வெள்ளி, 28 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

 விகாஹே தீர்த்த பகுளாம் சீதலாம் குருஸந்ததிம்
ஸ்ரீநிவாஸ தயாம் போதே : பரீவாஹ பரம்பராம்  2.

வளத்திரு மலர்மகள் வலத்துறை யுமார்வன்
உளத்திரு வருட்கட லுகத்தலி லுகுக்கும்
வளத்தெழு பெருக்கென வரப்பெறு முறைத்தண்
ணளித்திரு குருப்பர வணித்துறை குளித்தேன்.

[திருமாமகள் வலத்துறையு மார்வனான அண்ணலின் அருளாகிய ஒரு பெரிய ஏரியிலிருந்து ஓடி வரும் பெருக்குகளான குளிர்ந்த குருபரம்பரையில் உள்ள அநேக துறைகளில் இறங்கி நீராட்டம் செய்கிறேன்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக