வெள்ளி, 21 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

சர்வஞ்ஞசிங்கப்பநாயகன் ஆசிரயித்து
விருத்தம்
திர்கொண்டுவீசுநிலவெண்ணுங்கீர்த்திக்
கவிவாதிசிங்கரருள்பிரபந்தங்கண்டே
எதிர்கொண்டுவிளங்கியமாதவன்றன்செல்வன்
சர்வஞ்ஞசிங்கநாயகனுந்தானே
எதிர்கொண்டுபணிந்துவந்தசாதனத்தை
யேற்றுமிகஞானியாயிருந்தானய்யா
முதிர்கொண்டுமதமிலாரவர்முமுக்ஷு
முத்தர்தாம்மணிவண்ணர்பத்தர்தாமே.
தரு இராகம் உசேனி தாளம் ஆதி
பல்லவி
சாந்தகுருவே -- உபயவே -- தாந்தகுருவே
அனுபல்லவி
பாந்தமுள்ள ரங்க தாந்தரடியையே
காந்தமுடன்றுதி சேர்ந்தவாதிசிங்கர் (சாந்த)
சரணங்கள்
அகந்தேநாகந்தே யென்றெடுத்தகவி
யதிலேநீலமேகமனைய வுருக்கொண்டு
சகந்தனினாதாரமாகியதிபதி
சயனபகவனை யனுதினமுங்கண்டு
உகந்ததேசிகவாக்குகளேயென்மனத்தி
லுறுதியாகவேயிருப் பதுவுமுண்டு
அகந்தையேயுனதுவிளையாடலுக்கிடம்
யானல்லபோவென்றே யாணவத்தைவிண்டு (சாந்த)
இவளவுமகிமையுள்ளார் வாசற்றிண்ணையினில்
வியாக்கியானம்புரிந்திருந்தா ரகலாது
அவளவிற்கந்தாடைத் தோழப்பர் தம்முடைய
குமாரலட்சுமணாசாரியார் வீதிமீது
தவளசங்கமுதலானவாத்தியவோசை
தரவேயெழுந்தருளிவரவு மப்போது
இவரெழுந்திருக்கவிலையாற்சாத்தாதவைஷ்ணவர்
காலைப்பிடித்திழுத்தா ரவர்தீது (சாந்த)
அடிக்குமவனேனுஞ்சபிக்குமவனேனு
மதிகடோரவார்த்தைசொல்லு மவனேனும்
படிக்குள்வேதியரேயாகிலவரெயே
பணியாதிருப்பவர்யா ரோருவரானுங்
கொடியபாவியர் பிருமரேதசாலே
கொளுத்தக்கொல்லவெகு தண்டனைகளேனும்
படுவாரென்சம்பந்தரல்லவெனுஞ்சுலோகப்
படிசிந்தித்தெழுந்துபணிந்தா ரிவர்தானுஞ் (சாந்த)
நிறைகுடந்தளும்பாதென்னும்படிக்கே
நிலையினின்றசர்வதந்திரச் சுதந்திரர்
குறைகுடங்களானாற் கூத்தாடியேநிற்குங்
கொள்கையுலகுக்காஞ் சகலமந்திரத்
துறைகளறிதவரொன்றுமறியார்போற்
சொல்வார்சரிதானேபூவி லெங்குந்தீர
மறையவர்கடுதி வைஷ்ணவசிகா
மணிவிச்வாமித்திரகோத்திர சந்திரர் (சாந்த)

சத்தியாகாலத்துக் கெழுந்தருளியது
கட்டளைக்கலித்துறை
பகரத்தினைப்பொழுதாகிலுமச்சுதன்பாதமலர்ந்
தகரத்தினாற்கொண்டுகூப்பவேகாந்தஸ்தலத்தையெண்ணிக்
ககரத்தயல்முன்விரிசூழ்ந்தசத்தியகாலமென்னும்
அகரத்திலேதேசிகர்வாசமுஞ்செய்வதாகினரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக