ஞாயிறு, 21 டிசம்பர், 2008

திருவருட்சதகமாலை

நிசாமயதுமாம் நீளாயத்போக படலைத்ருவம்

பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்ய பக்ததோ ஷேஷ்வதர்சநம்   8.

ஏகசர ணன்பரக மேதுமது காணா

வாகுதரு மாணிமறை யாணையன் விழிக்கோர்

போகுறும யக்களிபி ணைப்படல டைத்தே

ஈகைமிகு சீலநல நீளையெனை நோக்கும்.                    8.

 

யாருடைய போகமயக்குகளினால் பக்தர்களின் குற்றங்களைப் பார்க்க வொட்டாமல் ஸ்ரீநிவாஸனுடைய கண் மறைந்தது போல அவர் அக்குற்றங்களை அறவே நோக்காதது போல இருப்பாரோ அந்த நீளையென்னும் பிராட்டி அடியேனைத் தனது நீண்ட கண்களால் நோக்கி யருளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக