வியாழன், 20 நவம்பர், 2008

தரு - இராகம் - மத்தியமாவதி - தாளம் - சாப்பு
பல்லவி
சொல்லக்கேளுமே -- தேசிகர்வைபவம்
சொல்லக்கேளுமே.
அனுபல்லவி
மல்லருடன்பொருங்கச்சி வரதரருளை
யேத்திச்சொல்லுவீரேதோதாரம்மன் சுகுமாரரிவர்கீர்த்திச் (சொல்)
சரணங்கள்
நாதமிகுந்தவடக்கே யேகசீல
ராங்கரிராஜமஹேந்திர பட்டணபால
மாதவநாயகன்றன்மன தனுகூல
மைந்தன்சர்வஞ்ஞசிங்கர்க்கருளி யதுசால (சொல்)
உறுதிபரமைகாந்தி தருமத்திலேபுத்தி
யுண்டானவனாகிக் கொண்டிருப்பதைநத்தித்
திறராமானுஜதரிசனத்தை நிலைநிறுத்திச்
சிறந்திருப்பாரிவரென் றறிந்ததுவேவெற்றி (சொல்)
ஸ்ரீரங்கநகரத்தின் ஞானாதிகுணத்தேட்டுப்
பாரெங்கும் புகழிவர் ஸன்னிதிக்கன்புபூட்டும்
படிதானிரண்டுவைஷ்ணவர்களை வரக்காட்டும் (சொல்)
தத்துவ விஷயமுடன் ரகசியவிஷயமாகத்
தனக்குஞானமுண்டாக ஹிதவுபதேசமாக
வைத்தருள்செய்யவேண்டி விண்ணப்பம்பரிவாக
வரவிட்டதுங்கண்டு வகையும்விவரமாக (சொல்)அந்தவகையுள்ளவன்மனத்தைச் சோதித்துக்கொண்டு
அறிந்துசுபாஷிதநீவி யென்பதுகண்டு
சந்ததத்துவரகசிய சந்தேகமென்றிரண்டு
தாமிந்தமூன்றுகிரந்தஞ்செய்தாரின்னமு முண்டு (சொல்)
சத்துக்களாம்பெரி யோர்களைநீநாடு
சமயாசாரமதை நிலைநிறுத்தவுங்கூடு
உற்றபிரஹ்மஞான விரோதரைத்தள்ளிப்போடு
உண்மையிதென்றுமின்ன மெழுதியதின்சூடு (சொல்)
எந்தநாளுமுனது பாரமெல்லாமுற்று
லக்ஷ்மிநாயகரிடமது தனிலேவைத்து
கந்தபயோதரத்தை நாடுஞ்சாதகமுற்றுக்
கார்மேனியனைநாடென் றெழுதியதையுற்று (சொல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக