வெள்ளி, 2 ஏப்ரல், 2010

பங்குனி தேரும், தீர்த்தவாரியும்!

சேதுக்கரையில் தீர்த்தவாரியில் சில காட்சிகள்

 

DSCN1010வேத பாராயண கோஷ்டி --- தேரன்றும் தீர்த்தவாரியன்றும் வந்திருந்த சென்னை சேலையூர் ஸ்ரீ அஹோபில மட வேத பாடசாலை வித்யார்த்திகள்

 

DSCN1073

 

தீர்த்தவாரி திருமஞ்சனங்களுக்குப் பின் ஸ்ரீஜகன்னாதப் பெருமாள், ஸ்ரீ பட்டாபிராமன், சக்கரத்தாழ்வார்.

 

 

 

 

 

வீடியோ ஒருவேளை திறக்க மறுத்தால் இங்கே பார்க்கலாம்

தேர் வீடியோவில் கொட்டு சத்தம் கேட்டீர்களோ? அது பறைக் கொட்டு என எங்களால் அழைக்கப்படுகின்ற, இன்று நம்மால் ஒதுக்கி வைக்கப் படுகின்ற தாழ்ந்த குடி மக்கள் இசைக்கின்ற இசை. அறியாமையால் நாம்தான் அவர்களைத் தள்ளி வைக்கிறோம். ஆனால் எங்கள் பெருமாளோ அவர்களுக்கு மிக உயர்ந்த கௌரவத்தை அளித்திருக்கிறார் தெரியுமோ? ஆம். இந்தப் பறைக் கொட்டு இல்லையென்றால் அவர் தேர் நகராது. பக்கத்து கிராமத்திலிருந்து இவர்கள் வந்து இசைக்க ஆரம்பித்த பிறகே வடம் பிடிப்போம்.

அப்புறம் இன்னொன்றையும் கவனியுங்கள். தேர் இழுத்த மக்கள் மாலைகளோ, பரிவட்டங்களோ எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வேண்டுவதெல்லாம், பெற்று மகிழ்ச்சி அடைவதெல்லாம் தேர் நிலைக்கு வந்தவுடன் பெருமாளிடமிருந்து தெளிக்கப் படும் தீர்த்தம் ஒன்றுதான். பெற்றவுடன் அவர்கள் அடையும் ஆனந்தத்தை கவனியுங்கள்.

அவ்வப்போது வாசு வாசு என்று குரல் கேட்கும் போது கட்டம் போட்ட சட்டையுடன் வாலிபர் ஒருவர் ஆடிக் கொண்டிருக்கிறாரே அவர் இந்த தேருக்காக வருடாவருடம் சிங்கப்பூரிலிருந்து வந்து விடுவார். எங்களூர் அர்ச்சகர் பிள்ளைதான். அங்கு பணி.

 

தீர்த்தவாரி முடிந்து சேதுக்கரை அனுமன் ஸந்நிதியில் நடந்த திருமஞ்ச்சனத்தின் நிறைவுப் பகுதி. வந்திருந்த ஸேவார்த்தி எடுத்த வீடியோ இங்கே!

மீண்டும் ஏப்ரல் 21ல் பட்டாபிராமனுக்கு ப்ரும்மோத்ஸவம் தொடங்குகிறது. இதே வாகனங்கள்! இதே வைபவங்கள்தான்! சந்திப்போம்!

வியாழன், 1 ஏப்ரல், 2010

ஓடியது தேர்

அடியேனுக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கோவில் விழாக்களில் தேரோட்டம் என்று சொல்வது சரிதானா? அனேகமாக எல்லா ஊர் தேர்களும் எத்தனை பேர் கூடி இழுத்தாலும் அசைந்து அசைந்து, இன்ச் இன்சாகத் தானே நகர்கிறது? பின் எப்படி அதை ஓட்டம் என்று அழைப்பது என்று? அதற்கு இன்று விடை கிடைத்தது. அப்புறம் பெருமாளின் சக்தியை இல்லை இல்லை அவரது கருணையை இரக்கத்தை அனேகமாக இன்று தேர் இழுத்த, தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அனைவரும் உணர முடிந்ததும் 9ம் நாளாகிய இன்றைய தேர்த் திருநாளின் சிறப்பாகும்.

கடந்த 15 நாட்களாக மிக உக்கிரமான வெய்யிலால் வாடிக் கொண்டிருந்தோம். காலை 6 மணிக்கே ஏதோ 11 மணி ஆனது போல் சூரியன் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். தேருக்கு முதல் நாள் மாலை 5மணி அளவில் பெருமாள் வேட்டைக்குக் கிளம்பும்போது தரையில் கால் வைக்க முடியவில்லை. பொழுதெல்லாம் அடித்த வெய்யிலால் கால் தரையில் ஒட்டிக் கொள்கிற அளவு சூடு. மறுநாள் தேர் எப்படி ஜனங்கள் இழுக்கப் போகிறார்களோ என்று எல்லாருக்கும் கவலை. அதிலும் தேரன்று பங்குனி உத்திரம். அருகிலுள்ள இராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் விதவிதமாய்க் காவடிகள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளும் மிகப் பெரிய திருவிழா. வழக்கமாய்த் தேர் இழுக்க வரும் கிராமத்து ஜனங்கள் எல்லாம் அங்கே சென்று விடுவர். அந்தக் கவலை வேறு.

  தேரோட்டத்தன்று காலை 5 மணிக்கெல்லாம் பெருமாள் தேரில் எழுந்தருளினார். சூரியோதயம் ஆயிற்றோ என்று தெரியாமல் காலையில் ஒரே மேக மூட்டம். மிக மந்தாரமாய் க்ளைமேட். ஒருவேளை கோடி சூரியப் பிரகாச வண்ணன் தேரில் அமர்ந்ததால் சூரியன் வெட்கி ஒளிந்து கொண்டானோ தெரியவில்லை. காலை 9.55க்கெல்லாம் இராமநாதபுரம் சமஸ்தானம் திவான் வடம் தொட்டு தேர் இழுக்க ஆரம்பித்து வைத்தார். கிராமத்து மக்கள் சில பேர்களே வந்திருந்த நிலையில், திடீரென்று இரண்டு பஸ்களில் டூரிஸ்டுகள் (எல்லாரும் ஆண்கள்) வந்திறங்கி அவர்களும் வடம் பிடிக்க, வழக்கமாக அசைந்து அசைந்து 10 அடிக்கு ஒரு தரம் நின்று நின்று நகரும் தேர் அன்று உண்மையாகவே ஓடியது. வடம் பிடித்ததிலிருந்து நிலை வந்து சேரும் வரை ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான். எங்கள் ஊரில் சில மூலைகள் உண்டு. வாடிக்கையாக அந்த இடங்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு இழுக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு அப்புறம் மாலையில் ஆட்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்து சிரமப் பட்டு நகர்த்தி இழுத்து வருவது உண்டு. இந்த வருடம் ஒரு சிக்கலும் இல்லை. தேரை ஆங்கிலத்தில் கார் (car) என்போமில்லையா? எப்படி அந்தக் கார் எளிதாக இயங்குமோ அதேபோல் இன்றைய தேரும் ஓடியது.




    எங்களூரில், பங்குனி தேர் நிலைக்கு வர சுமார் 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். சித்திரைத் தேர் இராமனுக்கு! அதே வீதிகள்! அதே தேர்! அதிக மக்கள் இழுப்பதற்கு! ஆனாலும் மாலை 5 மணி அளவில் கூட திலைக்கு வரமாட்டார். பல வருடங்களில் மறுநாள் வந்ததும் உண்டு.

  இந்த வருடமோ! ஆந்திர மக்களின் அபார பாட்டு ஆட்டங்களினால் மிக மகிழ்ந்திருந்தோரோ என்னவோ, சரித்திரத்தில் முதல் முறையாக 40 நிமிடங்களில் நிலைக்குப் பெருமாள் வந்து விட்டார்.   அது மட்டுமில்லை. அதுவரை ஒளிந்து கொண்டிருந்த கதிரவன் அடுத்த ஓரிரு நிமிடங்களில் வெளிப்பட்டு வறுக்கத் தொடங்கினான்.

தேர் இழுக்கும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் செய்த பெருமாளின் கருணையை ஒவ்வொருவரும் உணர வைத்த சம்பவம் அது.

சரி அப்பா! பெருமாள் கருணை மிக்கவர் என்றால் முந்தைய வருடங்களில் ஏன் கஷ்டப் படுத்தினார் என்று கேட்கிறீர்களா? முந்தைய வருடங்களைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறேன். அங்கு போய்ப் பார்த்தால், படித்தால் உங்களுக்கே தெரியும். வீதியில் வந்து ரக்ஷிக்க வருகிறவனை எட்டிப் பார்க்கக் கூட உள்ளூர் மக்களுக்கு மனம் இல்லாததை! ஆந்திர மக்கள் வந்து இங்கேயும் ஒரு திருப்பதி போல் ஆக்கி அவனை மகிழ வைத்த காரணம் இந்த வருடம் அவன் கருணை மழை பொழிந்தது.

  மறுநாள் தீர்த்தவாரிக்கு சிறிய திருவடி (அனுமன்) மீது இராமன் உடன் வர, பெரிய திருவடி(கருடன்) மீது பெருமாள் ஆரோஹணித்து சேதுக்கரை எழுந்தருளினார். அங்கு ஆந்திர மக்களையே வியக்க வைக்கும் வண்ணம் ஹைதராபாதிலிருந்து வந்த ஒரு மார்வாரி குடும்பம் பெருமாள்,இராமனுக்கு முன் ஆடிய ஆட்டங்கள் வர்ணிக்க இயலாதவை. கையிலே அடியேன் காமரா இல்லை. அதைப் பதிய முடியாத வருத்தம் உண்டு. கடந்த 25 ஆண்டுகளாக தீர்த்தவாரியில் சக்கரத்தாழ்வாரை சேதுவில் எழுந்தருளப் பண்ணுகிற பாக்யம் கிடைப்பதால், கையில் காமரா கொண்டு செல்லவில்லை.

பெருமாள், இராமன் சேதுவைக் கடாக்ஷிக்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி புருஷஸுக்த, அஹமர்ஷண கோஷங்களுடன் சேதுவில் நடந்தது. அதன்பின் சேதுக்கரை ஸ்ரீஜெயவீர அனுமான் ஸந்நிதி மண்டபத்தில் பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் மூவருக்கும் ஏக சிம்மாசனத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இம்மாதிரி ஒரே நேரத்தில் ஒரே ஆசனத்தில் இரு பெருமாள்களுக்கு திருமஞ்சனம் வேறு எங்கும் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.

மாலையில் திருப்புல்லாணி திரும்பி, இராமன் மட்டும் உள்ளே ஏளிவிட, பெருமாளுக்கு கதவு அடைக்கப்பட்டு, அதன்பின் பிரளய கலகம் வாசித்து, ஆழ்வார் சமரசம் செய்துவைக்க கதவு திறக்க தாயார் அனுமதி கொடுத்து பெருமாள் ஆஸ்தானம் அடைந்தார். இரவிலே சந்திரப்ரபை வாகனம். ஆனால் அன்று ஆலய ஊழியர்களுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும். அதனால் கடந்த பல வருடங்களாக அந்த வாகனத்தை நாங்கள் பார்க்கவேயில்லை. அதற்குப் பதில் சப்பரம்தான்.

31ம் தேதி விடாயத்தி உத்ஸவம். பெருமாள், உபயநாச்சிமாருடன், ஸ்ரீ வானமாமலை மடத்துக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி, இரவில் சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடுக்குப் பின் ஆஸ்தானம் அடைந்ததுடன் இந்த பங்குனி திருநாள் நிறைவு பெற்றது.

வீடியோக்களை இணைக்கும்போது ஏதோ சிக்கல் ஏற்படுகிறது. தனியே பதிவிடுகிறேன்.

திங்கள், 29 மார்ச், 2010

வேட்டைக்குப் போனார், கள்ளனைப் பிடித்தார் 8ம் நாளிலே

எட்டாம் நாள் வேட்டைக்குப் போனதையும், இரவில் திருமங்கையாழ்வார் நாரண நாமம் கண்டு கொண்டதையும் இங்கு  பார்த்துக் கொண்டிருங்கள்.



  தேரோட்டம் ட்ரெயிலரு ம் இருக்கிறது.



 இந்தோ வந்து விடுகிறேன்.

எட்டாம் நாள்

எட்டாம் நாள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதற்கு முன் திருக்கல்யாண நிகழ்ச்சிகளின் ஒரு சிறு வீடியோவை இங்கு பார்த்து விட்டு வாருங்களேன்P1010495
P1010494 
ந்திராவிலிருந்து வந்திருக்கும் ஸேவார்த்திகள் 7ம் நாள் காலை ஆண்டவன் ஆச்ரமத்தில் பிரபந்தம் ஸேவிக்கிறார்கள்.  இங்கு வந்து ஒருநாள்கூட ஸேவிக்கவில்லையே என்ற அவர்கள் குறை ஓரளவு நீங்கியது.
மிக்க நவரத்தினமணி தங்கத் தகட்டின்மேல்
          விளங்கவோ ரமிச மிட்டு
விளங்கு பொற்கல்லணை திருத்தி முத்துக்
       குச்சு சிறு காதுபுற மசையவே
பக்கம் வச்சிரமணிப் பாவடி பதித்து வெண்
     பாற்றிரைக் கவரி நேற்றிப்
பளபளென வொளிர் பற்பராக முகவேட்டிலகு
     பரிபுர கிண்கிணி முழங்கச்
சக்கிர வானக்கிரிக் கப்புறந் தாவியே
    தமனியக் குன்றி லேறித்
தளதளெனும் வெள்ளியங்கிரி யிலொரு சாரி
    போய்ச் சந்திரசூரிய ரையிடறித்
திக்கயத்துச்சி முழியப் பாய்ந்து சூழ்ந்தன்பர்
    சிந்தையி லுலாவி நிற்குஞ்
செகநாதர் தெய்வச்சிலைக் கடவுளே றிவரும்
அழகான குதிரை வாகனம் இது. பல ஆண்டுகள் வரை இP1010511து சுழலும் குதிரையாக இருந்திருக்கிறது. பின்னாளில் வந்த அர்ச்சகர்கள் சுழலும் குதிரை வாகனத்தில் கைங்கர்யம் செய்ய சிரமப்பட்டதால் அது இப்போது சுழலா குதிரை. இந்தக் குதிரை வாகனத்தில் வீதி வலம் வந்து திருமங்கையாரை நாரண நாமம் உணர்த்த வைத்து அதன் பின் தேர் கடாக்ஷம் ஆகி ஆஸ்தானம் திரும்பினார்.
தேர் கடாக்ஷக் காட்சி இங்கே.
P1010518
 




இன்று நடந்த பாரிவேட்டை, திருமங்கையார் வைபவங்கள், இன்றைய தேரோட்டம் ஆகியவை அடுத்த பதிவில் வீடியோக்களாக வரும். நேற்று போன கரண்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் அரை கரண்ட் என்று நாங்கள் சொல்லும் low voltageல். வாழ்க ஆற்காட்டார்! சென்னைக்கு மட்டும் தடையில்லா மின்சாரம். அங்கு மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். நாங்களெல்லாம் அந்தக் காலம் போல் 7 மணிக்கெல்லாம் உறங்கப் போய்விட வேண்டும் போல!

ஞாயிறு, 28 மார்ச், 2010

அன்னமாய் நூல் பயின்றார் ஏறி வரும் அன்ன வாகனம்

இன்று 7ம் திருநாள். நேற்றுதானே திருக்கல்யாணம் ஆயிற்று! அதனால் தினமும் காலையில் நடக்கும் புறப்பாட்டுக்கு இன்று ஒரு நாள் ரெஸ்ட்.

மாலையில் சூர்ணோத்ஸவம். ஸ்ரீதேவி பூதேவிகளுடன் பெருமாள் திருவீதிப் புறப்பாடு. அதன் பின்னே ஒரு அற்புதமான திருமஞ்சனம். பாஷ்யம் ஐயங்கார் என்று ஒரு ப்ருஹஸ்பதி இந்த ஊரில் இருந்தார். அவரது மண்டகப்படி. அவருக்குப் பின் அவர்கள் குடும்பத்தார் நடத்துவது. இந்த வருடம் 55வது ஆண்டு மண்டகப்படி. திருமஞ்சனம் என்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மெச்சும்படி அமைவது இந்த ஒரு நாள். மற்ற எல்லா நாட்களிலும் பெருமாளுக்கு மட்டுமே திருமஞ்சனம். 7ம் திருநாள் மட்டுமே உபய நாச்சிமாருடன் திருமஞ்சனம். இப்போது 2003க்குப் பிறகு விடாயத்தி உத்ஸவத்தில் பெருமாள் நாச்சிமாருடன் ஸ்ரீவானமாமலை மடம் எழுந்தருளி அங்கும் திருமஞ்சனம் நடக்கிறது. 4ம் திருநாள் திருமஞ்சனத்தைப் போலவே இதையும் உலகுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால், காமரா, Zi6 இரண்டுமே சார்ஜ் இல்லாமல் ஏமாற்றமாகி விட்டது. பெருமாளே என நினைத்தால் ஜெயா டிவி குழு வந்து நிற்கிறது. ஒரே இன்ப அதிர்ச்சி. அவர்களுடைய உயர் ரக காமராவில் பதிவாகியுள்ள இந்த திருமஞ்சனம், சூர்ணோத்ஸவம், பின் நடந்த திருவீதிப் புறப்பாடு எல்லாம் அனேகமாக இந்த வாரத்துக்குள்ளேயே ஒளிபரப்பாகும் என்று சொல்கிறார்கள். தவறாமல் பாருங்கள்.

ஆக மாலையில் சூர்ணோத்ஸவப் புறப்பாடு, அதன்பின் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் திருமஞ்சனம், அதன்பின் சாயரக்ஷை பூஜைகள், அதன்பின் சாத்துமுறை கோஷ்டி அப்புறம் திருவீதிப் புறப்பாடு என்பதாலே 7ம் திருநாள் மண்டகப்படி எப்போதுமே அர்த்த ராத்திரியில்தான். இப்போதாவது 11 மணிக்குள் புறப்பாடு ஆகிவிடுகிறது. அடியேன் சிறுவனாயிருக்கும் போதெல்லாம் இரவு 2மணிக்கு மேல்தான் புறப்பாடு ஆகும். நாங்கள் தூங்கி வழிவோம். ஆனால் பாவம் அந்த வாகனத்துக்கு நாங்கள் வைத்த பெயர் தூங்குமூஞ்சி வாகனம் என்று. அது என்ன வாகனம்? அதுதான் தலைப்பிலேயே சொல்லிவிட்டேனே!அது அம்சமான ஹம்ஸ வாகனம்.

தாவு தனிமத்தள முருகு தவில்பேரிகை
      சமுத்திரம் போல் முழங்கச்
சங்கீத ராகங்கள் கந்தருவர் பாடவே
      சாமரை யிரட்ட வெண்டிசைக்
காவலரு, நாவலரு, மூவுலக மாதருங்
     கைகுவித் தேத்தி வாழ்த்தக்
கொடியசுராதி யரிராக் கதர் கணங்கள்கெற்
    பங் கலங்கத் துலங்கு
பூவலருமான சப்பொய் கையுட் பழகிவரு
     புண்டரீகத் தயன் வரும்
பொற்சிறைச் செங்காற் பசிய கூட்டன்ன
    மொடு புணர்ச்சிபழகுதல் மருவிவாழ்
சேவலன்னத்தின் மேல் வீற்றிருந் தாயிரந்
    தினகரோ தய மென்னவே
தெரிதமிழ்ப் புல்லாணிவேதி வருசெக நாதா
    தெய்வச் சிலைக் கடவுளே.

P1010508

என்று வாகன மாலை போற்றும் அருமையான அன்ன வாகனத்தின் மீது அன்னமாய் நூல் பயின்றாரான P1010510பெருமாள் திரு வீதி கடாக்ஷித்தார்.

 

 

 

 

ஏழாம் நாள் உத்ஸவங்களை வலையேற்றிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எட்டாம் நாளில் குதிரை ஏறி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறார். அன்றே ஸ்ரீதேசிகன் பாடினாரே , திருச்சின்னமாலையில், யானை பரி தேரின்மீது அழகர் வந்தார் என்று ,

P1010511

அவ்வளவு சௌந்தர்யமாய் வீதி வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நேரத்தில் கள்ளன் பிடிபடப் போகிறார். P1010514 பிடிபட்டு வாடி வருந்தி நாரணா எனும் நலம் தரும் நாமத்தைக் கண்டுகொள்ளப் போகிறார். அங்கு போக வேண்டும். பட்டயம் வாசிக்கின்றவர் மிக மெல்லிய குரலில் வாசிப்பதைக் கேட்க வேண்டும். அதன்பின் பெருமாள் நாளைய தினத்துக்காக திருத்தேரைக் கடாக்ஷிப்பதைக் கண்டு ஆனந்தப் பட வேண்டும்.P1010516 எனவே ஒரு சின்ன பிரேக் . மீண்டும் ஏழாம் நாளில் மேலும் சிலவற்றையும், எட்டாம் நாளில் பாக்கியையும் பகிர்ந்து கொள்ள இன்றே வருவேன். (KRS ! I am sorry. கடைசி வரை நீங்கள் கேட்ட பட்டயத்தைப் பெறவே முடியவில்லை)