுமாம்.  செய்தியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் !
     இப்போ நாம எல்லாரும் காலரைத் தூக்கி விட்டுக்கலாம்! (அதென்னங்க! பெருமிதமா இருந்தா காலரைத் தூக்கிவிட்டுக்கறது! ) இப்படி ஒரு அருமையான மென் பொருளைத் தயாரித்திருப்பது நம்ம தமிழ்நாட்டுக்காரர். தென்மாவட்டங்கள் ஒன்றில் இருக்கிறார். இவர் கம்ப்யூட்டர் துறையில் எந்தப் பட்டமும் வாங்காதவர். படித்ததோ வேறு பாடம்!

புதன், 5 டிசம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

                            ……………..காரிகையார்
சொற்பாங்கியர் தமக்கும் சொற்றிடேன்
கற்பாங் கியல்தரும்என் காமவிடாய் தீராத
சொற்பாங் கியர்தமக்கும் சொற்றிடேன் – நற்பாங்கின்          .45.

பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன்
ஆங்குயிர்க்கும் அன்னைதனக்(கு) அல்லாற்பின் தாய்க்குதவாப்
பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன் – தேங்குயற்சீர்ப்           .46.

என்னெஞ்சுக்கு இன்னல் எடுத்துரைப்பேன்
பொன்னெஞ் சுவக்கும் புயல்பாற் பொஒருந்தியுற
என்னெஞ்சுக்(கு) இன்னல் எடுத்துரைப்பேன் – துன்னும்சீர்         .47.

மாலிலியாய் நின்று வருந்துவேன்
மாலிலியாய்நின்று வருந்துவன் மன்மதன் தேர்க்
காலிலியாய் நிற்போற்கென் கட்டுரைப்பேன் –  வேலைஎன        .48.

கள்ளருந்து வார்க்கு என் கழறுகேன்
விள்ளருந்துன் புற்று மெலிகுவேன் வேரிமலர்க்
கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – தெள்ளறநீர்             .49.

ஓடும் கயல்மீன் உறாதனவேல்
ஓடுங் கயல்மீன் உறாதனவேற் உள்ளமிக
வாடுங் குருகினுக்கெவ் வாறுரைப்பேன் – பீடுபெறும்      .50.

45. காரிகையார் – பெண்களின்; கற்பாங்கியல் தரும் –கல்லைப் போன்ற கடினத்தன்மை கொண்ட; என் காமவிடாய் – என் விரகதாபம், தீராத – தீர்க்காத, சொற்பாங்கியர் தமக்கும் –இன் சொற்றோழியரிடமும், சொற்றிடேன் – கூறவில்லை, நற்பாங்கின் – நல்ல இணக்கம் உடைய.

46. ஆங்குயிர்க்கும் – அங்கே என் நிலை கண்டு பெருமூச்செறியும், அன்னைதனக்கு –தாய்க்கும், அல்லால் பின் – அல்லாது, தாய்க்குதவா – தன்னை முட்டை இட்ட தாய்க்கு உதவாமல் காகக்கூட்டில் பிறக்கும், பூங்குயிற்கும் – அழகிய கோகிலத்துக்கும், ஆசை – என் ஆவலை, புகன்றிடேன் – கூறவில்லை, தேங்குழற்சீர் – இனிய கூந்தல் சிறப்புடைய.

47. பொன் – திருமகள், நெஞ்சுவக்கும் – மனம் மகிழும், புயல்பால் – மேக வண்ணனிடம், பொருந்தியுற – சேர்ந்தடைய, என் நெஞ்சுக்கு – என் மனத்துக்கு ஏற்பட்ட, இன்னல் – தாபம், எடுத்துரைப்பேன் –எடுத்துக் கூறுவேன், துன்னும் சீர் – சிறப்பமைந்த.

48. மாலிலியாய் நின்று – மயக்கமுடையவளாயிருந்து, வருந்துவேன் – துன்புறுவேன், மன்மதன் தேர் –மன்மதன் இரதமாம், காலிலியாய் – காலற்ற தென்றற் காற்றாக, நிற்போற்கென் கட்டுரைப்பேன் – நிற்பவருக்கு (வருந்தும் தலைவருக்கு) என்ன கூறுவேன், வேலை என – கடல் போல.

49. விள்ளரும் – கூற அரிய, துன்புற்று – இடரடைந்து, மெலிகுவேன் – வாடுவேன், வேரி மலர்க் கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – பூந்தேன் நுகரும் வண்டுகளுக்கு என்ன கூறுவேன், தெள்ளற நீர் – தெளிவற்ற நீரில்

50. ஓடும் கயல் மீன் – விரைந்து செல்லும் மீன், உறாதனவேல் –கிடைக்காவிடில், உள்ளம் மிகவாடும் குருகினுக்கு – மனம் மிகுதியாக வாட்டமுறும் கொக்கினுக்கு, எவ்வாறு உரைப்பேன் – எவ்விதம் கூறுவேன் – எவ்விதம் கூறுவேன், பீடு பெறும் – புகழ் பெறும்.

திங்கள், 3 டிசம்பர், 2012

Guru Paramparai Vaibhavam

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி இந்த வாரமும் ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் திவ்ய வைபவங்களைத் தொடர்கிறார். தரவிறக்கிக் கேட்டு மகிழ
http://www.mediafire.com/?uf62tp6lezq63kk

நேரடியாகக் கேட்டு மகிழ