சனி, 10 செப்டம்பர், 2011

அழைப்பதில்தான் எத்தனை புதுமைகள்!

10092011324

  இது இன்று கிடைத்த ஒரு அழைப்பிதழ்,

உறவினர் ஒருவரின் பேத்திக்கு ஆயுஷ் ஹோமமாம்! ஒரு பக்கம் சம்ப்ரதாயமான தமிழ் அழைப்பு! மறுபக்கம் இப்படி வித்யாசமான அழைப்பு! இங்கு ஸ்கானர் இல்லாததால் என்னுடைய மொபைலில் அதைப் பிடித்து இட்டுள்ளேன். எதையும் வித்யாசமாக, மற்றவர்கள் மனம் கவரும் வகையில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியாகவே உள்ளது. அதுவும் பட்டிக்காட்டில் 1980களில் வடிவமைத்த பத்திரிகைகளை விட்டு மாறாமல் அப்படியே பின்பற்றி வரும் அடியோங்களைப் போன்றவர்களுக்கு இவர்களைப் போன்றவர்களின் கற்பனை வியக்க வைக்கிறது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

இரயிலில் தொலைத்தால் இணையத்தில் கிடைக்குமாம்--- “புதிய தலைமுறை” சொல்கிறது.

நன்றி: புதிய தலைமுறை இதழ் செப்டம்பர் 15, 2011

 

தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டமும் ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினரும் இணைந்து தென்னக ரயில்வே கோட்டத்தின் பிரத்யேக இணைய தளத்தில் இரயிலில் தொலைந்து போன பொருட்களைத் திரும்பப் பெற கூடுதல் சேவை ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளனர்.

இந்த சேவை மூலம் ரயில் அல்லது ரயில் நிலையத்தில் தவற விட்ட தங்களது உடைமைகளை இணையதளத்தில் அடையாளம் கண்டு மீட்டுக் கொள்ளலாம். இந்தச் சேவையினை அறிமுகப் படுத்திப் பேசிய சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் எஸ். ஆனந்தராமன், “ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கண்டெடுக்கப் படும் பொருட்களின் வரவு தொடர்ச்சியாக உள்ளது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையப் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் படும். அவைகளை உரியவர்கள் தங்கள் அடையாளங்களைச் சொல்லி மீட்டுக் கொள்ளலாம். இவ்வாறு சேர்ந்த பொருட்கள் ஒரு வாரம் அங்கிருக்கும். பிறகு, காணாமல் போன பொருட்களுக்கான அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பொருட்களின் தன்மைக்கேற்ப 90 நாட்கள் வரை பாதுகாக்கப் படும். இந்தச் செயல்களை எளிமைப் படுத்தும் வகையில் இப்போது கூடுதல் வசதியாக இணைய சேவையும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட புதிய இணைய முகவரிக்குச் சென்று அங்கே உள்ள விவரங்களை சரிபார்த்து உங்களது உடைமைகளை மீட்டுக் கொள்ளலாம்” என்றார்.

இந்தப் புதிய இணையப் பக்கத்தில் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட தேதி, தொடர்வண்டி எண் அல்லது ஸ்டேஷன் பெயர், மேலும் கண்டெடுக்கப்பட்டது என்ன பொருள், அது யாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது போன்ற தகவல்கள் இருக்கும். அவற்றைச் சரிபார்த்து உங்களது அடையாளங்களைச் சொல்லி பொருட்களை மீட்டுச் செல்லலாம்.

செய்யவேண்டியவை:-

www.sr.indianrailways.gov.in என்கிற இணையப் பக்கத்திற்குச் சென்று about Sr/Department/Security/ Chennai Division என்கிற சுட்டியை தட்டவும். பிறகு,

view section content என்கிற சுட்டியைச் சொடுக்கவும்.

இப்போது, Recovery of unclaimed articles by RPF என்ற சுட்டி தோன்றும். இதையும் சொடுக்கினால்,

Recovered Articles Detail (PDF) தோன்றும். (இது ஒரு டாக்குமெண்ட் பக்கம். இதைப் பார்க்க கணிணியில் ஃளாஷ் ரீடர் அவசியம்) இப்போது உங்களின் தவறிய பொருட்களை அடையாளம் கண்டு திரும்பப் பெறலாம்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தாய்க்குலமே! தர்மத்தைக் காப்பாற்ற உங்களால்தான் முடியுமாம்!

5ம் தேதி. மாலையில் சென்னை கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஸ்ரீதரன் இன்று ஏராளமான சிஷ்யர்களின் வேண்டுகோளை ஏற்று அனுக்ரஹ பாஷணம் ஆரம்பமாகப் போகிறது என்று தகவல் கொடுத்தார். அடியேன் என்றும் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் ரகமில்லை. கிடைத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து செல்கிறவன். 40 வருடம் சேரில் உட்கார்ந்தே தூங்கிப் பழக்கமாகையால் ( இப்போது retirementக்கு அப்புறம் அந்த சுகம் இல்லை என்பது வேறு விஷயம்) அனுக்ரஹ பாஷணத்தைப் பதிவு செய்துவிட்டு சென்னை போகலாம் என்று முடிவெடுத்து சின்ன அழகியசிங்கர் ஆஸ்ரமத்துக்குப் போன போது ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களாகி விட்டது. எனவே முதலிலிருந்து ஆரம்பிக்காமல் இருக்கும் இந்தப் பதிவுக்காக அடியேனை க்ஷமிக்க வேணும்.

பூராவும் கேளுங்கள். பெண்களால்தான் தர்மங்களைக் காப்பாற்ற முடியும் என்று அழகியசிங்கர் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதை நன்கு மனத்தில் வாங்கி அவரவர்கள் வீட்டு ஆண்களை அழகியசிங்கர் திருப்பித் திருப்பிச் சொல்வதான நித்ய கர்மானுஷ்டானங்களை அனுஷ்டிக்க வைப்பது இனி உங்கள் பொறுப்பு.

   இன்று முதல் உத்தானம் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் அனுக்ரஹ பாஷணம் நடந்தால் ஸ்ரீ முத்துகிருஷணன் பதிவதாகச் சொல்லியிருக்கிறார். அடியேன் பதிந்த இந்த கடைசி ஒன்று வீடியோவாக அமைந்ததும் விசேஷமே.

திங்கள், 5 செப்டம்பர், 2011

திருப்புல்லாணியில் ஆவணி ஸ்வாதி!

மூலை கருடன்! எத்தனை பேர்கள் பார்த்திருப்பீர்கள்! எத்தனை ஊர்களில் இப்படி மூலை கருடன் என்று விசேஷமாக இருக்கின்றது என்பது அடியேனுக்குத் தெரியாது. ஆழ்வார்திருநகரி, திருக்கோஷ்டியூர், திருப்புல்லாணி போன்ற சில இடங்களிலே மட்டும் இப்படி மூலை கருடன் விசேஷமாக அமைந்திருக்கிறார். அதென்ன மூலை கருடன்? பெருமாள் கோவில் திருமதில் சுவர்களில் ஈசான்ய மூலையில் இருப்பதால் இவர் மூலை கருடன்.

இப்படி திருப்புல்லாணியில் கம்பீரமாக ஈசான்ய மூலையில் இருக்கும் கருடன் அபார சக்தி படைத்தவர். இங்குள்ளவர்களுக்கு, என்ன கோரிக்கை என்றாலும் நடத்திக் கொடுப்பவர். இவரைப் ப்ரார்த்தித்து ஒரு சிதறு காய் போட்டால் எப்பேர்ப்பட்ட சிரமமான காரியம் என்றாலும் எளிதாக நடந்து விடுவதை அனுபவிப்பவர்கள் நாங்கள். இவருக்கு ஆடி ஸ்வாதி அன்று மட்டும் மிக விசேஷமாகத் திருமஞ்சனங்கள் நடைபெற்று அமிர்தகலசம் படைப்பது எங்களூர் வழக்கம். அன்று இன்னொரு விசேஷம் கூட. மற்றைய நாட்களில் கோவிலில் எந்த விசேஷம் என்றாலும் முதல் மரியாதை இராமநாதபுரம் ராஜாவுக்கோ அல்லது அவர் ப்ரதிநிதிகளுக்கோதான். உபயதாரர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு மரியாதை என்பது அப்புறம்தான். ஆனால் இந்த ஸ்வாதியில், முதல் மரியாதை ஆழ்வார்கள் சார்பில் கோவில் முதல் தீர்த்தகாரருக்கு அப்புறம்தான் ராஜாவுக்கு!

திருமஞ்சனம் என்று எளிதாக எழுதிவிட்டேன். ஆனால் அதைப் பண்ணுவதற்குள் ஆலய அர்ச்சக, கைங்கர்யபரர்கள் படும் சிரமம் சொல்லி முடியாது. ஒரே ஒரு பாதம் மட்டும் வைக்கும் அளவில் இருக்கும் இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் நின்று அவர்கள் திருமஞ்சனம் செய்ய வேண்டும். கொஞ்சம் தவறினாலும் 30 அடியில் கீழே தரையில் விழ வேண்டியதுதான்.

இப்படி சென்ற ஆடியில் ஸ்வாதியில் விசேஷமாகத் திருமஞ்சனங்கள் நடைபெற்றபோது பெரிய அழகியசிங்கர் தற்செயலாக அங்கு வந்திருந்து முழுமையாக அனுபவித்து ஆனந்தப் பட்டதை ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அப்பொழுதே அவர் ஆவணி ஸ்வாதியில் மீண்டும் ஒரு முறை விசேஷமாகத் திருமஞ்சனம் செய்ய வேண்டுமென்று திருவுளப் பட்டதை, ஆலயத்தாரும் ஏற்றுக் கொண்டு அதன்படி இந்த ஆவணியில் மிக விசேஷமாக நடந்த திருமஞ்சனத்தின்போது இரண்டு அழகியசிங்கர்களும் எழுந்தருளி கண்டு களித்த காட்சிகளை திருப்புல்லாணி ஸ்ரீ அஹோபில மடம் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் தனது காமிராவில் பதிவு செய்திருக்கிறார்.

திருமஞ்சனத்தை மட்டும் கண்டு களித்துவிட்டுப் போகாமல், இரண்டு ஆசார்யர்களும் மிக்க பரிவுடன் தங்களைச் சூழ்ந்து நின்ற ஆடுகளின் மீதும் வாத்ஸல்யத்துடன் கருணை மழை பெய்திருக்கிறார்கள். தினமும் தங்கள் வாக்கால் உலகெங்கும் இருக்கும் சிஷ்ய வர்க்கத்தாருக்கு செவிக்கு உணவு இடுபவர்கள் அந்த ஆடுகளுக்கு வயிற்றுக்குப் பிடித்தமான உணவு அளிப்பதையும் ---- முந்திரிப் பருப்பாம், ஒரு கிலோவுக்கு மேல் இருக்குமாம், அதன்பின் ஏராளமான வாழைப் பழங்களாம் முத்துகிருஷ்ணன் சொன்னார் –  அவர் பதிந்திருக்கிறார். அந்த புகைப் படங்கள் இங்கு

Avani Swathi at Thiruppullani

Sundayன்னா மூணு

கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் ஸ்ரீ ஆதி சேதுவில் ஸ்நாநம் செய்த காட்சியினை திருப்புல்லாணி ஸ்ரீ அஹோபில மடம் மானேஜர் முத்துகிருஷ்ணன் மிக அருமையான விடியோவாகப் பதிவு செய்து பகிர்ந்து கொள்கிறார். அன்று அங்கே போயிருந்தவர்கள் வீடியோவில் இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளலாம். போகமுடியாதவர்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.

அன்று இங்கு வந்திருந்த ஸ்ரீ அய்யம்பேட்டை தேவநாத அய்யங்கார் ஸ்வாமியும் சில வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றை

http://www.youtube.com/user/rdevanathan1?feature=mhsn சென்று பார்க்கலாம்.

DSC03045இன்று 4-9-2011 திருப்புல்லாணியில் ஒரு முக்கியமான நாளாக அமைந்தது. திருப்புல்லாணி பத்மாசனித் தாயாருக்கு ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வெள்ளி ஷோடசோபசாரங்களை சமர்ப்பித்தார்கள். திருமேனி களைப்பினால் தான் வரமுடியாததால், பெரிய அழகியசிங்கர் அனுக்ரஹித்துக் கொடுத்ததை, சின்ன அழகியசிங்கர் கோவிலுக்கு நேரில் வந்து சமர்ப்பித்தார். இன்று வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சிஷ்யர்களுக்கு அது ஒரு ஆனந்த அனுபவமாக அமைந்தது. பெருமாளிடம் முதலில் சமர்ப்பித்து அவர் அனுமதியுடன்,

DSC05134

தாயாரிடம் அழகியசிங்கர் சமர்ப்பித்தது அனைவரையும் பரவசப் படுத்தியது. 2008ல், ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்தபோது பெருமாளுக்கு யக்ஞோபவீதம் சமர்ப்பித்தார். இப்போது தாயார் முறை. அதனால் ஒன்றுக்கு ஐந்தாகத் தாயார் பெற்றுக் கொண்டிருக்கிறாள்.

இங்கு இருக்கும் படங்கள் திரு முத்துகிருஷ்ணன் எடுத்தவை. அடியேன் ஏதோ அந்தக் கால மார்க்கஸ் பார்ட்லே என்ற நினைப்பில் ஒரு கையில் காமிராவும் ஒரு கையில் வீடியோ காமிராவுமாக எடுத்ததன் விளைவு விட்டலாசார்யா படங்களில் வரும் மாயா ஜாலக் காட்சிகள் போல் தெரிந்தும் தெரியாமலும் அமைந்துவிட, பாவம் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் எதையாவது எப்படியாவது சரி பண்ணி அந்த வீடியோவை மட்டுமாவது உலகுக்குக் காண்பித்து விடுகிறேன் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.

DSC03033  DSC03036

DSC03038DSC03039

DSC03043

DSC03049

DSC05144

எல்லா சந்நிதிகளிலும் மங்களாசாஸனம் செய்த ஸ்ரீமத் அழகியசிங்கர் ஒவ்வொரு சந்நிதியிலும் அந்தந்த சந்நிதியின் சிறப்புகள், அங்கு எழுந்தருளியிருக்கும் அர்ச்சா மூர்த்திகளின் விசேஷங்களை சிஷ்யர்களுக்கு அருளி பெரு மகிழ்வடைய வைத்ததும் இன்றைய தினத்தில் அடியோங்கள் பெற்ற பாக்யங்கள்.

மூன்றாவது விசேஷம் அழகியசிங்கரின் வழக்கமான அற்புதமான அருளுரை.

ஆன்லைனில் கேட்பவர்களுக்காக இங்கே!

 

இல்லை இல்லை குடும்பத்தோடு எல்லாரும் கேட்கவேண்டும் கேட்டு அழகியசிங்கர் சொல்வதைப் போல நடக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக
http://www.mediafire.com/?3u095o6ucvh5ubb