சனி, 1 டிசம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு-இராகம்-சவுராஷ்ட்ரம்-தாளம்-- ஆதி

பல்லவி

பிள்ளையென்றாலிவரே       பிள்ளை
ப்ரபலங்கொண்டதூப்புற்     பிள்ளை                 (பிள்)

அநுபல்லவி

வெள்ளைப்பரிமுகங்    கொண்டார்
  மிகுந்துலாலாமுத      முண்டார்                         (பிள்)

சரணங்கள்

ஏற்குங்கோயிலுக்கே      நண்ண
   எழுந்தருளியோர்நா     ளுண்ண
மார்க்கத்திற்றளிகை       பண்ண
    வாய்க்காமலரியை     யெண்ண

வழியிலங்கடியிலுள்ள   அவரைது
   வரைகோதுமைகொள்ளுமுதலாகியவற்றைப்
பழுதில்லாதவேதம்பரவுமெங்கள்வெள்ளைப்
   பரிமுகரமுதுசெய்திடவைத்தாரே.                       (பிள்)

கோமுட்டிகள்கண்டு       வெள்ளைக்
    குதிரையாரதிந்தக்      கொள்ளை
தாமிட்டுத்தின்பதும்         சள்ளை
   தானென்றோட்டிவிடப்  பிள்ளை
திரைவர்ணிகராகும்வைஷ்ணவர்க்ருஹத்தில்
   தங்கவங்கணுமப்படிக்கேசெய்தருள
இவ்வண்ணஞ்செய்ததிதாரதெனவேவேங்க
  டேசதேசிகரதென்றறியவைத்த                              (பிள்)

இம்மஹிமையுள்ள               வரிங்
   கிவரைவந்தேயெல்லாந்    தெரி
யும்முடையவெள்ளைப்        பரி
   யோங்கியெங்கடலைப்    பொரி
உள்ளவையெல்லாந்தின்றதிருகால்முக்கால்நாற்கா
    லோட்டிவிடப்போகவில்லைநீர்கட்டுமென்றார்
பிள்ளைவெள்ளைப்பரிமுகரேபட்டினி
   பொறாதமுதுசெய்தகிருபையறிந்தனரே                  (பிள்)

பரமாத்துமசமாரா          தனம்
  பண்ணாதிருந்தவ        யனம்
தெரிவார்பாலமுத          சனஞ்
  செய்யும்விதிகண்ட       தினந்
திருக்கண்வளரப்பிள்ளையக்ரீவருஞ்
     சிறந்துபூரணராயெழுந்தருளினாரே
பெருக்கமிகுமிதைத்திரைவர்ணிகர்கண்டு
     பிரபலவதிசயந்தனைக்கொண்டாடினாரே              (பிள்)

விருத்தம்

வித்தியாவைபவரானவிவர்தாமுஞ்சீர்
      வெள்ளறைப்பங்கயச்செல்விபுருஷகார
சத்தியானுசரிதமாய்க்கொண்டுமேசெந்
      தாமரைக்கண்ணரைத்தொழுதுதிருக்காவேரி
மத்தியராமரங்கரடிபணிவாரங்கே
      வந்துதொண்டுசெய்தவைஷ்ணவர்க்காக
நித்தியானுஸந்தேயரகஸ்யார்த்தங்கள்
     நிலையிட்டார்மகிமையுள்ளகலையிட்டாரே.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக