வெள்ளி, 22 ஜூலை, 2011

எங்கள் தாயார் இன்று புதிதாக அணிந்து கொண்ட திருமாங்கல்யம்

இன்று ஆடி வெள்ளி. சமீப காலமாக எங்கள் தாயார் அனேகமாக மாதந்தோறும் ஏதேனும் புதிய ஆபரணங்கள் சாற்றிக் கொண்டு அவள் குழந்தைகளை மகிழ்விப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாள். அந்த வகையில் இன்று ஒரு புதிய திருமாங்கல்யத்தை உற்சவர்  கல்யாணவல்லித் தாயார் அணிந்து கொள்ளப் போகிறாள். இன்னும் சிறிது நேரத்தில் தன் நாதனுடன் திருமஞ்சனம் கண்டருளி விசேஷ வஸ்திரங்கள் அணிந்து வந்திருப்போரை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கப் போகிறாள். அணிந்து கொள்ளப் போகும் திருமாங்கல்யம் இங்கு காணலாம். உபயதாரர் தாயார் கைங்கர்யத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று ஏனோ மறுத்து விட்டார். “பத்மாசனித் தாயார் கைங்கர்ய”த்தில் ஆனந்தம் காணும் அவருக்கு இ”ராமனு”ம் எல்லா நலன்களும் அருள வேண்டும்.

DSC02970

 

Thirumangalyam samrppaNam to  our Thiruppullani Thayar on Adi veLLi the 22nd July 2011

 

திருமஞ்சனத்துக்குப் பிறகு சர்வ அலங்காரவல்லியாய் தன்னை விட்டுப் பிரியாத நாதனுடன் இங்கு மீண்டும் வருவாள். மாலையில் உல்லாசமாய் ஊஞ்சல் கண்டருள்வாள். இரவு அந்த அற்புதமான காட்சிகளைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக