புதன், 3 ஜூன், 2009

சரணாகதிமாலை

ந்யாஸவித்யையாவது -- ஆநுகூல்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜநம், கார்ப்பண்யம், மஹாவிச்வாசம், கோப்ருத்வ்வரணம் என்னும் இவ்வைந்து அங்கங்களோடே கூடினதாய், சரணாகதி என்றும், நிக்ஷேபம் என்றும், த்யாகம் என்றும், ப்ரபத்தி என்றும் சொல்லப் பெறுகிற ஓர் வித்யையாம். அஷ்டாங்கயோகம் என்றது போல் இவ்வங்கங்கள் ஐந்துடன் கூடின அங்கியான பரந்யாஸத்தை ஷடங்கயோகம் என்று சொல்லுவார்கள். இது ஸர்வாதிகாரம். வர்ணாச்ரம தர்மம் இதற்கு அங்கமன்று. ஸக்ருத்கர்த்தவ்யம். அந்திம ஸ்மிருதி அபேக்ஷிதமன்று. இந்த ஸரீரம் விட்டபோதே பலம்ஸித்தம் உபாஸநத்தில் சக்தி யில்லாமையும், அதற்கேற்ற ஜ்ஞானமில்லாமை யும், சாஸ்த்ராநுமதமான ஜாதி குணாதிகளில்லாமையும், பலத்தைப் பெறக் கால விளம்பம் பொறாமையும் என்னும் இந்நான்கும் தனித்தும் ஒன்றிரண்டுமூன்று களுடன் சேர்ந்தும் ப்ரபத்திக்கு அதிகாரம் ஆகும். அந்த அதிகாரமாவது 15 பிரிவாகிறது. அசக்தி மாத்திரம் 1. அஜ்ஞாந மாத்திரம் 2. சாஸ்த்ரா நநுமதி மாத்திரம். 3. விளம்பம் பொறாமை மாத்திரம் 4. அசக்தியும் அஜ்ஞாநமும் சேர்ந்து 5. அசக்தியும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 6. அசக்தியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 7. அஜ்ஞாநமும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 8. அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 9. சாஸ்த்ரா நநுமதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 10. அசக்தியும், அஜ்ஞாநமும், சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 11. அசக்தியும், அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 12. அசக்தியும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 13. அஜ்ஞாநமும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 14. அஜ்ஞாநமும் அசக்தியும் சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் இந்நான்கும் சேர்ந்து 15. இப்படி இந்நான்கும் சேர்ந்தால் ஒன்று; தனித்தனி நான்கு; இரண்டிரண்டு சேர்ந்தால் ஆறு ; மும்மூன்று சேர்ந்தால் நான்கு ; ஆகப் பதினைந்து ஆகிறது. இவைகளில் எந்த விதமான அதிகாரம் உடையவனானா லும் ந்யாஸவித்யையில் அதிகாரிதான்.
ஆழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் முதலிய பூர்வாசார்யர்கள் சக்தி, ஜ்ஞாநம், சாஸ்த்ராநநுமதி இம்மூன்றும் உடையவர்களாயிருந்தும் விளம்பம் பொறாமையாலே ப்ரபத்தியில் இழிய வேண்டி வந்தது. ஸ்ரீமந்நாதமுனிகள் யோகம் செய்தருளினதாகச் சொல்வதுண்டு. அது மோக்ஷோபாயமான பக்தி யோகம் அன்று. பகவதநுபவ ரூபமாகையாலும், ஸ்ரீராமாயணாதி பாராயணம் போலே சித்த ஸந்தோஷஹேதுவானகாலக்ஷேப மாத்ரமாகையாலும், த்வய மர்த்தாநுஸந்தாநேந ஸஹஸதைவம் வக்தா என்கிறபடியே த்வய வசநம் போலே பலரூபம்.
ஆநுகூல்ய ஸங்கல்பமாவது -- இனி நான் அநுகூலனாய் நடந்துகொள்ளக் கடவேன் என்று அபிஸந்தி பண்ணுதல். அது இருவகைப்படும். எம்பெருமான் விஷயத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பமும், ஸர்வபூதங்கள் விஷயத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பமும். இதற்குக் காரணம் இவன்தான் ஸர்வேச்வரனுக்கு ஸர்வப்ரகாரத்தாலும், சேஷபூதன் என்று தெரிந்திருக்கை. சேஷபூதன் சேஷிக்கு அநுகூலனாயிருக்க வேண்டியதுபோலே ஸர்வபூதங்களும் தன்னைப்போலே ஸர்வேச்வரனுக்கு சேஷபூதங்களென்றும் அவனுக்கு சரீரபூதங்களென்றும் இவன் அறிந்திருக்கையாலே சேஷியின் சரீரத்துக்கும் இவன் அநுகூலனாயிருக்கவேண்டியது கடமை. இதற்கு பலம்தான் ஈச்வராஜ்ஞை யைக் கடந்தானாகாமை. இதற்கு விரோதி பூதத்ரோஹம். இவன் சேஷியின் ஆஜ்ஞையைக் கடந்தானாகில் "என்னை ஈச்வரன் தண்டிப்பனேயல்லது அங்கீகரியான்" என்று தெரித்து கொள்வன் ; அதனால் ப்ரபத்தியில் ப்ரவர்த்தியான் ; ஆகையால் இவ்வழியாம் இது ப்ரபத்திக்கு அங்கம் ஆகிறது.

இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக