செவ்வாய், 27 அக்டோபர், 2009


இன்று இப்போது அலுவலகத்தில் இருக்கும்போது அடியேன் மீது அதிகப் பிரியம் உள்ள டெல்லி அன்பில் ஸ்வாமி அனுப்பிவைத்த  புத்தக பார்சல் அருகிலுள்ள பெரிய மூடை.ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தால் அடியேனுக்குக் கிடைத்த பெரிய பாக்யங்கள் பலவற்றுள் அன்பில் ஸ்வாமியின் நட்பும் அதனால் ஏற்பட்ட அந்யோந்யமும் ஒன்று. உள்ளே எத்தனை பொக்கிஷங்கள் உள்ளனவோ இரவு வீடு திரும்பிய பிறகே தெரியும். அன்பில் ஸ்வாமி, டெல்லியிலிருந்து பெருங்களத்தூருக்கு வந்து இனி வசிக்கப் போகிறார். அதனால் அவர் இத்தனை நாள் பாடுபட்டுச் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களையெல்லாம்  அடியேனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.   உள்ளே என்ன இருக்கிறது என்று வீடு திரும்பும்வரை உங்களைப் போலவே அடியேனும் ஸஸ்பென்ஸுடன் காத்திருக்கிறேன். ஏற்கனவே அவர் அனுப்பி வைத்தவைகளைப் பதிவு செய்யவே அடியேன் வாழ்நாள் காணாது. அவைகளுடன் இவைகளையும் வலையேற்றி தமிழ் அபிமானிகளுடன் பகிர்ந்து கொள்ள என்றும் அடியேனை ரக்ஷிக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் திருவடிகள் துணை நிற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக