ஞாயிறு, 3 பிப்ரவரி, 2008

திருவருட்சதகமாலை

அநுசரசக்த்யாதி குணாமக்ரேஸர போத விரசிதாலோகாம்
ஸ்வாதீ நவ்ருஷகிரிசாம் ஸ்வயம் ப்ரபூதாம் ப்ரமாணயாமிதயாம்   11.

பின்னடைச் சத்தி யாதிப் பண்புநின் பாங்கு தாங்க
முன்னடைப் போத வெள்ளச் சுடருனக் கொளிதெ ளிக்க
நின்னயத் திருவ னென்றே நடைத்திரு விடப வெற்பன்
தன்மையொன்றுணர்த்து மாட்சித்தயையுனைத் தெரியக் கண்டேன்.  11.

சக்தி,பலம்,ஐசுவரியம்,வீரியம்,தேசுஎன்னும் குணங்களைத் தனக்குப்பின் தொடரும் ஊழியக்காரர்களாகவும், ஜ்ஞாநம் என்னும் குணம் தனக்கு முன்கையில் விளக்கை வைத்துக் கொண்டு வழிகாட்டிக்கொண்டு போகும் வெளிச்சத்தை உடையவளாயும், வேங்கட வெற்பனைத் தனக்கு ஸ்வாதீந மாக உடையவளாயும், தானே பிரபுவாயும், தானே ஆவிர் பவிப்பளாயும் உள்ள தயாதேவியே கதியென்று அவளைச் சரணம் புகுகின்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக