ஞாயிறு, 31 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 14


குடகில் ஒரு சிறு ஊற்றாய்த் தோன்றி படிப்படியாய் விரிந்து பின்னர் அகண்ட காவிரியாய் ப்ரவாகமாய் மாறுவதைப்போல ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளும் அனுக்ரஹ பாஷணங்கள் முதலில் 20 நிமிடங்களாய் ஆரம்பித்து சிறிது சிறிதாக ஒரு மணி நேரம் வரை நேரம் போவதே தெரியாமல் அமுத வெள்ளமாய் அமைந்து வருகின்றன. நேற்று வரை நாம் அவஸ்யம் அறிந்து கடைப் பிடிக்க வேண்டிய தர்ம சாஸ்த்ரங்களை அருளிய அழகியசிங்கர் இன்று முதல் ஆழ்வார்கள் அருளிச் செயலில் திருப்புல்லாணி பற்றி திருமங்கையாழ்வார் அருளியவற்றை அனுக்ரஹிக்க ஆரம்பித்துள்ளார். அதன் அவதாரிகையாக இன்று அவர் அருளியது நாம் எல்லாரும் அறிந்து அனுபவித்து ,அனைவரையும் கேட்டுப் பயனுற வைக்க வேண்டியதாய் அமைந்தது.
      நம் எல்லாருக்கும் அருளிச் செயல்கள் வேதங்களின் சாரம் என்று தெரியும்தான். ஆனால் யாராவது அது எப்படி என்றால் நம்மில் பெரும்பாலோர் அடியேனைப் போலவே திருதிரு ஆகிவிடுவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்ரீமத் அழகியசிங்கரோ பூர்வாச்ரமத்தில் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர். வார்த்தை வார்த்தையாகப் பொருளுணர்ந்து அனுபவித்து மகிழ்ந்தவர். அதனால் இன்று வேதமே பிரபந்தம் பிரபந்தமே வேதம் என்பதற்கு அளித்த நிரூபணங்கள் ஏராளம். அது மட்டுமல்ல, ஆழ்வார்கள் தோன்றி அருளிச் செயல்களை அருள்வார்கள், இராம சரித்திரம் நடக்கும் என்பதையெல்லாம் வேதம் முன்கூட்டியே சொல்லி விட்டது என்பதையெல்லாம் வீளங்க வைத்தார். ஸ்வாமி தேசிகன் அருளியதைப் போல, கன்றென நம்மை எண்ணி சொல்லமுதம் சொரிந்தார். வார்த்தை விடாமல் கேளுங்கள். முக்கியமாக வீட்டில் உள்ள எல்லாரையும், முக்கியமாக தங்கள் அறியாமையாலே திசை மாறி, சம்ப்ரதாயத்தின் ஏற்றம் உணராமல் இருக்கின்ற இளையவர்களைக் கேட்கச் செய்யுங்கள். ஒரு முறை கேட்டால் போதும் தன்னாலேயே ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தமை குறித்து பெருமை தானாகவே எற்பட்டுவிடும் என்பது உறுதி.
இங்கேயே கேட்க,



தரவிறக்கிக் கேட்க, சேமிக்க,
http://www.mediafire.com/?bm3a61od5qa727a
All the files are available here.
https://skydrive.live.com/P.mvc#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42!922

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக