செவ்வாய், 30 டிசம்பர், 2014

Madal tele upanyasam dated 29-12-2014

The 32nd tele-upanyasam on Madal delivered by Natteri Sri Rajagopalacharyar swami on 29-12-2014 is availale at

http://www.mediafire.com/listen/4qa59l04jydc92a/032_Madal_(29-12-2014).mp3

திங்கள், 22 டிசம்பர், 2014

Madal tele-upanyasam dated 22-12-2014

 

31st tele-upanyasam

on  Thirumangai azhwar’s “madal”

delivered by

Natteri Sri Rajagopalacharyar swami

is available at

http://www.mediafire.com/listen/gad5ojgmy1rnlrh/031_Madal_(22-12-2014).mp3

திங்கள், 15 டிசம்பர், 2014

Madal tele-upanyasam dated 15-12-2014

The 30th tele-upanyasam on Madal by Sri Natteri rajagopalachariar swamy is “Krishna anubhavam” which simply makes our hearts throb with joy. For a few more weeks this anubhavam will continue . Today’s upanyasam is available to be downloaded or directly listened to at

http://www.mediafire.com/listen/anen5aoe6dr64zi/030_madal_(15-12-2014).mp3

திங்கள், 8 டிசம்பர், 2014

ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்ய ஸ்வாமியின் 29ஆவது "சிறிய திருமடல்"(08-12-2014) டெலி உபந்யாஸத்தைக் கேட்டு அனுபவிக்க/ சேமித்துக்கொள்ள

புதன், 3 டிசம்பர், 2014

Madal teleupanyasam on 01-12-2014

வைஷ்ணவ பக்திதான் உயர்ந்தது என்று சொல்வார்கள். வைஷ்ணவ பக்தி கிடைக்காது, வைஷ்ணவ பக்தியே விசேஷம், வைஷ்ணவ பக்தியைக் கொண்டாடுவார்கள், வைஷ்ணவ பக்திகிடைத்தால் சந்தோஷப்படுவார்கள். எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுவார்கள் என்பதையெல்லாம் விவரிக்கும் மடல் பாசுரங்களை இன்று தனது 28ஆவது டெலி உபந்யாஸத்தில் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி விவரிப்பதை அனுபவிக்க

http://www.mediafire.com/listen/u8zm56wgoczuy7w/028_Madal_(01-12-2014).mp3

செவ்வாய், 25 நவம்பர், 2014

Thirumadal tele-upanyasam dated 24-11-2014

The 27th tele-upanyasam on "thirumadal" delivered by Sri Natteri Rajagopalachariyar swami is available here either to download or directly listened to.

http://www.mediafire.com/listen/mhvxno1k08dmtck/027_Madal_(24-11-2014).mp3

செவ்வாய், 18 நவம்பர், 2014

Madal upanyasam on 17-11-2014

The 26th tele-upanyasam on “Madal” by Natteri Sri Rajagopalachariyar swami delivered on 17-11-2014 is available for download at

http://www.mediafire.com/listen/3ccl3anhfza4cha/026_Madal_(17-11-2014).mp3

திங்கள், 10 நவம்பர், 2014

10-11-2014 (இன்று) நடந்த திருமடல் டெலி உபந்யாஸம்

இன்று (10-11-2014) நாட்டேரி  ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி நிகழ்த்திய “திருமடல்” டெலி உபந்யாஸம் (25வது திருமடல் உபந்யாஸம்) கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/o40z93igpjv8pii/025_Madal_(10-11-2014).mp3

திங்கள், 3 நவம்பர், 2014

Madal tele upanyasam on 03-11-2014

நாட்டேரி ஸ்வாமி இன்று (03---11---2014) நடத்திய சிறிய திருமடல் டெலி உபந்யாஸத்தைக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/e2va3gukkn6uoaj/024_Madal_(03-11-2014).mp3

திங்கள், 27 அக்டோபர், 2014

மடல் உபந்யாஸம் (26-10-2014)

26-10-2014 அன்று நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய “மடல்” டெலி உபந்யாஸம் கேட்டு மகிழ (இது ஒரு நரஸிம்மானுபவம்)

http://www.mediafire.com/listen/a13f0cxcpye8m1w/023_Madal_(26-10-2014).mp3

திங்கள், 20 அக்டோபர், 2014

மடல் டெலி உபந்யாஸங்கள்

சென்ற வாரத்தைப் போலவே இந்த வாரமும் நாட்டேரி ஸ்வாமியின் இரண்டு வார டெலி உபந்யாஸங்கள் இங்கே!  தொடர்ந்து ரசித்துவரும் அன்பர்கள் வழக்கம்போல் அடியேனைப் பொறுத்துக் கொள்ள வேணும்.

13-10-2014 அன்று நடந்த 21வது சிறிய திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/xcbo4ihn418as52/021_Madal_(13-10-2014).mp3 

20-10-2014 அன்று நடந்த 22வது சிறிய திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/9878qyqnlyyqsqa/022_Madal_(20-10-2014).mp3

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

Natteri swamy’s tele-upanyasams on “Madal”

ஸ்வாமி தேசிகனின் திருநக்ஷத்ர உத்ஸவ காரியங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும், அது முடிந்தபின் ஒரு வாரத்துக்கும் மேலாக திருப்புல்லாணி தொலைபேசி நிலையம் செயலிழந்ததால் இணைய இணைப்பு கிடைக்காததாலும், கடந்த இரு வாரங்களாக நடந்த நாட்டேரி ஸ்வாமியின் திருமடல் டெலி உபந்யாஸங்களை உரிய நேரத்தில் இங்கு இடமுடியவில்லை. மிகுந்த ஆர்வத்துடன் அந்த உபந்யாஸங்களைக் கேட்டு ரசித்து வருபவர்கள் அடியேனை க்ஷமிக்க வேணும்.

29 -- 09 – 2014 அன்று நடந்த உபந்யாஸம்  இங்கு இருக்கிறது.

http://www.mediafire.com/listen/40642b07bbqyp46/019_Madal_(29-09-2014).mp3

06 – 10 – 2014 அன்று நடந்த உபந்யாஸம் இங்கு இருக்கிறது.

http://www.mediafire.com/listen/sdvj1csv2oi7841/020_Madal_(06-10-2014).mp3

திங்கள், 22 செப்டம்பர், 2014

siRiya thirumadal Tele-upanyasam on 22-09-2014

Tele-upanyasam on “siRiya thirumadal” by Natteri Sri Rajagopalachariar swami held on 22-09-2014 can be downloaded from/directly listened to

http://www.mediafire.com/listen/t1rjewa2pt6660d/018_Madal_(22-09-2014).mp3

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

16th and 17th Tele-upanyasams on siRiya thirumadal

Those who regularly follow the tele-upanyasams on Madal by Natteri Sri Rajagopalacharyar swami may kindly excuse me for the failure to update last two upanyasams in time. Due to some other priorities, the delay happened.

The tele-upanyasam on 08-09-2014 is available here

http://www.mediafire.com/listen/1f15h279ggg3ys3/016_Madal__(08-09-2014).mp3

The tele-upanyasam on 15-09-2014 is available here

http://www.mediafire.com/listen/t8l66as6c2wlbiq/017_Madal_(15-09-2014).mp3

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

siRiya thirumadal tele-upanyasam dated 01-09-2014

15th Tele-upanyasam on “siRiya thirumadal” delivered by Natteri Sri Rajagopalacharyar swami on 01-09-2014 is now available at

http://www.mediafire.com/listen/k0tmbd7aek1exqd/015_madal_(01-09-2014).mp3

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

Madal tele-upanyasam on 25-08-2014

The tele-upanyasam on “siRiya thirumadal” delivered by Natteri Sri Rajagopalacharyar swamy on 25-08-2014 is available for download/direct listening at

http://www.mediafire.com/listen/36hnh2o3dqvamz9/014_madal_(25-8-2014).mp3

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 15

38. ராமாநுஜ என்கிற பதம் நடாதூர் அம்மாளைக் குறிக்கிறது.

श्रीमद्भयां स्यादसावित्यनुपधि वरदाचार्य रामानुजाभ्यां ஸ்ரீமத்பயாம் ஸ்யாதஸாவித்யநுபதி வரதாசார்ய ராமாநுஜாப்யாம் (அதிகரண ஸாராவளி)

व्यातानीत्  वेङ्कटेशो वरदगुरुं कृपा लम्भितोद्दाम् भूमा வ்யாதாநீத்  வேங்கடேசோ வரதகுரும் க்ருபா லம்பிதோத்தாம் பூமா (ஸ்ரீ தத்வமுக்தாகலாபம்)

प्रणम्य वरदाचार्य  ப்ரணம்ய வரதாசார்ய (ஸ்ரீதத்வடீகை)

அம்மாள் அருளிச் செய்த சுருக்கு (ஸாங்கப்ரபதநம்), வாதிஹம்ஸாம்புத வரதாசார்யர்கள் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், “தத்வஸாரம்” முதலிய க்ரந்தங்களிலும் உதாஹரித்துள்ளார்.

39. ராமாநுஜ என்கிற பதம் வஸிஷ்டரையும், ஸாந்திபிநி ரிஷியையும் குறிக்கிறது.

पत्यु: सम्यमिनां प्रणम्य चरणौ तत्पादकोटीरयो: सम्बन्धेन समिध्यमान विभवान् धन्यांस्तथान्यान् गुरून्  பத்யு: ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாதகோடீரயோ: ஸம்பந்தேந ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ்ததாந்யாந் குரூந்  (ந்யாயபரிஶுத்தி) என்றும், மேலும் பெரிய நம்பிகளையும், ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளாரையும் குறிக்கிறது.  இவருடைய பெருமையை அப்புள்ளார் அருளிச் செய்த விரகு, கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்தார், கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாய்ப் போலே பழக்குவிக்க, அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்),  श्रुत्वा रामानुजार्यात् सदसदपि तत: ஶ்ருத்வா ராமாநுஜார்யாத் ஸதஸதபி தத(ஸ்ரீதத்வமுக்தாகலாபம்)  श्रीमद्भयांरामानुजाभ्या ஸ்ரீமத்பயாம்ராமாநுஜாப்யா (அதிகரணசாராவளி) अश्रौषं  शेषकलपादहमपि वीदुषो वादिहंसाम्बुवाहात அஶ்ரௌஷம்  சேஷகலபாதஹமபி வீதுஷோ வாதிஹம்ஸாம்புவாஹாத (அதிகரணஸாராவளி) नमो रामानुजार्याय वेदान्तार्थप्रदायिने நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயிநே (வாழித்திருநாமம்) वन्दे आत्रेय रामानुज गुरुमनघं वादिहंसाम्बुवाहं வந்தே ஆத்ரேய ராமாநுஜ குருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம் (அப்புள்ளார் தனியன்) तदूक्ता ..... मम गुरुभि: वादिहंसाम्बुवाहै: ததூக்தா ..... மம குருபி: வாதிஹம்ஸாம்புவாஹை: (அதிகரண ஸாராவளி) என்றும் தன்னுடைய க்ரந்தங்களில் உதாஹரித்துள்ளார்.

40. ராமாநுஜ என்கிற பதம் எம்பெருமானாருக்கு திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த வேதாந்தோயநர் என்ற கிடாம்பி ஆச்சானைக் குறிக்கிறது. இவர் வழியில் வந்தவர் எல்லோருக்கும் பயன்பெறுமாறு முப்பத்து நான்கு ரஹஸ்யங்களாக அருளிச் செய்துள்ளார் என்றபடி “ஆச்சான் பக்கலிலே கேட்டு” (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்” (ஸ்ரீபரமபதஸோபாநம்) इति यतिराजमहानस परिमळपरिवाह वासितां पिबत இதி யதிராஜமஹாநஸ பரிமளபரிவாஹ வாஸிதாம் பிபத (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) मान्यं यतीश्वर महानस संप्रदायम्  மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம் (ஸ்ரீஶரணாகதி தீபிகை) यो महानसिको महान् यतिपते नीतश्च तत्पौत्रजान् आचार्यान्  யோ மஹாநஸிகோ மஹாந் யதிபதே நீதச்ச தத்பௌத்ரஜாந் ஆசார்யாந் (ஸ்ரீந்யாஸதிலகம்)

41. ராமாநுஜ என்கிற பதம் திருமலையாண்டானைக் குறிக்கிறது. திருமலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்  (ரஹஸ்யத்ரயஸாரம்) என்று அருளிச் செய்துள்ளார்.

         மேலும் ஆசார்ய பரம்பரையில் எம்பெருமானாருக்கு ரஹஸ்யார்த்தங்கள் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பிகளும் ராமாயணார்த்த விசேஷங்களை உபதேசித்த பெரியதிருமலை நம்பிகளும் இவர்களுடைய ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யஸாரம், ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி முதலியவற்றில் நிரூபித்திருப்பதால் அவர்களுடைய தயைக்குப் பாத்ரமானார் ஸ்வாமி என்றபடி.

 [இத்துடன் ஆசார்யனின் தனியனில் ராமாநுஜ என்ற பதத்திற்கு அர்த்தங்களை நிறைவு செய்த ஸ்ரீ சேட்டலூர் ஸ்வாமி தயாபாத்ரம் என்ற பதத்திற்கும் மிகவும் விரிவாகவும் அழகாகவும் அர்த்தங்களை விவரித்துள்ளார். அதையும் ஜ்ஞானவைராக்ய பூஷணம் இவைகளுக்கு அர்த்தங்களையும் முழுவதும் படித்து இன்புற நூலை வெளியிட்ட ஸ்ரீசாமம் பார்த்சாரதி அய்யங்கார் ஸ்வாமியிடம் (12, வடக்குச் சித்திரை வீதி, ஸ்ரீரங்கம் 620006 தொலைபேசி 0431-2433941 அலைபேசி 9840572451) தொடர்பு கொண்டு, நூலை சிறிய சம்பாவனை அளித்துப் பெற்று இன்புற வேண்டுகிறேன். இப்பகுதியை இங்கு பகிர்ந்துகொள்ள அனுமதி அளித்தமைக்கு அவருக்கு அடியேனது க்ருதஜ்ஞைகள்)

சனி, 23 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 14

35. ராமாநுஜ என்கிற பதம் தர்ஶந ஸ்தாபகரான எம்பெருமானாரைக் குறிக்கிறது.  श्रीभाष्यकार पन्थानं आत्मना दर्शितम्: पुत: ஸ்ரீபாஷ்யகார பந்தாநம் ஆத்மநா தர்ஶிதம் புத: (ஸ்ரீதேஶிக மங்களம்) என்றபடி, அவர் இயற்றிய க்ரந்தங்களுக்கு வ்யாக்யாநம் செய்து அவர் பெருமையை உலகிற்குக் காட்டியருளியுள்ளார் ஸ்வாமி. எம்பெருமானார் கூறிய கருத்தை, அதாவது உபாய விரோதியை ப்ரபத்தியினாலும்,உபாயாந்தர அநுஷ்டானத்தினாலும் கழிக்கலாம் என்பதை,

          இதில் சொன்ன உபாயம் ஸர்வாநிஷ்டங்களையும் கழிக்கவற்றாகையாலே உபாய விரோதியைக் கழிக்கும்படியை ஸ்ரீமத் கீதாபாஷ்யத்திலும், ப்ராப்தி விரோதியைக் கழிக்கும்படியைக் கத்யத்திலும் உதாஹரித்தருளினார். (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)

        எம்பெருமானார் திருநாடு அலங்கரிக்கும்போது அங்குள்ள முதலிகளைப் பார்த்து ப்ரபந்நர்கள் அநுஷ்டிக்க வேண்டிய உத்தரகைங்கர்யத்தின் ப்ரகாரத்தை உபதேஶ பரம்பரையாக அது எல்லோருக்கும் பயன் பெறும் வகையில் உபதேஶித்துள்ளார். அதை ஸ்வாமி இவர் அருளிச் செய்தருளின வார்த்தை (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) என்று ஆரம்பித்து அருளிச் செய்துள்ளார்.

       ‘ஒரு மலையில் நின்றும் ஒரு மலையிலே தாவும் ஸிம்ம ஶரீரத்தில் ஜந்துக்களைப்போல பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கநம் பண்ண அவரோடுண்டான குடல் துவக்கத்தாலே நாம் உத்தீர்ணராவுதோம்’ (ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற முதலியாண்டான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை அறியாமல் எம்பெருமானார் அனுஷ்டித்த ஶரணாகதியே போதும், வேறொரு உபாயம் வேண்டாம் என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஆழ்வான் அந்திம தஶையிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய, இப்பேறு நமக்கு வருகை அரிது, நாம் என்ன செய்யக்கடவோம், என்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்கள் அபிப்பிராயத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ப்ரக்ருதி அறியீர்களோ, இவ்வவஸ்தையில் இவருக்கு இது கர்ப்பூரத்தையும் கண்ட சர்க்கரையையும் இட்ட மாத்திரமன்றோ, நாம் உபாயத்திற்குப் பரிகரமாகச் செய்தோமல்லோம் என்றருளிச்செய்ய, முதலிகள் தெளிந்து நிர்ப்பரரானார்கள்” என்று ஆழ்வான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை வெளியிட்டருளினார். எம்பெருமானார் அனுஷ்டித்துக் காட்டிய உபாயம் எல்லாம் மோக்ஷத்திற்கு ஸாதகமாகாது என்று சிலர் கூற அதற்கு பெரியோர்களின் வார்த்தைகளே நமக்கு ப்ரமாணம் அனுஷ்டித்த சிற்சில பாகங்கள் ப்ரமாணமாகும் ईश्वराणां वचस्सत्यं ஈஶ்வராணாம் வசஸ்ஸத்யம் (ஸ்ரீமத் பாகவதம்) என்றபடி அவர்களுடைய வர்ணாஶ்ரம பேதமில்லாமல் (விரோதமில்லாமல்) உள்ள அம்ஶங்களே ப்ரமாணமாகும். அநுஷ்டானமும் ஶாஸ்த்ர விரோதமாக இருக்கவில்லை என்பதை திருவுள்ளம் கொண்டு கர்மாநுஷ்டானத்தில் மிகவும் விழிப்புடன் இருந்தார் என்பதை ‘பாஷ்யகாரர் அந்திம தசையிலும் வருந்தி எழுந்திருந்து ஸந்த்யாகாலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்ணியருளினார்’ ‘எம்பெருமானுள்ளிட்ட பரமாசார்யர்களுடைய அந்திம திவஸாவதியான அநுஷ்டானங்களை (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்)   என்று அருளிச் செய்துள்ளார். மேலும் ஸ்ரீபரமபத ஸோபானத்தில் எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே என்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் इति यतिराजमहानसपरिमळ परिवाह वासितां இதி யதிராஜமஹாநஸபரிமள பரிவாஹ வாஸிதாம் என்றும் அருளிச் செய்துள்ளார்.

36. ராமாநுஜ என்கிற பதம் திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் குறிக்கிறது. இவர் ஸ்ரீபாஷ்யகாரருடைய ஜ்ஞாநபுத்ரர் என்று வடுக நம்பியால் கொண்டாடப்பட்டவர். இவர் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற வ்யாக்யானம் செய்தருளியுள்ளார். இதற்கு நிகமபரிமளம் எனப்பட்ட எழுபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநமும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியிலும், ஸாரத்திலும் ஸங்க்ரஹித்து நிரூபித்தருளியுள்ளார் ஸ்வாமி. தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே, ஈஶ்வரனால் வரும் நன்மை முலைப்பால் போலே (ரஹஸ்யத்ரயஸாரம்) பகவானுடைய அநுக்ரஹம் தாயின் பாலைப்போன்றது, நம்மால் செய்யப்படும் உபாயாநுஷ்டாநம் விலைக்கு வாங்கும் பாலைப்போன்றது என்று அர்த்தம். ஆகையால் நாம் உபாயாநுஷ்டாநம் செய்யவேண்டியதில்லை என்று அர்த்தம் சொல்வதற்கு ஸமாதாநமாக  பக்தி ப்ரபத்தியாதிகள் எல்லாம் அவனாலே வருகிறதென்று நினைக்கவேணுமென்று தன்னுடைய பராதீன கர்த்ருத்வத்திலே தாத்பர்யம்  எல்லாச் செயல்களும் பகவானுடைய ஸங்கல்பத்தால் உண்டாவதுதான், ஆனால் நாம் செய்கிறோம் என்று உபாயாநுஷ்டாநத்தைச் செய்யக்கூடாது. “ஸ்ரீவிரோத பரிஹார”த்தில் முக்தன் சரீரத்துடனும், சரீரமில்லாமலும் கைங்கர்யம் செய்யமுடியுமா? என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக இப்படியே किङ्करत्वं तु शेषस्य स्वामि कैङ्कर्य निष्टता கிங்கரத்வம் து ஶேஷஸ்ய ஸ்வாமி கைங்கர்ய நிஷ்டதா என்று பிள்ளான் அருளிச் செய்தது.

37. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீவிஷ்ணுசித்தர் என்கிற திருநாமமுடைய எங்களாழ்வானைக் குறிக்கிறது. இவர் வேதார்த்த ஸங்க்ரஹத்திற்கு வ்யாக்யாநமிட்டுள்ளார். இதை ஸ்ரீந்யாயபரிசுத்தி முதலிய க்ரந்தங்களில் நிரூபித்துள்ளார் . ஸ்ரீபாஷ்யகாரர் ஏற்றுக்கொண்டதாக சில அபார்த்தங்களை சிலர் வெளியிட, அவை சரியல்ல என்று கண்டித்தவர் இவர் என்பதை  तत्तु श्रीविष्णुचित्ताद्यै: निर्मूलमिति दर्शितम् தத்து ஸ்ரீவிஷ்ணுசித்தாத்யை: நிர்மூலமிதி தர்சிதம் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், இவர் கூறிய அர்த்தங்கள் எல்லாம் பூர்வாசார்யர்களின் ஸூக்திகளை அநுஸரித்தது என்பதை ஸ்ரீவிஷ்ணுசித்த வாதிஹம்ஸாம்புத வரதாசார்யர்கள் ஸங்க்ரஹித்தார்கள் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)  उक्तं च श्रिविष्णुचित्तै: श्येन कपोतीय कपोतोपाख्यान काकविभीषण क्षत्रबन्धुमुचुकुन्द गजेन्द्रद्रौपदी तक्षक शतमखादिषु मोक्षार्थतया क्षणकालनिर्वर्त्य प्रपदनार्थ दर्शनात् अबधिराणां तत्र मुख्यत्वं इति  உக்தம் ச ஸ்ரீவிஷ்ணுசித்தை: ச்யேந கபோதீய கபோதோபாக்யாந காகவிபீஷண க்ஷத்ரபந்துமுசுகுந்த கஜேந்த்ரத்ரௌபதீ தக்ஷக சதமகாதிஷு மோக்ஷார்ததயா க்ஷணகாலநிர்வர்த்ய ப்ரபதநார்த தர்சநாத் அபதிராணாம் தத்ர முக்யத்வம் இதி (ஸ்ரீநிக்ஷேபரக்ஷை), இவருடைய கத்ய வ்யாக்யாநத்தை ஸ்ரீரஹஸ்யரக்ஷையிலும் विष्णुचित्तैर्विवव्रे விஷ்ணுசித்தைர்விவவ்ரே (அதிகரணஸாராவளி)யிலும் உதாஹரித்துள்ளார்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

siRiya thirumadal tele-upanyasam dated 18-8-‘14

Tele-upanyasam on siRiya Thirumadal delivered by Natteri Sri Rajagopalacharyar on 18-08-2014 is now available at

http://www.mediafire.com/listen/i10zz5e9t3zfo3t/013_madal_(18-08-2014).mp3

from where it can be either downloaded or listened to online.

சனி, 16 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 13

ராமாநுஜ என்ற பதம் பெரிய முதலியார் எனப்படும் ஸ்ரீஆளவந்தாரைக் குறிக்கிறது. இவருடைய ஸ்ரீஸூக்திகளில் ஸ்ரீசதுஶ்லோகி, ஸ்ரீஸ்தோத்ர ரத்னம், ஸ்ரீகீதார்த்தஸங்க்ரஹம் இவற்றிற்கு விஸ்தாரமாக வ்யாக்யாநமிட்டும், “ஆகம ப்ரமாண்யம்”, “ஸம்வித்ஸித்தி”, “ஈசுவர ஸித்தி” “ஆத்ம ஸித்தி புருஷ நிர்ணயம்” இவற்றின் தாத்பர்யார்த்தாத்தங்களை “ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை” முதலிய ஸ்ரீஸூக்திகளில் வெளியிட்டருளியுள்ளார். மேலும், “ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹ”த்தில்  सास्त्र सारार्थ उज्यते --ஸாஸ்த்ர ஸாரார்த்த உஜ்யதே –(ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம்) என்பதற்கு இவ்விடத்தில் கீதார்த்தஸங்க்ரஹம் ஶாஸ்த்ர ஸாரார்த்தம்.  सर्वगुह्यतमं ஸர்வகுஹ்யதமம் (கீதை 18-64) என்று ஆரம்பித்து அர்ஜனனை ஸாவதாநமாய் இருக்கும்படி செய்து मन्मना भव मद्भक्त: மந்மநா பவ மத்பக்த: (கீதை 18—65) सर्वधर्मान् परित्यज्य ஸர்வதர்மாந் பரித்யஜ்ய (கீதை 18 – 66) என்று இரண்டு ஶ்லோகங்களால் சொல்லப்பட்டது. ஸாரார்த்தமாவது பக்தி யோகமென்று  “கீதா பாஷ்ய”த்தில் சொல்லியிருப்பதோவெனில் அங்கப்ரபத்தி பரமாகச் சொல்லும் பக்ஷத்தில் ப்ரபத்தியைக் குறித்துப் பக்தி அங்கியாகையினாலே ப்ரதாநமாகையினால் என்றும் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹப் பாட்டில் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே பக்தி ப்ரபத்தி இரண்டும் ஶாஸ்த்ர ஸாரார்த்தம் என்ற பதத்தினால் சொல்லப்பட்டுள்ளது.  प्रीत्यैव कारित: ப்ரீத்யைவ காரித: (கீதார்த்த ஸங். 31) ஶாஸ்த்ர விருத்தமாக கேவலம் தன்னுடைய இச்சையை பற்றி செய்யலாம் என்பதை ஶாஸ்த்ரம் வேண்டா என்றபடியன்று. இங்கு ஶாஸ்த்ரம் கொண்டே அறியவேண்டுகிற கைங்கர்யம் தன்னில் ஸ்வாமி ஸந்தோஷ ஜனகத்வமடியாக ஶேஷபூதனான தனக்குப் பிறக்கிற ப்ரீதியினுடைய ப்ரேரகத்வாதிஶயம் சொல்லுகையிலே இதற்குத் தாத்பர்யம் “ப்ரீத்யைவ” என்கிற அவதாரணத்தாலே ஸாதநத்வ புத்தியை வ்யவச்சேதித்தார் என்னுமிடம் உபாயதாம் பரித்யஜ்ய என்று விவரிக்கை யாலே வ்யக்தம். ஶாஸ்த்ரீய கைங்கர்யத்தில் ப்ரீதியினுடைய ப்ரேரகத்வாதிஶயம் விவக்ஷிதமானாலும் நிஜகர்மாதி பக்த்யந்தம் என்கிற இவற்றின் ஸ்வரூபத்துக்கு ஶாஸ்த்ரமே ப்ரமாணம் என்னும் இடம் நிஜகர்ம ஶப்தத்தாலே ஸூசிதமாயிற்று.

वपुरादिषु வபுராதிஷு (ஸ்தோத்ர ரத்னம்) என்ற ஶ்லோகத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்து,  मम नाथ மம நாத (ஸ்தோத்ர ரத்னம் 55) என்பதால் அதற்காக அநுஶயிக்கிறார். இதைத் தவறு என்று சிலர் கூறியதற்கு

ஶாஸ்த்ர சோதிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யமாக்கினபடியன்று. ஆக இரண்டு ஶ்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகமில்லையே யாகிலும் ‘ந மம’ என்று ஸ்வ ஸம்பந்தம் அறுக்கையே (ரஹஸ்யத்ரயஸாரம்) अहमपि तवैवास्मि हि भर:’ அஹமபி தவைவாஸ்மி ஹி பர: (ஸ்தோத்ர ரத்னம்) என்னும்படி பர ஸமர்ப்பண ப்ரதாநமான ஶாஸ்த்ரார்த்தத்தில் ஸாரம் என்றருளி இவருடைய அநுஷ்டானமே ஶாஸ்த்ரீயமானது என்று ஸமர்ப்பித்து அருளியுள்ளார். இப்படியே  प्रसीद मद्वृत्तमचिन्तयित्वा ப்ரஸீத மத்வ்ருத்தமசிந்தயித்வா (ஸ்தோத்ர ரத்னம்) என்பதற்கு இந்த ஸ்தோத்ரத்தில் ஆத்யந்தங்களில் பண்ணின ஆசார்ய புரஸ்காரம் இங்கு அருளிச் செய்கிற ப்ரபத்திக்கு அபேக்ஷிதமாயாதல் வைகல்ய பரிஹாரார்த்த மாயாதலாய் உபயுக்தமாய் வந்ததித்தனை (ரஹஸ்யத்ரய ஸாரம்) என்று அருளிச் செய்திருப்பதும், தம் ஆசார்யரான மணக்கால் நம்பிகளை ஸ்தோத்ரம் பண்ணாதே அவருக்கும் ப்ராசார்யரான ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறித்து ஸ்தோத்ரம் செய்துள்ளதற்கு  காரணத்தை ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தியில் ஆளவந்தார் தாம் நாதமுனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணித்தும், ஶரணம் புக்கதுவும், தம்முடைய ஆசார்யருக்கு இது ப்ரியதமம் என்றும், தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத்துக்களும் நாதமுனி வம்சத்தில் பிறவியென்று தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்தில் போலே பரமாசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணுமென்கைக்காகவும் என்றறியப் படும் என்றருளிச் செய்துள்ளார்.

இப்படி ஸ்ரீகுருபரம்பராஸாரத்தில் குருஶிஷ்ய பரம்பரையை நன்றாக நிரூபித்துள்ளார்.

24. ராமாநுஜ என்கிற பதம் பெரிய நம்பிகளைக் குறிக்கிறது. “ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீபாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்மசாரிகளான திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த ஶிக்ஷை பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும், நியோகத்தலும் ஶிஷ்யபூதரை பஹுகமாகத் திருத்தவேண்டும் என்கிற அபிஸந்தியாலே உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி)

‘பெரிய நம்பி முதலான பரமாசார்யர்களும் தம்தம் ஸூத்ரங்களின்படியே யஜ்ஞாதிகள் பண்ணினார்கள் என்னுமிடம் ஸர்வருக்கும் ப்ரஸித்தம் என்று அருளிச் செய்துள்ளார்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 12

30. ராமாநுஜ பதம் ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறிக்கிறது. இவர் பெருமையை நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்  (नाथोपज्ञं प्रवृत्तम्)(ஸ்ரீதத்வமுக்தா கலாபம்) ‘அகஸ்த்ய ஸேவிதமான தேஶத்திலே அநேக தேஶிகாபதேஶத்தாலே அவதரித்தருளினான் இவ்வாசார்யர்களில் ‘ ஈஶ்வர  முனிகள் பிள்ளை நாதமுனிகள். இவர் ந்யாயதத்துவம் என்கிற ஶாஸ்த்திரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார். இவருக்கு நம்மாழ்வார் ஆசார்யரானார். தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே. (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
யஸ்ய நைகாமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம்||
नाथेन मुनिना तेन भवेयं नाथवानहम् |
यस्य नैगामिकं तत्त्वं हस्तामलकतां गतम् ||

                                                (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

என்று அருளிச்செய்து ஸ்ரீந்யாய தத்வ வாக்யங்களை ந்யாய பரிஶுத்தி முதலியவற்றில் பல இடங்களில் உதாஹரித்தும் காண்பித்துள்ளார்.

31. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீ உய்யக்கொண்டாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபாவத்தைக் குறிப்பிடும்போது நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம்|
சுத்தசத்வமயம் சௌரேரவதாரமிவாபரம் ||
नम्स्याम्यरविन्दाक्षं नाथभावे व्यवस्थितम्|
शुद्धसत्त्वमयं शौरेरवतारमिवापरम्||
(யதிராஜ ஸப்ததி)

32. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீமணக்கால் நம்பியைக் குறிக்கிறது. இவருடைய ப்ரபாவத்தை
அநுஜ்ஜிதக்ஷமாயோகமபுண்யஜநபாதகம்
அஸ்ப்ருஷ்டமதராகம் தம் ராமம் துர்யமுபாஸ்மஹே
अनुज्झितक्षमायोगमपुण्यजनबाधकम्
अस्पृष्टमदरागं तं रामं तुर्यमुपास्महे 
(ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

என்று பகவானுடைய அவதாரங்களான மூன்று ராமர்களுடன் ஸமமாக பாவித்து நான்காவது ராமனாய் அருளிச் செய்துள்ளார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு நெடுநாள் பச்சையிட்டு ஒரு விரகாலே ஆகாங்க்ஷை உண்டாக்கி உபதேஶித்தது பரமாசார்ய குலத்திற்கு தாம் ஒரு கிஞ்சித்காரம் பண்ணுகையிலும் ஆசார்ய நியோகத்தைக் கடுகத் தலைக்கட்டுகையிலும் உண்டான த்வரையாலும் சிரகால பரீக்ஷாதிகள் வேண்டாதபடி போதநந்து முஹு: க்ரமாத் (बोधनन्तु मुहु: क्रमात्) என்கிற யுக தர்மாநுஸாரத்தாலும் உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி) என்று இவர் ஸ்ரீஆளவந்தாரிடம் தாமே சென்று அவருக்கு வேதாந்த காலக்ஷேபம் சொல்லியது ஶாஸ்த்ரீயமானது என்று ஸ்தாபித்தருளியுள்ளார். ஸ்ரீதத்வடீகையில் 
ரக்ஷிதத்வம் து ராமார்யை: த்ர்ய்யந்தார்த ஹி ஸூசிதம் (रक्षितत्वं तु रामार्यै: त्र्य्यन्तार्थ हि सूचितम् ) என்று அருளிச் செய்வது இவருடைய ப்ரபாவத்தைக் கூறுகிறது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.


 

siRiya thirumadal tele-upanyasam dated 11-08-2014

The 12th tele-upanyasam on Thirumangai Azhwar's "siRiya thirumadal" deliveed by Natteri Sri Rajagopalacharyar swami on 11-08-2014 is available at

http://www.mediafire.com/listen/2e4r5mjkt09gski/012_madal_(11-08-2014).mp3


வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 11

26. ராமாநுஜ என்ற பதம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் குறிக்கிறது.
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” (திருமாலை) என்ற இவருடைய பாசுரத்திற்கு பாகவதர்களுடைய சேஷம் (உச்சிஷ்டம்) உண்ணத்தக்கது என்று வ்யாக்யானம் செய்துள்ளனர். இதற்கு ப்ரமாண பூர்வகமான ஸமாதாநம்
என்றதும் குரு விஷயமாமித்தனை. பொதுவானாலும் பகவத் ஸங்கீர்த்தநபரர் தேஶ காலாதி வைகுண்யத்தாலே ஊவ்ருத்திகளுமாய் ஊநகாரர்களுமாய் இருந்தார்கள் யாகிலும் தாங்கள் அது செய்த சேடம் தருவராகில் புனிதமாமென்றதித்தனை, இதில் ஶேஷ ஶப்தம்” (ரஹஸ்யத்ரய ஸாரம்)  अन्नशेषं किं क्रियताम् इष्टे: सह भुज्यताम् (ச்ராத்த ப்ரயோகம்) இத்யாதிகளில் ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்லை. ஶ்ருத்யாதிகளிலே புக்தஶிஷ்டமாய் பாகபாத்ரஸ்தமானதிலும் ப்ரயுக்தம் என்று அருளிச் செய்துள்ளார். மேலும் இதற்கு “ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகை”யில் ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்து அருளியுள்ளார். மேலும் பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்று இவர் ப்ரபாவத்தையும் வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார்.

27  ராமாநுஜ என்ற பதம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபந்தமான அமலனாதிபிரானுக்கு ஸ்ரீமுநிவாஹந போகம் என்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாக வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார். தமக்கு ‘வேதாந்தாசார்யர்’ என்று திருநாமம் இட்ட ஸ்ரீரங்கநாதனாலேயே ‘முநிவாஹநர்’ என்கிற திருநாமம் சூட்டப்பெற்றவராகையாலே தமக்கு ‘ஜ்யேஷ்ட ப்ராதா’ என்று திருவுள்ளம் பற்றி ‘நம் பாணநாதன்’ என்று அநுக்ரஹித்து அருளியுள்ளார்.

28. ராமாநுஜ என்ற பதம் திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய ப்ரபாவத்தைக் கூறும்போது ஸ்வாமி இம்மந்த்ரத்தைத் திருமங்கையாழ்வாருக்கு ஸர்வேஶ்வரன் தானே உபதேஶித்தான் (ரஹஸ்யத்ரயஸாரம்) ஸர்வேஶ்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், ஈஶ்வரன் தனக்கும் போக்யதமமான நித்ய விக்ரஹாநுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கையாழ்வார் தம்மை ஈஶ்வர விஷயத்தில் தேஹாத்ம வாதிகளாக அருளிச் செய்வர் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், இவருடைய ப்ரபந்தங்களின் பெருமையை அறிவுதரும் பெரிய திருமொழி (ப்ரபந்தஸாரம்)என்றும், இவர் அவதார காலத்தில் பாகவத ததீயாராதநத்திற்காக செய்த ஸ்தேயம் (திருட்டு) ஶாஸ்த்ரீயமானது என்பதை ஸ்ரீஸ்தேயாவிரோதம் என்னும் ஸ்ரீஸூக்தியில் விஸ்தாரமாகவும், ஸ்ரீபரமதபங்கத்தில் ‘ஸ்தேய ஶாஸ்த்ரமும்’ आसाधुभ्योऽर्थमादाय साधुभ्य्: सम्प्रयच्छति प्रसह्य वित्ताहरणं न कल्क:  என்கிறபடியே க்ஷத்ரியாதிகளுக்கு பரகாலாதி ந்யாயத்தாலே தர்மோபயுக்தமாக ப்ரவ்ருத்தம் என்று அருளிச் செய்ததைக் கருத்தில் கொண்டு கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே (வாழித்திருநாமம்) என்று பின்புள்ளோர் அநுஸந்தித்தார்கள்.  

ஸம்ஸார பந்தம் மிகவும் (துக்கமானது) கஷ்டமானது என்பதை ‘மாற்றமுளவாகிலும்’ என்ற திருமொழியில் நிரூபித்துள்ளாரோ, அதே விஷயத்தை “ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதய”த்தில் மூன்றாவது அங்கத்தில்  यद्येवं त्वया दत्तहस्त: संसारसागरमतिलङ्घते पुरुष: तत् कथं दवदहनप्रज्वलित पाशर्वयुगळ दारूदरगत इव कीट:, सारमेयगण परिगत इव सारङ्ग: समीरणान्दोळन डोलायमान पोतोदरगत इव साम्यात्रिकसार्थ:, महप्रवाहमध्य निरोध सम्भ्रान्त नयन इव जम्बुक:, विषदरपरिगृहीत गृहघूर्णमान् हृदय इव कुटुम्बिजन: विकटतरभङ्ग: सम्भ्रमसंक्षुभितगङ्गातट वेपमान संहनन इव शाखिमण्डल: साध्वसगृहीतो भवति என்றருளிச் செய்து இருபாடெரிகொள்ளியின் உள்ளெரும்பே போல, காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போல பாம்பொடொரு கூறையில் பயின்றாப்போலே, ஆற்றங்கரை வாழ்மரம்போல (பெரியதிருமொழி) போன்றவைகளால் சொல்லப்பட்டுள்ளன.

29. ராமாநுஜ என்ற பதம் பகவானுடைய விபவாவதாரங்களான ஸ்ரீராம கிருஷ்ணாதி அவதாரங்களை விஶேஷித்துக் கொண்டாடுவதுபோல, அவனுடைய அபிநவ தஶாவதார பூதர்களான பராங்குஶ பரகாலர்களைக் குறிக்கிறது. இவர்கள் அருளிச் செய்திருக்கும் “மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்து ஓடி, ஓடி, வாடினேன் வாடி” போன்ற பாசுரங்களைப் பார்த்து இவர்களும் நம் போன்று ஸம்ஸாரிகள் என்கிறார்கள் சிலர். இதற்கு ஸமாதாநமாக आत्मानं मानुषं मन्ये (ஸ்ரீமத் ராமாயணம்) अहं वै बान्धवो जात: (ஸ்ரீமத் பாகவதம்) போன்று ராமக்ருஷ்ணர்கள் சொல்லிய துல்ய ந்யாயத்தால் ஸம்ஸாரிகள் என்பதையே மறந்தார்கள் என்று பாசுரங்களின் கருத்தை இவ்வாறாக அருளிச் செய்துள்ளார். தனக்கு அநுஸந்தேயமாக உதாஹரித்த (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும் 

अन्येषु तु विशेषं बोधयामि भयाभयस्थानविशेषवेदिन:
प्रमादमुक्तस्य परीक्ष्यकारिण:
परानुभूति प्रतिबन्धशङ्कया
भयानुभावो (बन्धो) प्यभयाय कल्पते!
(ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதயம்)
(அதாவது பயத்திற்கும் அபயத்திற்கும் காரணங்களானவற்றின் விஶேஷத்தை அறிந்தவர்களாயும், அஜாக்ரதையினால் விடப்பட்டவர்களாயும், யோசித்துக் கர்மங்களை அனுஷ்டிக்கக் கூடியவர்களாயும் இருக்கிறவர்களுக்குப் பகவானுடைய அநுபவத்திற்குத் தடங்கல் வரும் என்கிற ஸந்தேஹத்தினால் பயம் உண்டாவதும், மற்றவர்களுடைய அபயத்திற்குக் காரணமாகிறது) என்றும், இவர்களுடைய ஏற்றத்தை ‘ப்ரபந்த ஸார’த்திலும், பராங்குஶ பரகாலாதிகளுடைய ப்ரபந்தங்களிலே கண்டு கொள்வது (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 10

22. ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீமதுரகவிகளைக் குறிக்கிறது. “கண்ணிநுண் சிறுத்தாம்பு” விஷயமாய் “ஸ்ரீமதுரகவி ஹ்ருதயம்” என்ற க்ரந்தமும், இவர் விஷமாகவும் இவருடைய அநுஷ்டானத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆசார்ய நிஷ்டையை சொல்லக்கூடியதான விஷயத்தை ‘இன்பத்தில்’ என்கிற பாசுரத்தில் விசேஷித்து நிரூபித்து, இவருடைய ஞாநமே நமக்கு உபஜீவ்யமானது என்பதை “ப்ரபந்தஸார”த்தில் ‘தேறியமாஞானமுடன்’ என்றும் அருளிச் செய்வார்.

23. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீகுலஶேகரப் பெருமாளைக் குறிக்கிறது. இவர் விஷயமாக ஸ்வாமி “துய்ய குலசேகரன்” என்று அருளிச் செய்துள்ளார். இவருடைய மற்றைய ப்ரபாவங்களை “அநுஷங்க ஸித்தைஶ்வர்யரான ஸ்ரீகுலசேகரப் பெருமாளும்” என்றும், பஞ்சகால ப்ரக்ரியையாக ஆராதநம் செய்வதற்குப் ப்ரமாணம் இவருடைய “இருமுப்பொழுதேத்தி” (பெருமாள் திருமொழி –7)என்று அநுஸந்திப்பதை அருளிச் செய்து, இவர் ஊனேறு செல்வத்து என்று திருமொழியில் அநுபவித்த அம்ஶங்களையெல்லாம் “ஸ்ரீதயாஶதக”த்தில் ஸங்க்ரஹமாக நிரூபித்தருளி உள்ளார். 

24. ராமாநுஜ பதம் பெரியாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய பிரபாவத்தை கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்), இந்தரூப விசேஷத்தையுடைய பரம புருஷனே ஸர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னுமிடத்தை ஸர்வ வேத ஸாரபூத ப்ரணவ ப்ரதிபாத்யதையாலே (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) , மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழு வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் (பெரியாழ்வார் திருமொழி) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார். மேலும் பல்லாண்டு என்று தொடங்கி “சாயை போலப் பாடவல்லார்” என்றும் இவருடைய திருமொழி “ ஏக” ப்ரபந்தமாய் அமைந்திருப்பதை ஏரணி பல்லாண்டு முதற்பாட்டு நானூற்று எழுபத்தொன்றிரண்டும் (ப்ரபந்தஸாரம்) என்று அருளிச் செய்துள்ளார். மேலும் இவர் பாடிய திருப்பல்லாண்டு நம்மை பரமபதத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை “ஸ்ரீபரமபத ஸோபாந”த்தில் ப்ராப்தி பர்வத்தில் “தமிழ் பல்லாண்டிசையுடன் பாடுவமே” என்று அருளிச் செய்துள்ளார்.

என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்” (பெரிய. திரு. 4-10-2)என்ற பாசுரத்திற்கு பாவம் செய்தால் அது நல்லதுதான் அதற்காக ப்ராயஶ்சித்தாதிகள் செய்யவேண்டாம் என்று சிலர் வ்யாக்யாநம் செய்துள்ளனர். ப்ரமாதிகமாகப் புகுந்தால் நாமே க்ஷமிப்புதோம், புத்தி பூர்வமாகப் புகுந்தால் அவர்கள் க்ஷமை கொள்ளாத அளவிலும் ஶிக்ஷா விசேஷங்களாலே நாம் க்ஷமிப்புதோம் ஒருபடிக்கும் கைவிடோம் என்று தாத்பர்யம் நன்று செய்தார் என்பர் போலும் என்று சொல்லுகையாலே இது வஸ்து வ்ருத்தியில் நன்று அன்று என்னுமிடம் ஸூசிதம் ( ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்) என்று எந்த ப்ரமாணங்களுடனும் முரண்பாடு ஏற்படாமல் அர்த்தத்தை நிரூபித்துள்ளார்.

25. ராமாநுஜ என்ற பதம் நீளாப்பிராட்டியின் அபராவதாரமான ஸ்ரீ ஆண்டாளைக் குறிக்கிறது. இவளுடைய ப்ரபாவத்தை “ஸ்ரீகோதா ஸ்துதி”யில் நிரூபித்து அருளியுள்ளார். இவள் பகவானை அநுபவித்த விதமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தியினாலும் ப்ரபத்தியினாலும் ஆசார்ய நிஷ்டையாலும் எம்பெருமானை அடையலாம் என்று அநுஷ்டித்துக் காண்பித்துக் கொடுத்தவள் கோதை.
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
                            
(நாச்சியார் திருமொழி)
என்ற இவள் வாக்கே சான்று. மேலும், நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் மற்றை நம் காமங்கள் மாற்று (திருப்பாவை) என்றும், அநுஸந்தித்த நாச்சியார், கிருஷ்ணனைப் பெறுகைக்காகப் பண்ணின காம தேவார்ச்சநம் ஶ்ருங்கார ஸமாத்யநுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம் (ஸ்ரீபரமதபங்கம்) என்பது இவளுடைய பரமைகாந்தித்வத்தை வெளிக்காட்டுகிறது என்று அருளியுள்ளார் ஸ்வாமி.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

siRiya thirumadal tele-upanyasam (04-08-2014)

The eleventh tele-upanyasam on “siRiya thirumadal”by Natteri Sri Rajagopalacharyar swamin (delivered on 04-08-2014) can be downloaded or directly listened to from

http://www.mediafire.com/listen/3bh93zug1rcv5xi/011_madal_(04-08-2014).mp3

திங்கள், 28 ஜூலை, 2014

Siriya Thirumadal tele-upanyasam (28-07-2014)

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_

Siriya Thirumadal tele-upanyasam by Natteri Sri Rajagopalacharyar swami (28-07-2014) is available for download/on line listening at

http://www.mediafire.com/listen/uvup1fzsftj4gpf/010_madal_(28-07-2014).mp3

திங்கள், 21 ஜூலை, 2014

Madal tele-upanyasam dated 21-07-2014

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_

Sri Natteri Rajagopalachariyar swami's "Siriya Thirumadal" tele-upanyasam on 21-07-2014 can be downloaded/directly listened to from

http://www.mediafire.com/listen/qsp2bceue58fslg/009_madal_(21-07-2014).mp3

செவ்வாய், 15 ஜூலை, 2014

siRiya thirumadal tele-upanyasam dtd 14-07-2014

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_

siRiya thirumadal" tele-upanyasam delivered by Natteri Rajagopalacharyar on 14-07-2014 is available at

http://www.mediafire.com/listen/bxn4nwc0457t27w/008_madal_(14-07-2014).mp3

திங்கள், 7 ஜூலை, 2014

மடல் டெலி உபந்யாஸம் (05-07-2014)

நாட்டேரி ஸ்வாமியின் “சிறிய திருமடல்” டெலி உபந்யாஸம் (05-07-2014) நிகழ்த்தியது

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_

http://www.mediafire.com/listen/mepy2m10z9mi802/007_madal_(05-07=2014).mp3

ஞாயிறு, 6 ஜூலை, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 9

21. ராமாநுஜ என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிக்கிறது. இவருக்கு ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் அந்வயம் உண்டு. நித்யஸூரியான இவரை நித்ய ஸம்ஸாரியாக பாவித்தனர். இவர் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களுக்கு ஓராண்வழியாக வந்தது திருவாறாயிரப்படி வ்யாக்யாநம். இந்த வ்யாக்யாநம் ஸ்ரீபாஷ்யகாரரால் நியமனம் செய்யப்பட்ட திருக்குருகைப்பிள்ளானால் பண்ணப்பட்டது. இதற்கும் ஸ்ரீபாஷ்யம் முதலான ப்ரமாணங்களுக்கும் சேராமல் வ்யாக்யாநம் செய்தார்கள் பலர். இப்படி ஆழ்வாருடைய ப்ரபாவத்தையும் பெருமையையும் உலகத்தில் நிலைநிறுத்தியது ஸ்வாமியினிடமிருந்த ஆழ்வார் ஆசார்ய பக்தியைக் காட்டுகிறது.

மேலும் பகவானுடைய அவதார விஷய ரஹஸ்யங்களைப் பற்றி ஆராயக்கூடாது. பகவான் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து” என்றபடி ஒருவருக்குப் பிறந்து மற்றொருவருக்கு மகனாய் எப்படி வளர்ந்தான்? என்றும், கீதையை எப்படி உபதேஶித்தான்? இது முதலானவைகளை எப்படி விமர்ஶனம் செய்ய்க்கூடாதோ அதுபோன்று ஆழ்வாருடைய விஷயத்திலும், அவர் ஏன் நான்காவது வர்ணத்தில் அவதாரம் செய்தார்? ஸ்ரீமதுரகவி ஆழ்வாருக்கு வேதாந்த உபதேஶம் எப்படிச் செய்தார்? என்றெல்லாம் ஆக்ஷேபம் செய்யக்கூடாது என்பதைத் திருவுள்ளத்தில் கொண்டு

द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्भुतम्|
सम्यक् श्रुतवतां नात्र शङ्कनीय उपप्लव:||
देवगुह्योषु चान्येषु हेतुर्देवि निरर्थ इत्यादि
न्यायदृष्टया च तोष्टव्यमिह सूरिभि:

த்³ரமிடோ³பநிஷத் த்³ரஷ்டுரஸ்ய யாதா²த்ம்யமத்³பு⁴தம்|
ஸம்யக் ஶ்ருதவதாம் நாத்ர ஶங்கநீய உபப்லவ:||
தே³வகு³ஹ்யோஷு சாந்யேஷு ஹேதுர்தே³வி நிரர்த² இத்யாதி³
ந்யாயத்³ருஷ்டயா ச தோஷ்டவ்யமிஹ ஸூரிபி⁴:

என்று அருளிச் செய்துள்ளார் . (ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)

अपोह्य स्वं भावं हरिचरणसन्तानकलिकाम विक्षद्योगीयस्तनुमतनु कारुण्य विवश:
அபோஹ்ய ஸ்வம் பா⁴வம் ஹரிசரணஸந்தாநகலிகாம விக்ஷத்³யோகீ³யஸ்தநுமதநு காருண்ய விவஶ:
 (ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம்) இந்த யுகாரம்பத்தில் ப்ரஹ்மநந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகரானார் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி) என்றும்,

“ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும் யோகதஶையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் என்றும், (குருபரம்பராஸாரம்) இவரை ப்ரபந்நஸந்தான கூடஸ்ததையாலே ஸ்ரீஆளவந்தார் அருளிச் செய்தார் என்றும்,

         अथ पराशरप्रबन्धादपि वेदान्तरहस्य वैशद्यातिशयहेतुभूतै: सद्य: परमात्मचित्त रञ्जकतमै: सर्वोपजीव्यै: उपबृह्मणै: मधुरकविप्रभृति संप्रदायपरम्परया नाथमुनेरपि उपकर्तारं काल विप्रकर्षेऽपि परमपुरुषसङ्कल्पात्  कदाचित्  प्रादुर्भूय साक्षादपि सर्वोपनिषत् सारोपदेष्ठारं परांङ्कुशमुनिम्
அத² பராஶரப்ரப³ந்தா⁴த³பி வேதா³ந்தரஹஸ்ய வைஶத்³யாதிஶயஹேதுபூ⁴தை: ஸத்³ய: பரமாத்மசித்த ரஞ்ஜகதமை: ஸர்வோபஜீவ்யை: உபப்³ருஹ்மணை: மது⁴ரகவிப்ரப்⁴ருதி ஸம்ப்ரதா³யபரம்பரயா நாத²முநேரபி உபகர்தாரம் கால விப்ரகர்ஷேபி பரமபுருஷஸங்கல்பாத்  கதா³சித்  ப்ராது³ர்பூ⁴ய ஸாக்ஷாத³பி ஸர்வோபநிஷத் ஸாரோபதே³ஷ்டா²ரம் பராங்குஶமுநிம் என்று அருளிச் செய்துள்ளபடியாலும் (ஸ்தோத்ரபாஷ்யம்), மேலும்

மஹாப்ரளயத்தில் ஸம்ஸ்க்ருத வேதங்களைத் தன்னிடம் வைத்திருந்து மறுபடியும் ப்ரஹ்மாவிற்கு உபதேஶம் செய்தான் எம்பெருமான். மதுகைடபர்களால் வேதம் அபஹரிக்கப்பட்டபோது, அவர்களிடமிருந்து அதை மீட்டுத் தந்தான். அதேபோல் ஆழ்வாரும் ஒரு காலகட்டத்தில் த்ராவிடவேதமான திவ்யப்ரபந்தங்களுக்கு மறைவு ஏற்பட ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு உபதேஶம் செய்து த்ராவிட வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். ஒரு ஸமயம் ஆழ்வாரிடத்திலும், ப்ரபந்தங்களிடத்திலும் அதிப்ரீதனான எம்பெருமான் த்ராவிட வேதத்தில் அந்வயமில்லாதவர்களுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இடம் தரவேண்டாமென்று விஷ்வக்ஸேநருக்குக் கட்டளையிட, பரமகாருணிகரான ஆழ்வார் அப்படிப்பட்டவர்களுக்கும் எம்பெருமான் அநுக்ரஹம் கிடைக்கவேண்டுமென்று ஸ்ரீபாதுகைகளாக அவதாரம் செய்து அடியார்களை ரக்ஷித்தார் என்பதை ஸ்வாமி

द्रमिडोपनिषन्निवेशशून्यानपि लक्ष्मीरमणाय रोचयिष्यात् |
ध्रुवमाविशतिस्म पादुकात्मा शठकोप: स्वयमेव माननीय:||
 

த்³ரமிடோ³பநிஷந்நிவேஶஶூந்யாநபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யாத் |
த்⁴ருவமாவிஶதிஸ்ம பாது³காத்மா ஶட²கோப: ஸ்வயமேவ மாநநீய:||
  

                         (ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்)

என்று அருளிச் செய்துள்ளார். ஆழ்வார்கள் இயற்றியதான த்ராவிட வேதங்கள் தமிழ்மொழியில் இருப்பதால் இவற்றை பகவத் ஸந்நிதிகளில் அநுஸந்திக்கக் கூடாது என்று சிலர் ஆக்ஷேபம் செய்ததற்கு ஸமாதானமாக “भाषा गीति: प्रशस्ता भगवति वचनात् राजवच्वोपचारात्” “பா⁴ஷா கீ³தி: ப்ரஶஸ்தா ப⁴க³வதி வசநாத் ராஜவச்வோபசாராத்”  (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி) என்று அநுக்ரஹித்து, வ்யாகரணம் (இலக்கணம்) இல்லாத மொழிகளைத்தான் பகவத் ஸந்நிதிகளில் அநுஸந்திக்கக்கூடாது ஆனால் ஸம்ஸ்க்ருதத்திற்கு பாணிணி வ்யாகரணம் போல் தமிழுக்கு அகஸ்த்ய மஹரிஷியால் “பேரகத்தியம்” என்னும் இலக்கணம் இருப்பதால் இதற்குத் தடையில்லை. மேலும் ருத்ரனின் உடுக்கை ஸப்தத்திலிருந்து ஏற்பட்ட ஶப்தகூட்டங்கள் மொழிக்கு மாத்ருகாக்ஷரங்களாக இருப்பதுபோல், அவைகளே தமிழ்மொழிக்கு உயிரெழுத்துக்களாகவும், மெய்யெழுத்துக்களாகவும் அமைந்துள்ளன.  மேலும், பகவத் விஷயமான மொழியும் கானமும் (பாட்டும்) எப்பொழுதும் நிஷேதிக்கப் படவில்லை. அப்பேர்ப்பட்டவைக்கு எப்பொழுதும் ஏற்றம் உண்டு என்பதை,

नित्यं जाता शठरिपुतनो: निष्पतन्ति मुखात्ते|
प्राचीनानां श्रुतिपरिषदां पादुकेपूर्वगण्या|

நித்யம் ஜாதா ஶட²ரிபுதநோ: நிஷ்பதந்தி முகா²த்தே|
ப்ராசீநாநாம்ஶ்ருதிபரிஷதா³ம் பாது³கேபூர்வக³ண்யா
(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)
                                        ताम्रवर्णीतटगतशठजित् दृष्ट सर्वीय शाखा 
தாம்ரவர்ணீதடக³தஶட²ஜித் த்³ருஷ்ட ஸர்வீய ஶாகா² 

(ஸ்ரீத்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளி)                         
आम्नायानां प्रकृतिमपरां संहितां दृष्टवन्तम्  

ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்³ருஷ்டவந்தம்    (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)
अखिलद्रामिडब्रह्मदर्शी
அகி²லத்³ராமிட³ப்³ரஹ்மத³ர்ஶீ
             (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)

वकुळधरतनुस्त्वं संहितां यामपश्य:
வகுளத⁴ரதநுஸ்த்வம்ஸம்ஹிதாம் யாமபஶ்ய:               
                       (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)

वकुळधरमार्षिदृष्टे द्रमिडनिगमे
வகுளத⁴ரமார்ஷித்³ருஷ்டே த்³ரமிட³நிக³மே                                           (ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை)

श्राव्यवेदात्  ஶ்ராவ்யவேதா³த்             (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)

शठजिदुपचिषद्दुग्धसिन्धुं 
ஶட²ஜிது³பசிஷத்³து³க்³த⁴ஸிந்து⁴ம்            (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)

वेदानागस्त्य भाषा बपुष उदधरच्छ्रेयसे देहिनां य:
வேதா³நாக³ஸ்த்ய பா⁴ஷா ப³புஷ உத³த⁴ரச்ச்²ரேயஸே தே³ஹிநாம் ய:          (தாத்பர்யரத்னாவளி)

शठमथनमुने: संहिता सार्वभौमी वकुळधरमहर्षिदृष्ट विश्वजनीनोपनिषत्
ஶட²மத²நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ⁴மீ வகுளத⁴ரமஹர்ஷித்³ருஷ்ட விஶ்வஜநீநோபநிஷத் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)

 கறந்த பாலுள் நெய்யே போல         (ஸ்ரீதத்வத்ரய சுளகம்)

  யானும் தானாய் ஒழிந்தான்           (திருவாய்மொழி)   

போன்ற த்ரமிடோபநிஷத் வாக்யங்களுக்கும் “ஆளவந்தார் ஆழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி” (ஸ்ரீகுருபரம்பராஸாரம்) முதலியவற்றில் அருளிச் செய்து இவருடைய ப்ரபந்தங்களை “உபநிஷத்துக்களாக நிரூபித்தும், இவைகள் வேதங்கள்போலவே க்ரஹிக்கப்பட வேண்டும்” என்றும்     

பராங்குஶ பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தஶாவதாரம் பண்ணி(ஸ்ரீகுருபரம்பராஸாரம்) என்றும் இவருடைய ப்ரபாவத்தை வெளியிட்டருளி, விண்ணவர் தம் குழாங்களுடன் வேதம் பாடிப் பண்ணுலகில் படியாத இசையால் பாடும் பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே பாவலரும் தமிழ்ப் பல்லாண்டு இசையுடன் பாடுவமே (ஸ்ரீபரமபதஸோபாநம் 18,20) என்பதால் த்ராவிட வேதங்களும் “நித்யங்கள்” என்று நிரூபித்து सर्गोपि नोपजायन्ते प्रळये न व्यथन्ति च “ஸர்கோ³பி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யத²ந்தி ச “ஸ்ருஷ்டி ப்ரளயத்தில் மாறுதலடைகிற லீலா விபூதியைப்போல் இல்லாமல் நித்ய விபூதியில் பரமபதத்தில் தமிழ்ப்பல்லாண்டு பாடுவமே என்பதால் திராவிட வேதங்கள் நித்யமாக அங்கு அநுஸந்திக்கப் படுகிறது, இதனால் நித்யத்வமும் அதற்கு உண்டு என்பதும் தெரிகிறது. 

“இப்பிரபந்தங்களுக்கு ஸ்ரீநிகமபரிமளம்” என்னும் விஸ்தாரமான வ்யாக்யாநத்தையும் ஸாரமான அர்த்தங்களை ஸுலபமாக அநுஸந்திப்பதற்காக “ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி”, “ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம்” என்னும் ஸ்ரீஸூக்திகளையும் அருளிச் செய்து, திருவிருத்தத்தின் தாத்பர்யார்த்தத்தை “ஸ்ரீஉபகார ஸங்க்ரஹ”த்தில் விசேஷித்து நிரூபித்தருளி, “ஸ்ரீப்ரபந்தஸார”த்தில் ஆழ்வார்களுடைய அவதார ப்ரபாவத்தை வரு, வந்து, தோன்றி என்ற பதங்களினால் வெளியிட்டருளியபடியால், இவருக்கு வேதாந்தாசார்யர் என்று பட்டம் வழங்கி, உலகத்தாரால் கொண்டாடப் படுகிறார்.

சந்தமிகு தமிழ்மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்தகுரு என்று ஆசார்யனைப் போற்றியுகப்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் கடமையாகும். அதற்காகவே ஸ்வாமி தேஶிகன் த்ராவிட வேதங்களின் பெருமையை வெளியிட்டு, ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒருவரே என்று நிரூபித்தருளியுள்ளார். ஸ்ரீநாத பத்ததியில் திருவாய்மொழியின் ப்ரபாவத்தை பரக்க நிரூபித்திருந்தாலும்

இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்றென்னைப் புறம் போகப் புணர்ந்ததென் செய்வான்

வெறிதே அருள் செய்வார் (திருவாய்மொழி)

என்றபடி பகவான் அவனாக வந்து நமக்கு அநுக்ரஹிக்க வேண்டுமே தவிர, அவனை அடைவதற்காக நாம் எந்த உபாயத்தையும் அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்று சிலர் வ்யாக்யானம் செய்தனர் – அது சரியில்லை என்று பல ப்ரமாணங்களைக் காட்டி ஸமாதானம் அருளிச் செய்கிறார் ஸ்வாமி.

ஈஶ்வரனுக்கு ஸஹஜங்களான ஸ்வாதந்த்ர்ய காருண்யங்களினுடைய ப்ராதாந்யத்தாலே இவற்றுக்கு வ்யாஜ பூதங்களான விஶேஷகாரணங்களை அநாதரித்துப் பண்டு என்னைப் பராங்முகனாக்குகைக்கும் இன்றென்னை அபிமுகனாக்குகைக்கும் உன் ஸ்வாதந்த்ர்யமும் க்ருபையும் ஒழிய வேறு ஒரு ப்ரதான காரணம் கண்டிலேன், எனக்குக் காட்டாதே ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான நீ கண்டதுண்டாகில் அருளிச் செய்யவேணும் என்ன, ஈஶ்வரன் நிருத்தரனாய் இருக்கிற இருப்பாலே ஸ்வாதந்த்ர்ய க்ருபைகளினுடைய ப்ராதாந்யத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார். (ஸித்தோபாய ஶோதநாதிகாரம்) என்றும், திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து (திருவாய்மொழி) என்றவிடத்தில் “திருமாலிருஞ்சோலை” என்ற ஒரு வார்த்தையையாவது உச்சரித்தால் எம்பெருமான் “வெறிதே அருள் புரியும்” என்றபடி அருள் புரிவான். அதுவும் சொல்லவில்லையென்றால் அநுக்ரஹம் செய்யவே மாட்டான் என்பது ஆசார்யருடைய திருவுள்ளம்.

“நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்றோடும்” (திருவாய்மொழி 4-4-7) என்கிற பாசுரத்தில் “நீறு” என்பது பஸ்மத்தைக் குறிப்பிடுகிறது என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர். இது எந்த ப்ரமாணத்திலும் சேராது என்பதை ததீயவஸ்து ஸாத்ருஶ்யத்தாலே ததீயமல்லாதவற்றையும் ததீயமாகக் கருதிப் பிதற்றுகிற இவள் என்ற “திருவாறாயிரப்படி” வ்யாக்யானத்தை திருவுள்ளம் பற்றி, “ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை”யில் ஸமாதானம் செய்தருளியுள்ளார்.

सादृश्यमूल भ्रान्तिप्रतिपादन परत्वात् तस्य वाक्यस्य “ஸாத்³ருஶ்யமூல ப்⁴ராந்திப்ரதிபாத³ந பரத்வாத் தஸ்ய வாக்யஸ்ய”  என்று அருளிச் செய்தும்,

यद्वा न तत्र भस्मासाधारण: शब्द: प्रयुक्त: | तत्र हि प्रयुक्त: शब्दो भगवद्भक्त पादरजसि तेनैव प्रयुक्त:| अतो दिव्यचूर्ण विषयतयापि तच्छक्यं निर्वोढुम् | नन्वस्तु तत्र तथा, धवळचूर्णपरामर्शेन भगवत्कामुक नायिकोन्माद प्रशमनाभिधानं कथमिति चेन्न शर्ववाक्य परामर्शात् धवळचूर्णपरामर्शेन तच्छन्तिरिति वाक्यार्थपरत्वात्| अनन्तर गाथायां भगद्भक्तपादरजसा तच्छन्ति: सिद्धान्तिता: धवळशब्दस्यापि सितमनसमं इतिवत् विशुद्धमात्रपरतयोत्तरैकार्थ्यं वा| एतेन भगवत् एव वळर्क्षचूर्णधारण वचनमपि निर्व्यूढम्| चक्षुषि चतद्धारणं तत्र विहितमिति अञ्जनपरत्वमाहुराचार्या: शक्य:

யத்³வா ந தத்ர ப⁴ஸ்மாஸாதா⁴ரண: ஶப்³த³: ப்ரயுக்த: | தத்ர ஹி ப்ரயுக்த: ஶப்³தோ³ ப⁴க³வத்³ப⁴க்த பாத³ரஜஸி தேநைவ ப்ரயுக்த:| அதோ தி³வ்யசூர்ண விஷயதயாபி தச்ச²க்யம் நிர்வோடு⁴ம் | நந்வஸ்து தத்ர ததா², த⁴வளசூர்ணபராமர்ஶேந ப⁴க³வத்காமுக நாயிகோந்மாத³ ப்ரஶமநாபி⁴தா⁴நம் கத²மிதி சேந்ந ஶர்வவாக்ய பராமர்ஶாத் த⁴வளசூர்ணபராமர்ஶேந தச்ச²ந்திரிதி வாக்யார்த²பரத்வாத்| அநந்தர கா³தா²யாம் ப⁴க³த்³ப⁴க்தபாத³ரஜஸா தச்ச²ந்தி: ஸித்³தா⁴ந்திதா: த⁴வளஶப்³த³ஸ்யாபி ஸிதமநஸமம் இதிவத் விஶுத்³த⁴மாத்ரபரதயோத்தரைகார்த்²யம் வா| ஏதேந ப⁴க³வத் ஏவ வளர்க்ஷசூர்ணதா⁴ரண வசநமபி நிர்வ்யூட⁴ம்| சக்ஷுஷி சதத்³தா⁴ரணம் தத்ர விஹிதமிதி அஞ்ஜநபரத்வமாஹுராசார்யா: ஶக்ய:

என்று விஸ்தாரமாக நிரூபித்து, ஆழ்வார் தாமே தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்று பாகவத தாஸ்யத்தை அங்கீகரித்து அதை நெடுமாற்கடிமை (திருவாய்மொழி) என்பதை ஸங்க்ரஹித்து “नाथे नस्तृणं” “நாதே² நஸ்த்ருணம்” (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற ஶ்லோகத்தில் அருளிச் செய்துள்ளார்.


 

திங்கள், 30 ஜூன், 2014

Siriya Thirumadal Tele-upanyasam dated 30-06-2014

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_

இன்று 30-06-2014 நடந்த “சிறிய திருமடல்” டெலி உபந்யாஸத்தைக் கேட்டு/நகலிறக்கி மகிழ

http://www.mediafire.com/listen/j8bn93qc70n8r49/006_madal_(30-06-2014).mp3

செவ்வாய், 24 ஜூன், 2014

Madal tele-upanyasam dated 23-06-2014

 

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_ 

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி 23-06-2014 அன்று நிகழ்த்திய “சிறிய திருமடல்” டெலி உபந்யாஸத்தினைத் தரவிறக்கிக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/0eg335k6i00zzr0/005_Madal_(23-06-2014).mp3

சனி, 21 ஜூன், 2014

“Madal” tele-upanyasam on 16-06-2014

திருமங்கை ஆழ்வாரின் “மடல்” மீது நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் டெலி-உபந்யாஸத்தின் 4வது உபந்யாஸம் – 16-06-2014 அன்று நிகழ்த்தியது – கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/8srwosq1c5ncffd/004_Madal_(16-06-2014).mp3

(அனேகமாக இந்த வலைத்தளத்தில் தொடரும் அனைவருக்கும் இந்த வார உபந்யாஸத்தை இவ்வளவு தாமதமாக பகிர்ந்து கொள்ளும் காரணம் தெரிந்திருக்கும். ஸ்ரீமத் ஆண்டவனின் திருப்புல்லாணி விஜயத்தால் சற்று பிஸி)

வெள்ளி, 13 ஜூன், 2014

Thirumadal tele-upanyasam (09-06-2014)

நாட்டேரி ஸ்வாமியின் “திருமடல்” மூன்றாவது டெலி-உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/dyp3dobqlwedwyw/003_Madal_(09-06-2014).mp3

வியாழன், 5 ஜூன், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 8

     18. ராமாநுஜ என்கிற பதம் திவ்யதம்பதிகளுக்குப் பிறகு மயர்வறமதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைக் குறிக்கிறது. ஆழ்வார்கள் நித்ய ஸூரிகளின் மறு அவதாரங்களாகப் பேசப்படுகிறார்கள். மேலும் பகவான் ஸாதுக்களை ரக்ஷிப்பதற்காக தஶாவதாரங்களை எடுத்தான். பின்பு மஹாப்ரளயம் முடிந்தபிறகு புதிதாக அண்டங்களை ஸ்ருஷ்டித்து அதில் ஸ்ருஷ்டிகர்த்தாவாக சதுர்முக ப்ரம்மனைப் படைத்தான். அதுமட்டுமின்றி அவனுக்கு ஸம்ஸ்க்ருத வேதங்களையெல்லாம் உபதேஶித்தான். அந்த பகவான் கலியுகத்தில் ஶரணாகதி தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு தன்னுடைய அம்ஶமாக தன்னுடைய ஸங்கல்ப விஶேஷத்தாலே பத்து ஆழ்வார்களை அவதாரம் செய்வித்து த்ராவிட வேதத்தை (திவ்யப்ரபந்தம்) வெளிப்படுத்தி மற்றுமோர் அபிநவ தஶாவதாரத்தை நிகழ்த்திக் காட்டினான். ஆழ்வார்கள் வாயிலாக வந்த அவை நித்யமானது என்பதை ஸ்வாமி தேஶிகன் ஸம்ஸ்க்ருத வேதத்தில் புரியாத அர்த்தங்களை திராவிட வேதமான திவ்யப்ரபந்தத்தை ஓதி தெளியாத மறைநிலங்களை தெளிகின்றோமே என்று அருளிச் செய்துள்ளபடி.

          மேலும் திராவிட வேதம் என்று சொல்லக்கூடிய திவ்யப்ரபந்தங்கள் ஶ்ராவ்ய வேதங்களாகவும், ஸ்வாது ஸுவ்யாஹ்ருதங்கள் என்றும் போற்றப்படுகின்றன. காரணம் ஶோகத்தின் காரணமாக உருவானது ஶ்ரீமத் ராமாயண காவ்யம். கருணையின் மிகுதியால் உருவானது ஶ்ரீமத் பகவத் கீதை. இவற்றைக் காட்டிலும் மேலானது த்ராவிட வேதம். எத்தனை வேதங்கள் எம்பெருமானைப் பின்தொடர்ந்து வந்தாலும் ‘தேடியோடும் செல்வன்’ என்றபடியும் “மெய் நின்று கேட்டருள்வாய்” என்றபடியும் எம்பெருமான் பின்தொடர்ந்து செவிசாய்ப்பதால் ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளின் உயர்வைக் காட்டுகிறது. மேலும் ஸ்வாமி, இப்பிரபந்தங்களின் ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம், ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி முதலிய க்ரந்தங்களில் அநுக்ரஹித்தருளியபடி.

       19. ராமாநுஜ என்ற பதம் முதலாழ்வார் மூவரைக் குறிப்பிடுகின்றது. பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளால் எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) அநுபவித்தவர்கள். ஆகையால் இவர்களை இன்கவி பாடும் பரம கவிகளால் (திருவாய்மொழி) என்றும் செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி) என்றும் கொண்டாடப் படுகிறார்கள். இவ்வாழ்வார்களுடைய ப்ரபாவத்தை ப்ரபந்தஸாரத்தில் பொதுவாக நிரூபித்துள்ளார். பாட்டுக்குரிய பழையவர் (அதிகாரஸங்க்ரஹம்) என்ற பாசுரத்தில் தமிழ்ப்பல்லாண்டு இசையுடன் பாடும் ஸூரிகளின் அவதாரம் என்றும், “நாட்டுக்கு இருள்செக, நான்மறையந்தி நடைவிளங்க, வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் மெய்விளக்கு” என்னும்படியான தீபத்தை ஏற்றி பகவானுடைய கல்யாண குணங்களை அனுபவித்தார்கள். இதில் பகவானுடைய “ஸௌலப்யம்” என்கிற கல்யாண குணமானது ப்ராப்தமாயிற்று. அதையே ஆழ்வார்கள் மூன்று திருவந்தாதிகளாக வெளியிட்டார்கள். ‘திருக்கண்டேன்’ என்று ஆரம்பித்து அநுபவித்தது ப்ரமாண தமமானது என்பதை ஸ்வாமி “ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார”த்திலும், ஶ்ரீதேஹளீஶ ஸ்துதியிலும் “ஶ்ரீஸச்சரித்ர ரக்ஷை”முதலியவைகளிலும் அருளிச் செய்துள்ளார்.

           20. ராமாநுஜ என்கிற பதம் திருமழிசை ஆழ்வாரையும் குறிக்கிறது. இவர் சக்கரத்தாழ்வானுடைய அவதாரம் என்பதை “மழிசை வந்த சோதி” (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்) என்று காண்பித்துள்ளார். நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவேகொள் ஞாலநாதனே (திருச்சந்தவிருத்தம்) ப்ரபந்நன் பாபம் செய்தால் அதற்காக அபராத க்ஷமாபணம் செய்ய வேண்டியதில்லை என்று அவர் மனதைக் காயப்படுத்தினவர்களுக்கு ஸமாதானமாக ஸ்வாமி, “தாத்பர்யத்தைப் பார்த்தால் க்ஷமிக்கவேணுமென்று அபேக்ஷித்தபடியாகையாலே ப்ரபந்நனுக்கும் அபராதம் புகுந்தால் க்ஷமைகொள்ள ப்ராப்தம்” என்றும் அருளிச் செய்துள்ளார். 

ராமாநுஜ ஸப்தார்த்தம் 7

              16. ராமாநுஜ என்ற பதம் பரதத்வ வாமனனாய் அவதரித்து த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்த உத்தமமான அவதாரத்தைக் குறிக்கிறது. இவ்வவதாரத்தில் பரதத்வ நிர்த்தாரணம் செய்யப் பட்டிருக்கிறது என்பதை ஸ்வாமி

 सत्कुर्वतां तव पदं चतुराननत्वं
पादोदकं च शिरसा वहतां शिवत्त्वम् |
एकत्र विक्रमणकर्मणि तत् द्वयं ते
  देहल्यधीश युगपत् प्रथितं पृथिव्याम् ||

ஸத்குர்வதாம் தவ பதம் சதுராநநத்வம்
பாதோதகம் ச ஶிரஸா வஹதாம் ஶிவத்த்வம் |
ஏகத்ர விக்ரமணகர்மணி தத் த்வயம் தே
  தேஹல்யதீஶ யுகபத் ப்ரதிதம் ப்ருதிவ்யாம் || (தேஹளீஶஸ்துதி)

அப்படிப்பட்ட பரதத்வம் லக்ஷ்மியுடன் கூடியிருக்கும்போது ஏற்படும் அநுபவ விஶேஷத்தை

भिक्षोचितं प्रकटयन् प्रथमाश्रमंत्वं
      कृष्णाजिनं यवनिकां कृतवान् प्रियाया:|
व्यक्ताकृतेस्तव समीक्ष्य भुजान्तरे तां
      त्वामेव गोपनगरीश जना विदुस्त्वाम्||

பிக்ஷோசிதம் ப்ரகடயந் ப்ரதமாஶ்ரமம் த்வம்
      க்ருஷ்ணாஜிநம் யவநிகாம் க்ருதவாந் ப்ரியாயா:|
வ்யக்தாக்ருதேஸ்தவ ஸமீக்ஷ்ய புஜாந்தரே தாம்
      த்வாமேவ கோபநகரீஶ ஜநா விதுஸ்த்வாம்||     (தேஹளீஶஸ்துதி)

என்று அருளிச் செய்தபடி.

      17. ராமௌ என்ற பதம் பெருமாளையும் பிராட்டியையும் குறிக்கிறது. அநுஜ என்ற பதம் விஷ்வக்ஸேநரைக் குறிப்பிடுகிறது. இவர் அந்த திவ்ய தம்பதிகளின் நியமனத்தின்பேரில் அவதாரம் செய்து, விஶிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவர்.இவருக்கு ஸேனைநாதன், ஸேனை முதலியார் என்ற திருநாமங்கள் உண்டு. இவருடைய ப்ரபாவத்தை ஸ்வாமி, குருபரம்பரை அநுஸந்தானப் பாசுரத்தில் பெரிய பிராட்டிக்கு அடுத்தபடியாக ஸேனைநாதன் என்று அருளிச் செய்துள்ளபடி.

वन्दे वैकुण्टसेनान्यं देवं सूत्रवती सखम् |
यद्वेत्रशिरवरस्यपन्दे विस्वमेतद्वय वस्थितम् ||

வந்தே வைகுண்டஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம் |
யத்வேத்ரஶிரவரஸ்யபந்தே விஸ்வமேதத்வய வஸ்திதம் || 

                                                                    ( யதிராஜஸப்ததி)

दनुजमथने विष्वक्सेनो हरेस्तदनन्यधी:
अशेषविघ्रशमनमनीकेश्वरमाश्रये|
श्रीमत: करुणाम्भोधौ शिक्षास्रोत्त इवोत्थितम् ||

தநுஜமதநே விஷ்வக்ஸேநோ ஹரேஸ்ததநந்யதீ:
அசேஷவிக்ரசமநமநீகேச்வரமாச்ரயே|
ஸ்ரீமத: கருணாம்போதௌ சிக்ஷாஸ்ரோத்த இவோத்திதம் ||

                                                                  ( தயாஶதகம்)

என்று அருளிச் செய்தபடி.

                                                                        

 

செவ்வாய், 3 ஜூன், 2014

“திருமடல்” டெலி-உபந்யாஸம் (02-06-2014)

சென்ற வாரம் 26-05-2014 துவக்கிய தனது “பெரிய திருமடல்” டெலி-உபந்யாஸத்தின் இரண்டாவது   (ஜூன் 2ல் நிகழ்த்திய) உபந்யாஸத்தில் முந்தைய உபந்யாஸத்தின் தொடர்ச்சியாக இன்றும் “மடலுக்கு” அறிமுகம் செய்கிறார் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி. இந்த உபந்யாஸத்தில் , அடியேனைப் போல சமஸ்க்ருதம் தெரியாமல், சந்தை கற்க வழி இல்லாமல், (மனப்பாடமாகத் தெரிந்திருந்தாலும் அர்த்தம் தெரியாமல் சொல்வதால் அனுபவித்துச் சொல்ல முடியாததால்) “தாயாரைக் குறித்து ஒன்றும் சொல்ல முடியவில்லையே! தாயாரை மகிழ்வித்தல் பெருமாள் கருணைக்கு எளிய வழியாகும் என்று பெரியவர்கள் சொல்கிறார்களே என்ன செய்வது?” என்று தவிப்பவர்களுக்கு நாட்டேரி ஸ்வாமி , கலியன் ஒரு நல்ல வழி காட்டியிருப்பதாகக் கூறுகிறார்.  இந்த உபந்யாஸம் முழுவதும் கேட்டால் அந்த எளிய வழி தெரியும்.

http://www.mediafire.com/listen/0dibj3km15gvmva/002_Madal_(02-06-2014).mp3

26-05-2014 அன்று நடந்த முதல் உபந்யாஸத்தைக் கேட்காதவர்கள் இந்த லிங்கில் அனுபவிக்கலாம்

http://www.mediafire.com/listen/n9vlefu4zdxu4v6/001_Madal_(26-05-2014)_00_04_12-01_18_30.mp3

வியாழன், 29 மே, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 6

              12 ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.
भरताय परं नमोस्तु तस्मै प्रथमोदाहरणाय भक्तिभाजाम् |
यदुपज्ञमशेषत: पृतिव्यां प्रथितो राघवपादुका प्रभाव: ||
பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் |
யதுபஜ்ஞமஶேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகா  ப்ரபாவ:||
 
                                                                                                     (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)
          பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும், பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகுக்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.
       13. ராமாநுஜ  என்பது இளைய பெருமாளைக் குறிக்கிறது. ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யத்தையும் பகவானுக்குச் செய்வதே நமது கடமை. இப்படிப்பட்ட ஶேஷத்வ நிலைமை இல்லாதபோது ஸ்வரூபம் முடிந்ததாகப் பாவிக்க வேண்டும் என்கிற அர்த்த விஶேஷம் இவருடைய அநுஷ்டானத்தினால் தெரிவிக்கப் படுகிறது என்பதை ப்ரபந்நனால்
             ப்ரார்த்தநீயமான ஶேஷியுகந்த கைங்கர்யத்தை இளைய பெருமாளுடையவும் இவருடைய அவதார விஶேஷமான திருவடிநிலையாழ்வாருடையவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளிலே தெளிவது
          ஸாரார்த்த போதகமான சரம ஶ்லோகம் அங்கப்ரபத்தியை சொல்லுகிறதே தவிர ஸ்வதந்த்ர ப்ரபத்தியைக் கூறவில்லை. ஸர்வ தர்மங்களின் ஸ்வரூப த்யாநம் சொல்லப் பட்டிருக்கிறது. ஸர்வ பாப ஶப்தமான புத்தி பூர்வமாகத் தெரிந்து செய்யப்பட்ட உத்தர பாபங்களையும் குறிக்கிறது. இதுபோன்று விருத்தமாக எல்லா ப்ரமாணங்களுக்கும் அர்த்தங்களைக் கூறுபவர்களுக்கு ஸ்வாமி அவர்கள் பக்ஷங்களையெல்லாம்    கண்டித்து தத்வார்த்தத்தை “ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரா”திகளில் அருளிச் செய்தபடி ஸர்வஜ்ஞனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனால் உபதேஶிக்கப்பட்ட கீதையில் எல்லா உபாயங்களும் ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளன. எல்லா உறவினர்களையும் கொன்றுவிட்டு ராஜ்யத்தை பெறுவது சரியில்லையே என்று மனக்கலக்கத்துடன் யுத்தம் செய்ய உற்சாகமிழந்து நின்ற அர்ஜுனனுக்கு வர்ணாஶ்ரம தர்மங்களையெல்லாம் எடுத்துக் கூறி, க்ஷத்ரியனுக்கு சண்டையிடுவதே தர்மம் என்றும், ஆகையால் நீ யுத்தம் செய்யவேண்டும் என்று இரண்டு ஸேனைகளுக்கும் நடுவில் நின்று கொண்டு கீதையை உபதேஶித்தான் கீதாசார்யன்.
         இந்த ப்ரகரணத்திற்கு அநுகுணமாகவே எம்பெருமானார் ஸ்ரீகீதாபாஷ்யத்தில் அருளிச் செய்தபடி. ஆகிலும் ஸர்வாதிகாரமான ஸ்வதந்த்ர ப்ரபத்தி இந்த ஶ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஸ்ரீஶரணாகதி கத்யத்தில் நிரூபித்திருக்கிறார். இதைக் கடாக்ஷித்து சரம ஶ்லோகம்ப்ரபத்தி மோக்ஷத்திற்கு நேரில் உபாயம் என்பதைச் சொல்லுகிறது என்று ஸ்பஷ்டமாக நிரூபித்தருளியபடி இந்த கீதா ஶாஸ்த்ரமானது அர்ஜுனனைக் குறித்து உபதேஶிக்கப்பட்டதால் எல்லாருக்கும் பொருந்தாது என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக,
              தன் திருவடிகளைப் பெறுகைக்கும் மற்றும் அபிமதமானவை எல்லாத்துக்கும் பொதுவான ஸாதநமாய் ஆநுகூல்ய ஸங்கல்பாதி வ்யதிரிக்த பரிகர நிரபேக்ஷமாய் லகுதரமாய் க்ஷணமாத்ர ஸாத்யமான ரஹஸ்யதமோபயத்தை ஶ்ரோதவ்ய ஶேஷமில்லாதபடி உபதேஶ பர்யவஸானமான சரமஶ்லோகத்தால் ஸகல்லோக ரக்ஷார்த்தமாக அருளிச் செய்கிறான். (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)
        अनुचितपदवीभि: चिन्तयित्वा प्रयातान्यलमलमतिमात्रैरद्य चित्तविषादै: | उपनिषदमुदारामुद्वमनू क्कापि लक्ष्ये शरणमुपगतान्त: त्रायते शार्ङ्गधन्वा||  
        அநுசிதபதவீபி: சிந்தயித்வா ப்ரயாதாந்யலமலமதிமாத்ரைரத்ய சித்தவிஷாதை: | உபநிஷதமுதாராமுத்வமநூ க்காபி லக்ஷ்யே சரணமுபகதாந்த: த்ராயதே சார்ங்கதந்வா|| (ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா) என்றும்,
    “இது அர்ஜுனனைக் குறித்து உபதேஶிக்கப் பட்டதேயாகிலும் உபதேஶம் செய்தவன் ஸர்வலோக ஸாதாரணமாகையினாலும் உபதேஶம் செய்யப்பட்ட உபாயம் ஸர்வருக்கும் பொது என்று உபநிஷத் ப்ரஸித்தமாகையினாலும் இது ஸர்வருக்கும் ப்ரயோஜனமுடையதாகிறது” என்று அருளிச் செய்தபடி.
      14. ராமாநுஜ  என்னும் பதம் சத்ருக்னாழ்வானைக் குறிக்கிறது. இவர் அநுஷ்டித்துக் காட்டிய பாகவத தாஸ்யமே நமக்கு ப்ரதானம் என்று கொண்டு அதையே ஸாரஶாஸ்திரத்தில் மத்திமமான பதினாறாவது புருஷார்த்த காஷ்டாதிகாரத்தில் நிரூபித்தருளியபடி.
     15. ராமாநுஜ  என்கிற பதம் கீதாசார்யனைக் குறிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் பெருமையை “ஸ்ரீயாதவாப்யுதயம்” “ஸ்ரீகோபால விம்சதி” முதலியவைகளில் நிரூபித்தருளி அர்ஜுனனுக்கு உபதேஶம் என்று சொல்லி உலகோர் உய்ய பகவான் தன் வாக்காலே வெளியிட்டதான ஸர்வ வேதாந்த ஸாரமான ஸ்ரீகீதா ஶ்லோகங்களுக்கு மனம் போன போக்கில் அர்த்தங்களைச் சொல்லி அதைப் பயன் பெறாமல் செய்த ஸமயத்தில், ஸ்வாமி “ஸ்ரீகீதா பாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகை” “ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை” “ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹப் பாட்டு” முதலியவைகளின் மூலமாக கீதாசார்யனான எம்பெருமானுடைய திருவுள்ளத்தையும் ப்ரபத்தி ஶாஸ்திரார்த்தத்தையும் வெளியிட்டருளியுள்ளார் ஸ்வாமி.
         “தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல் மாதுற்ற மாயன் மருவ இக்கீதையின் வண்பொருளைக் கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே”
         என்று ஸ்ரீகீதை பக்தி யோகம் செய்பவர்களுக்கும் ஶரணாகதி நிஷ்டர்களுக்கும் ப்ரயோஜநமாகும் என்று நிரூபித்தருளி கீதையினுடைய ஸாரமான ஸமுதாயார்த்தத்தை ஒரு ஶ்லோகத்தில்
कृष्णस्तत्तवं परं तत्परमपि च हितं तत्पदैकाश्रयत्वं शास्त्रार्थोयम्
க்ருஷ்ணஸ்ததத்வம் பரம் தத்பரமபி ச ஹிதம் தத்பதைகாஶ்ரயத்வம் ஶாஸ்த்ரார்தோயம்  என்றும்
पिशाच रन्तिदेव-गुप्त-शङ्कर यादवप्रकाश भास्कर नारायणार्य यज्ञस्वामि प्रभृतिभि: स्वं स्वं मतमास्थितै: परश्सतै: भाष्यकृद्भि: अस्मत् सिद्धान्त तीर्थकरैश्च भगवद्यामुनाचार्य भाष्यकारादिभिरविगीत परिगृहीतोयमत्र सारार्थ: भगवानेव परं तत्त्वं अनन्यशरणैर्यथाधिकारं तदेकाश्रयणं परमधर्म: इति|
பிஶாச ரந்திதேவ-குப்த-ஶங்கர யாதவப்ரகாஶ பாஸ்கர நாராயணார்ய யஜ்ஞஸ்வாமி ப்ரப்ருதிபி: ஸ்வம் ஸ்வம் மதமாஸ்திதை: பரஶ்ஸதை: பாஷ்யக்ருத்பி: அஸ்மத் ஸித்தாந்த தீர்தகரைஶ்ச பகவத்யாமுநாசார்ய பாஷ்யகாராதிபிரவிகீத பரிக்ருஹீதோயமத்ர ஸாரார்த: பகவாநேவ பரம் தத்த்வம் அநந்யஶரணைர்யதாதிகாரம் ததேகாஶ்ரயணம் பரமதர்ம: இதி|  
                       (கீதாபாஷ்யதாத்பர்யசந்த்ரிகை)          
என்றும் நிரூபித்தருளியபடி.
   
          சக்கரவர்த்தித் திருமகனாய்  நின்றாலும் அவனுடைய ஸ்வபாவத்தை
 अनन्य शासनीय, निषादराज सौहृद सूचित सौशील्य सागर तरणिसुत शरणागति परतन्त्रीकृत स्वातन्त्रय  அநந்ய ஶாஸநீய, நிஷாதராஜ ஸௌஹ்ருத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர தரணிஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருத ஸ்வாதந்த்ரய (ரகுவீரகத்யம்) இவ்வாறு அருளியபடி.

சனி, 24 மே, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 5

      9. ராம என்ற பதம் பரமாத்மாவைச் சொல்லி அநுஜ என்பது பின்பு அவதரித்த முப்பது சின்னங்கள் (அடையாளங்கள்) என்று கணக்கிடப்பட்டிருக்கிற விபவாவதாரங்களில் விஶேஷித்து ஜ்ஞாநப்ரதாநம் செய்தருளிய ஸ்ரீஹயக்ரீவனைக் குறிக்கிறது என்றபடி. சுருணையிழந்த கணக்கன் நீர்கிடை நிலக்கிடை தெரியாமல் பரிதவிக்குமாப் போலே வேதங்களைப் பறிகொடுத்த ப்ரஹ்மா கலங்கிப் பரமாத்மாவை ஸ்தோத்திரம் செய்ய பகவான் ஹயக்ரீவ ரூபம் எடுத்து, பாதாளத்தில் ஒளிந்திருந்த அஸுரனைக் கொன்று, வேதங்களை மீட்டுக் கொடுத்த உபகாராதிகளை ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ராதிகளில் நிரூபித்து அருளியபடியினாலும், இவரே ப்ரதிவாதி நிரஸன காலத்தில் ஆசார்யர்களுடைய ஹ்ருதயகமல ஸிம்மாஸநத்திலும், உபதேஶ காலத்தில் அவர்களுடைய ஜிஹ்வாக்ர ஸிம்மாஸநத்திலும் வீற்றிருந்து அநுக்ரஹிப்பதை நிரூபித்திருப்பதினாலும், ஸர்வஶாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹமாய் அநுக்ரஹிக்கப்பட்ட ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் இவருடைய அநுக்ரஹமே அந்த க்ரந்த ரூபமாக வெளிவந்தது என்பதை வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோம் உள்ளத்தெழுதியது ஓலையில் இட்டனம் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து அருள் செய்வதும் பன்னுகலை நால் வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய எம்பரமன் (பெரிய திருமொழி) என்று இவ்வவதாரத்தைக் குறிக்கிறது.

        உபநிஷத்துக்களில் மிகவும் சிறந்தது ஈஶாவாஶ்யோபநிஷத்து. அதன் வ்யாக்யாநத்தில் ஸ்ரீஹயக்ரீவன் விஷயமாக மங்களம் செய்தருளியிருப்பதனால் ஸ்ரீ ஹயக்ரீவனே ஸர்வோபநிஷத் ப்ரதிபாத்யன் என்பதை ஸ்வாமியே எடுத்துக் காட்டி அருளியபடி. ஸர்வேஶ்வரனிடமிருந்தே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணிய கலியன் அருளிய அறிவுதரும் பெரிய திருமொழியை முற்றிலும் மறந்து, ஹயக்ரீவனின் அருளால் பெற்ற ஜ்ஞாநம் உபாதேயமன்று என்பவர்கள் அவருடைய தயைக்குப் பாத்திரமாக முடியாதல்லவா என்பது கருத்து. 

           10. ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீவராஹ நயினாரைக் குறிக்கிறது. ஹிரண்யகசிபு பூமியைச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஸமுத்திரத்தின் கீழ் ஒளிந்துகொண்ட காலத்தில் ஸ்ரீவராஹாவதாரம் செய்து, அஸுரனைக் கொன்று, பூமிப்பிராட்டியைக் கரையேற்றி, அவளைத் திருமணம் செய்துகொண்டு, அவளுடைய ப்ரார்த்தனைக்கு இணங்கி, மிகவும் ஸுலபமானதும், எல்லாரும் அநுஷ்டிக்கக் கூடியதுமான ப்ரபத்தியாகிற உபாயத்தை வராஹ சரம ஶ்லோகம் எனப்படும் இரண்டு ஶ்லோகங்களால் உபதேஶித்த உபாகார விஶேஷத்தை ஸ்ரீரஹஸ்ய ஶிகாமணி என்னும் ஸ்ரீஸூக்தியில் நிரூபித்தருளியபடி. 

     ஸித்தோபாய பூதராய் ஸர்வஜ்ஞருமான ஸ்ரீவராஹநயினார் தம்முடைய வசீகரணார்த்தமாக ஸாத்யமான ஜ்ஞாநயஜ்ஞ ஸாரத்தை இவ்வளவிலே ப்ரஸந்நனாய் ஜந்ம ஜந்மாந்திரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்த்தன்மை பொறுத்தித் தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்படியை இரண்டு ஶ்லோகத்தாலே அருளிச் செய்கிறார்.(ரஹஸ்யசிகாமணி)

          இதை ப்ரமாண உபபத்திகளுடன் விஸ்தாரமாக உபபாதித்தருளி, ஸம்ஸ்க்ருத பாஷையில் பரிச்சயமில்லாதவர்களும் இந்த ஶ்லோகங்களின் அர்த்த விசேஷங்களை ஸுலபமாய் அநுஸந்திக்கும்படி ஒரு ச, து, இவற்றின் ஸ்வாரஸ்யம்கூட விடாமல் இடம் பெற்றோரெல்லாம் என்றாரம்பித்து ஒரு பாட்டாலே நிரூபித்திருப்பதும் இந்த அவதாரத்தின் பெருமையை ‘ஸ்ரீதஶாவதார ஸ்தோத்திரத்திலும்’ ஸ்ரீ அபீதிஸ்தவத்திலும் அருளிச் செய்திருப்பதும் இங்கு அநுஸந்தேயம்.

     11. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனைக் குறிக்கிறது என்றபடி. ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்று கூறப்படும் ஸ்ரீமத்ராமாயணத்தின் பெருமையை ‘ரகுவீரகத்யம்’ என்று சொல்லக்கூடிய மஹாவீர வைபவத்தில் ஸ்தோத்ரமாகச் சொல்லி ‘ஸ்ரீஅபயப்ரதாந ஸார’த்தில் விஸ்தாரமாக உபபாதித்து ஶரண்யனுடைய திருவுள்ளத்தை வெளியிட்டருளியது. ‘ஸ்ரீஹம்ஸ ஸந்தேஶ’த்தில் பகவான் தூது விட்டதின் கருத்தையும், அவதாரத்தின் ப்ரயோஜனம் “ஸக்ருத் ப்ரபந்நஜந ரக்ஷணைகவ்ரத பரிபாலநம்” என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய்துள்ளார் ஸ்வாமி. பரதாழ்வான் பண்ணின ஶரணாகதி எல்லா பலத்தையும் கொடுக்கவல்லது என்பது பொய் என்று ஆக்ஷேபம் செய்பவர்களுக்கு ஸமாதானமாக,

        “பரதனுடைய ஶரணாகதி ஸபலமானதே. முற்பாடரான தேவர்கள் பண்ணின ப்ரபத்திக்காக, ராவண வதத்திற்கு எழுந்தருள்கையும், பிற்பாடரான ஸ்ரீபரதாழ்வான் பண்ணின ப்ரபத்திக்காக மீண்டு, திருவபிஷேகம் பண்ணி ராஜ்யம் பண்ணுகையும் விருத்தமானபடியினாலே ஸ்ரீபரதாழ்வானுக்குப் பண்ணினபோதே பரம பலம் சடக்கெனத் தலைக்கட்டித்தில்லையேயாகிலும், அவருக்குக் கைகேயீ கலஹத்தாலே ப்ரஸக்தமான அவத்யம் தீரும்படி மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ” என்கிறபடியே அப்போது ஸாக்ஷாத் பலமான திருவடிகளுக்கு ப்ரதிநிதியான ஸ்ரீசடகோபனாலே ஸபலத்வம் சொல்லி, பின்பு பூர்வ ப்ரதிஜ்ஞாதமான தேவகார்யம் தலைக்கட்டினவாறே ஸ்ரீ புஷ்பக விமானத்தாலே ஸாக்ஷாத் பலமான திருவடிகள் ஸ்வயமாக தங்களாய் அயத்ந லப்தமானபடி சொன்னான் என்றும், ஸ்ரீபரதாழ்வான் பண்ணின ப்ரபத்தியாலே அவருடைய விஷய வாஸமாத்ரமே பற்றாசாக, பின்பு கோஸலதேஸஶ்த ஜந்துஜாத வர்க்கங்களைக் காப்பாற்றினான்” என்று ஶரணாகதி ஸபலமானதை நிரூபித்தருளினார். இதையே ஸ்வாமி திருவுள்ளம் கொண்டு “பாதுகாஸஹஸ்ர”த்தில்  भरताय परं नमोस्तु तस्मै  பரதாய பரம் நமோஸ்து தஸ்மை என்று பரதாழ்வானுக்கு நமஸ்காரத்தைப் பண்ணியபடி. மேலும் பகவான் ஸமுத்ர ராஜனிடத்தில் பண்ணின ஶரணாகதி பலனில்லாமல் போயிற்றே என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக, பகவான் அவனிடம் செய்தது ஶரணாகதியல்ல, அதற்கு “ப்ரதிஶயநாதிபரம்” என்று பெயர்.

            அநந்யகதித்வம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் ஶரணாகதி பண்ணவேண்டும். அவர்கள்தான் ஶரணாகதர்கள். பகவானுக்கு அநந்யகதித்வம் கிடையாது. அவன் ஶரண்யன். ஆகையால் இங்கு சொல்லப் பட்டது ஶரணாகதி விஷயமில்லை.

                காகாஸுர ஶரணாகதியில் ஶரணாகதி ஶாஸ்த்ர ப்ரவர்த்தகர்களான மஹர்ஷிகள் ரக்ஷிக்காமல் கைவிட்டார்களே என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஒரு கண்ணை வாங்கி ரக்ஷித்தபடியால் ஶரணாகதனுடைய எல்லாப் பாபங்களும் க்ஷமிக்கப்படும் என்பது பொருந்தாதே என்பதற்கு ஸமாதானமாக----

ரக்ஷணம் இரண்டு விதம்
தன் ஶக்திக்கு வஞ்சனம் பண்ணாதே ரக்ஷிக்கவேண்டும். அங்ஙனமன்றிக்கே கைக்கொள்ளவுமாம், கைவிடவுமாம் தான் வல்லதொரு விரகால் என்று தாத்பர்யம். ரகு பரப்ருதிகள் ப்ராஹ்மணாதிகளைத் தாங்கள் கைக்கொண்டு ரக்ஷித்தார்கள். தேவர்களும் ரிஷிகளும் காகத்தைப் போக்கற்றதென்று பெருமாள் கைக்கொள்ளுகைக்காக (அபயப்ரதாநஸாரம்) என்று ரக்ஷணத்தின் வேறுபாட்டை ஸ்தாபித்தருளி, காகாஸுரனுக்கு ஒரு கண்ணைப் பறித்து ரக்ஷித்ததற்குக் காரணமாக காவலினி எமக்கு எங்கும் கடன் என்றெண்ணிக் காண நிலை இலச்சினை அன்றிட்ட வள்ளல் (அபயப்ரதாநஸாரம்) என்றருளியபடி. இதன் கருத்து இந்த காகத்தின் ரக்ஷணம் இது முதல் எல்லா இடத்திலும் நமது கடனாகிவிட்டது. துஷ்ட ப்ரக்ருதியான இக்காகத்தை பூர்ணமாக மன்னித்து விடுவோமாகில் இது இதே மாதிரியான அபராதத்தை வேறு யாரிடமாவது செய்தால் அவரால் உதைப்புண்டு ப்ராணனை இழக்கும், அப்படியானால் நம்முடைய ரக்ஷணம் ரக்ஷணமாகாது ஆகையால் அதற்கு நல்ல புத்தி வரவேண்டும் என்பதற்காகவும் அபசாரப்பட்டால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு கண்ணை வாங்கி அருளினான் என்றபடி.

       “ப்ராணார்த்தியாய்” விழுந்த காகத்திற்கு ப்ராணனைக் கொடுக்கையாலே அங்கு ப்ரபத்தி பலம் பூர்ணம். துஷ்ப்ரக்ருதியான இக்காகத்திற்கு சிக்ஷையாக ஒரு கண்ணை வாங்கி விட்டதும் நிக்ரஹமன்று அனுக்ரஹ விசேஷம் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்ய ப்ராரக்ஷா)  कृपे काकस्यैकं हितमिति हिनस्ति स्म नयनम् க்ருபே காகஸ்யைகம் ஹிதமிதி ஹிநஸ்தி ஸ்ம நயனம் (தயா ஶதகம் 63) என்றருளி, இந்த அவதாரத்தில் ஶரண்யன் தானே வெளியிட்ட அபயப்ரதாந ஶ்லோகத்தின் அர்த்தத்தை ‘ஒருக்காலே’ என்ற பாட்டாலே ஆரம்பித்து நிரூபித்தருளியபடி. மேலும், ஶத்ரு, மித்ரன், வேண்டியவன் வேண்டாதவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் ஸந்தோஷப்படுத்தக் கூடியவன் என்ற தன்மையை,

          ஶரணாகதனாய் இவர் கைவிடிலும் எங்ஙனம் புகுரிலும் அழியும்படி நிற்கிற விபீஷணாழ்வானையும் இவனை அழிக்க நினைத்த பரிவரையும் ரமிப்பித்தபடியை, விபீஷணாழ்வானுக்கு பஹுமுக பரிபவத்தாலே பிறந்த பரிதாபமெல்லாம் கழியும்படி ரமணீயமாய் நின்ற தயரதன் பெற்ற மரகத மணித்தடமிறே (அபயப்ரதாநஸாரம்) என்றருளியதும் எம்பெருமானுடைய பரத்வம் கழற்றவொண்ணாச் சட்டையாய் அவனுடைய ஸௌலப்யமே விஞ்சியிருக்கும் என்றபடி

       12. ராமாநுஜ  என்னும் பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.
  भरताय परं तस्मै प्रथमोदाहरणाय भक्तिभाजम्|
  यदुपज्ञमशेषत: पृथिव्यां प्रथितो राघवपादुका प्रभाव:||
  
ப⁴ரதாய பரம் தஸ்மை ப்ரத²மோதா³ஹரணாய ப⁴க்திபா⁴ஜம்|
யது³பஜ்ஞமஶேஷத: ப்ருதி²வ்யாம் ப்ரதி²தோ ராக⁴வபாது³கா ப்ரபா⁴வ:||
                                                                                                                   (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)

      பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும் பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகிற்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.

வெள்ளி, 23 மே, 2014

ராமாநுஜ தயா பாத்ரம் வ்யாக்யானம்

          6. ராமா என்பது பூமிப்பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை ஸ்ரீபூமிஸ்துதியிலும், ஸ்ரீரஹஸ்யஶிகாமணியிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி.
          ஸ்ரீபூமிப்பிராட்டியை ஜகத்துக்கு ஈஶாநா என்று ஶ்ருதி சொல்லுகையாலே சேதனாசேதன ரூபமான ஜகத்திற்காட்டில் இவளுடைய உத்கர்ஷம் ப்ரஸித்தம். ஸர்வம் ஸஹையான இவளுக்கு ஸர்வேஶ்வரனைக்காட்டிலும் , பெரியபிராட்டியைக் காட்டிலும் க்ஷமாதிகுண பூயஸ்தை உண்டாயிருந்தது. இப்படியானால் இவளுக்குத் தங்களைக் காட்டில் ஏற்றத்தை ஸூரிகளே தாங்களே அறிவார்கள் இத்தை ஸ்ரீபூமிப்பிராட்டி ஸ்வாபாவிக ஸார்வஜ்ஞ்யத்தாலே அறிந்திருக்கச் செய்தேயும் ப்ரஜா ஹிதார்த்தமாக மாதா கேட்க, ஸர்வபூத ஸுஹ்ருத்தான பிதா அருளிச் செய்த வார்த்தை என்று ப்ரஸித்தமாக வேண்டுமென்று திருவுள்ளம்பற்றி (ஸ்ரீரஹஸ்ய சிகாமணி) என்று கூறப்பட்டுள்ளது.
      7. ராமா என்பது நீளாப்பிராட்டியையும் குறிப்பிடுகிறது. இவளுடைய ப்ரபாவத்தை திருமகள், மண்மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க (ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்றும்,
     निशामयतु मां नीळा यद्भोगपटलौर्ध्रुवम्|
       भावितं श्रीनिवासस्य भक्तदोषेष्वदर्शनम् ||
நிஶாமயது மாம் நீளா யத்போகபடலௌர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்யபக்ததோஷேஷ்வதர்ஶனம்   
                                                                             (தயா ஶதகம் 8)
                                                                                
     இவளுடைய க்ருபை பகவான் பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியார் இவர்களுடைய க்ருபையைக் காட்டிலும் அதிகமானது என்றும் நிரூபித்திருக்கிறபடியால் இவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி. அதாவது பகவானுடைய ஸ்வபாவம்.
     தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்போலும் (பெரியாழ்வார் திருமொழி) என்றும் சொல்லப்பட்டது.
      பெரியபிராட்டியாருடைய ஸ்வபாவம் அவதார தசைகளில் पापानां वा शुभानां वा (பாபாநாம் வா ஶுபாநாம் வா) (ஸ்ரீமத் ராமாயணம்) என்று பேசப் பட்டுள்ளது.
    க்ஷமையே உருவம் கொண்ட ஸ்ரீபூமிப் பிராட்டியின் பெருமை
वन्दे वृषगिरीशस्य महिषीं विश्वधारिणीम्|
तत्कृपाप्रतिघातानां क्षमया वारणं यया ||
வந்தே வ்ருஷகிரிஶஸ்ய மஹிஷீம் விஶ்வதாரிணீம்|
தத்க்ருபாப்ரதிகாதாநாம் க்ஷமயா வாரணம் யயா||
                                                        (தயா ஶதகம் 7)
      இவைகளை ஆராய்ந்து பார்த்தால் பக்தர்கள் பாபம் செய்தால் அதை நன்மை செய்ததாக நினைத்துக் கொள்வானாம் எம்பெருமான். ஆனால் பெரிய பிராட்டியோ பக்தன் பாபம் செய்தானா புண்ணியம் செய்தானா என்று நினைப்பதே அனாவஶ்யம். எப்படியிருந்தாலும் அவன் நம்மால் காப்பாற்றப்பட வேண்டியவன் என்பாளாம். பூமிப் பிராட்டியோ எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு விடுகிறார்கள். இப்படி இவர்கள் மூவரும் பக்தனிடம் பாபம் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் நீளாப்பிராட்டியோ தன்னுடைய பாமாலைகளினாலும் பூமாலைகளினாலும் பகவானை மயக்கி தனக்கு அடிமையாக்கிக் கொண்டு பக்தர்களின் தோஷத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறாள். இதையே ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில்  அவிஜ்ஞாதா என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகோதாஸ்துதி முதலியவைகளில் இவளுடைய பெருமைகளையும் இவளுடைய ஸம்பந்தத்தால் இவளுடைய திருத்தகப்பனார் மஹத்தரர் என்ற பட்டம் பெற்றார் என்று அநுபவிக்கப் படுகிறது.
     8. ராம என்பது பரமபதத்திலிருக்கும் எம்பெருமானைக் குறித்தும் அநுஜ என்பது லோகரக்ஷணார்த்தமாக செய்தருளிய விபவாவதாரங்களைப் பொதுவில் குறிக்கிறதாகப்படுகிறது.
      இவ்வவதாரங்களெல்லாம் ஸத்யங்களென்றும் இவற்றில் ஈஸ்வரனுக்கு ஜ்ஞாநாதி ஸங்கோசமில்லை என்றும், இவ்விக்ரஹங்கள் ஶுத்த ஸத்வமயங்கள் என்றும், இவற்றிற்கு ஈஶ்வரேச்சா மாத்ரமே காரணம் என்றும், தர்ம ரக்ஷணம் பண்ண வேண்டும். காலமே காலம் என்றும் ஸாது பரித்ராணாதிகளே ப்ரயோஜனங்கள் என்றும், இவ்வர்த்தம் தெளிந்து அநுஸந்திப்பார்க்கு ஏக ஜந்மத்திலே ஸ்வாதிகாராநுகுண ஸமீஹித உபாய பூர்த்தியாலே ஜந்மாந்தரம் அநுபவியாதே முக்தராகலாம். (ஸ்ரீமத்ரஹஸ்யதத்வத்ரயம்) என்று அவதார ரஹஸ்யார்த்தங்களையெல்லாம் பரக்க நிரூபித்தருளியபடியினாலும் இந்த அவதார தசைகளில் பக்தர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவும் அஸுர ஸ்வபாவமுடையவர்களை மோஹிப்பதற்காகவும் சுகதுக்காதிகளைப் பாவித்ததெல்லாம் கேவலம் அபிநயம் மாத்திரம் என்று அருளிச் செய்திருப்பதினாலும் அவர்களின் தயைக்குப் பாத்திரமானார்.