வியாழன், 1 செப்டம்பர், 2011

திருப்புல்லாணியில் நேற்றும் இன்றும்

திருப்புல்லாணியிலிருந்து எங்கள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மானேஜர் ஸ்ரீமான் ஸ்ரீதர், “30-8-2011 மற்றும் 31-8-2011  இரு நாட்களும் ஏராளமாகக் கூடியிருந்த சிஷ்யர்களின் ப்ரார்த்தனையின்பேரில் ஸ்ரீமத் 46ம் பட்டம் அழகியசிங்கர் அனுக்ரஹ பாஷணங்கள் அருளினாரென்றும், 30ம் தேதி சரியாகப் பதிவு செய்ய முடியவில்லையென்றும், நேற்று 31ம் தேதி பதிவு செய்ததாகவும்” சொல்லி பதிவு செய்த அனுக்ரஹ பாஷணத்தை அடியேனுக்கு மெயிலில் அனுப்பியிருந்தார். அதை கீழே உள்ள லிங்குகளில் சென்று கேட்கலாம்.

இன்று 1-9-2011 காலை அபிகமன ஆராதனங்களுக்குப் பின் இரு அழகியசிங்கர்களும் இன்று அங்கு பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சுமார் 250+ சிஷ்யர்களுடன் ஸ்ரீசேது சமுத்திர ஸ்நாநம் கண்டருளினார்கள் என்று திருப்புல்லாணியிலிருந்து சற்று முன் செய்தி வந்திருக்கிறது. திருப்புல்லாணி  ஸ்ரீஅஹோபில மடம் மானேஜர் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் ஏராளமான படங்களாகவும் முழுமையான வீடியோவுமாகவும் அந் நிகழ்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இது தவிர வந்திருந்தோரில் அனேகர் தங்கள் காமிராக்களில் அதைப் பதிவு செய்திருக்கிறார்களாம். அடியேன் எப்போது இந்தப் புகைப் படங்கள்/ வீடியோக்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடியுமோ தெரியவில்லை. அதற்கு முன் சேதுக்கரையில் இன்று இந்த பாக்யத்தை அனுபவித்தோரில் யாராவது உலகத்தாருடன் அந்த சந்தோஷமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டால் அது மிக விசேஷமாக அமையும்.

31/8 அன்றைய அனுக்ரஹ பாஷணத்தை on lineல் கேட்க

 
To download from mediafire

1 கருத்து:

  1. Swamin

    Some of the pics taken are shared herewith.

    https://picasaweb.google.com/117815095400308388173/ThiurppullaniUpload?authkey=Gv1sRgCPqvlJqj2_zZBQ

    பதிலளிநீக்கு