செவ்வாய், 7 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

इच्छासारध्यसत्यापित गुणकमलाकान्तगीतान्तसिध्ध्य-

च्छुद्धान्ताचारशुद्धैरियमनघगुणग्रन्थिबन्धानुबद्धा |

तत्तादृक्ताम्रपर्णीतटगतशठजित् दृष्टसर्वीयशाखा

गाथातात्पर्यरत्नावलिरखिलभयोत्तारिणी धारणीया ||

இச்சா ஸார‌த்ய‌ ஸ‌த்யாபித‌குண‌ க‌ம‌லாகாந்த‌ கீதாந்த‌ ஸித்ய‌த் சுத்தாந்த‌ ஆசார‌ சுத்தை: --தானே விரும்பி ஆசையோடு செய்த‌ தேரோட்டும் தொழிலினால் உண்மையாகக் காட்ட‌ப்ப‌ட்ட‌ ஸௌல‌ப்ய‌ம் முத‌லிய‌ குண‌ங்க‌ளையுடைய‌ ச்ரிய‌:ப‌தியின் ச‌ர‌ம‌ சுலோக‌த்தால் (கீதை 18 – 56ம் சுலோக‌த்தால்) ஏற்ப‌ட்ட‌ அந்த‌:புர‌த்து ஒழுக்க‌த்தால் (வேறு உபாய‌த்தையும் ப‌ல‌னையும் நாடாத‌ த‌ன்மை முத‌லிய‌வ‌ற்றால்) மிக‌ ப்ர‌ஸித்த‌ர்க‌ளான‌ ப‌ர‌மைகாந்திக‌ளால்,

அந‌க‌ குண‌க்ர‌ந்தி ப‌ந்தானுப‌த்தா – குற்ற‌ம் க‌ல‌வாத‌ சிற‌ந்த‌ குண‌ங்க‌ளின் குழுவின் தொட‌ர்புடைய‌தாயும், அகில‌ ப‌யோத்தாரிணீ : ஸ‌ம்ஸார‌ம் அனைத்தையும் போக்க‌வ‌ல்ல‌துமான‌, இய‌ம் -- இந்த‌, தத்தாத்ருக் – அள‌வ‌ற்ற‌ பெருமையையுடைய‌, தாம்ர‌ப‌ர்ணீ த‌ட‌க‌த‌ --தாம்ர‌ப‌ர்ணீ நதிக்க‌ரையில் திருவவ‌தார‌ம் செய்த‌ருளி, ச‌ட‌ஜித் – ந‌ம்மாழ்வாரால், த்ருஷ்ட‌ --காண‌ப்ப‌ட்ட‌, அதாவ‌து ப்ர‌த்ய‌க்ஷீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌, ஸ‌ர்வீய‌சாகா – எல்லோரும் க‌ற்க‌ உரிய‌ த‌மிழ்ம‌றையின், காதா தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ – பாசுர‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளாகிய‌ ர‌த்ன‌ங்க‌ளின் குவிய‌லை வெளியிடுகின்ற‌ இந்த‌ தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளி என்னும் ஸூக்தியான‌து, தார‌ணீயா –ஹ்ருத‌ய‌த்திலே த‌ரிக்க‌த்த‌க்க‌தாகும், அனுஸ‌ந்திக்க‌த்த‌க்க‌தாகும் என்ற‌ப‌டி.

இந்த‌ க்ர‌ந்தத்திற்கு அதிகாரிக‌ளை – “இச்சா” இத்யாதியால் அருளிச் செய்திருக்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரதானமான சரணாகதியை விதிக்கிற ஸ்ரீகீதை 18 - ம் அத்யாயம், 88-ம் சுலோகம் சரம சுலோகம் என்னப்படும். இது கீதையின் இறுதியில் கூறப்பட்டிருப்பதினால் 'கீதாந்த” என்னப்பட்டது. இதில் நிஷ்ட்டையுடைய பாகவதர்களின் அனுஷ்டானம் அந்த:புர ஒழுக்கம் எனப்படும். இவர்கள்தாம் பரமைகாந்திகள் என்னப்படுமவர்கள். அப்படிப்பட்ட பாகவதர்களினால், கீழ் இரண்டாம் சுலோகத்தில், *அநுபதிவிபுதை:அர்த்தித" என்பதை இங்கு இப்படிக் கூறியபடி. ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனான பகவானுடைய திருக்கல்யாண குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் ‘அநககுண’ என்னப்பட்டது. ‘க்ரந்தி பத்தானுபத்தா " என்றது அந்தக் குணங்களை ஒருமாலையாகக் கோத்துக் காட்டியபடி என்றபடி.

தத்தாத்ருக்" என்கிற விசேஷணம் தாம்ரபர்ணிக்கும், சடஜித்தான ஆழ்வாருக்கும் தாத்பர்ய ரத்னாவளி என்பதற்கும், ஸர்வீயசாகா என்பதற்கும் விசேஷணம், தத்தாத்ருக் தாம்ரபர்ணி தடகத என்றது கலியுகத்தில் நாராயண பராயணர்கள் பலர் அவதரிக்கப்போகிறார்கள் என்று ஸ்ரீபாகவதத்தில் கூறும்பொழுது முதல் முதலில் எடுக்கப்பட்ட ஏற்றம் பெற்ற தாம்ரபர்ணி என்றபடி,

தத்தாத்ருக் சடஜித் ’ என்று ஆழ்வாருடைய அவதார வைலக்ஷண்யம் தெரிவிக்கப்படுகிறது. ஸாமாந்ய குழந்தையைப் போலப் பிறந்தபோதிலும் பிறந்தபிறகு ஸ்தத்யபாநாதிகளுள் ஒன்றும் செய்யாமல் பகவதநுபவத் தினாலேயே வளர்ந்த ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது. தத்தாத்ருக் தாத்பர்ய ரனாவளி: ' என்று வக்த்ரு வைலக்ஷண்யம் ஸூசிப்பிக்கப்படுகிறது.

தத்தாத்ருக்ஸர்வீயசாகா என்பதினால் த்ரைவர்ணிகர்களினால் மட்டும் அத்யயனாதிகள் செய்யப்படக் கூடிய ஸம்ஸ்க்ருத வேதம் போலன்றிக்கே ஸர்வரும் அதிகரிக்கலான உத்கர்ஷம் பெற்றிருப்பது கூறப்பட்டதாகும். இந்த ஏற்றம் வேறொரு முகமாக இறுதியில் ‘ச்ராவ்யவேதாத்" ன்ன்று அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்திரிகையின் இறுதியில் இதே விசேஷணத்தை தத்தாத்ருக் குருத்ருஷ்டிபாத மஹிம க்ரஸ்தேந யச் சேதஸா என்று அனுஸந்தித்திருப்பதைப் பார்த்தால் இது ஆழ்வாருக்கு விசேஷணம் என்றேற்படும். நம்மாழ்வாருக்கன்றோ இந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்தக் கலியுக ஆரம்பத்தில் ப்ரதமப்ரவர்த்தகராயும் பின்பு ஒரவஸரத்தில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அதை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவராயும் இருக்கும் ஏற்றம்! அங்கு கீதோபநிஷத்தை வியாக்யானம் செய்வதற்கு ஆசார்யர்களின் அனுக்ரஹத்தின் பெருமையைக் குறிப்பிடுவதற்காக இதே பதம் ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது என்றறியவும்.

காதா என்றது ச்ருணுகாதாம்புராகீதாம் என்றதற்கு ஸ்ரீஅபய ப்ரதான ஸாரத்தில் :’கண்டு என்பான் ஒரு மஹர்ஷி கண்டதொருகாதை கேளிர்" என்றருளிச் செய்திருப்பது நினைவூட்டப்பட்டு, ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஸ்ரீத்ரமிடோபநிஷத் எனப்படும் திருவாய்மொழியாகிற பாட்டுக்கள் குறிப்பிடப் படுகின்றன

அகில பயோத்தாரீணி என்னும் பதம் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பதினால் எல்லா பயங்களிலிருந்தும் விடுபடுவான் என்ப்தைக் கூறுகிறது

இப்படி உபோத்காத ரூபமாக ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பெருமையைப் பத்து சுலோகங்களினால் ப்ரதிபாதித்தபிறகு, பத்து பத்துக் குணங்களை நிரூபிக்கும் 100 சுலோகங்களும், இதில் அஞ்சிறைய மடநாராய் திருவாய்மொழியில் ஆசார்யகுணரூபமாக ஒரு சுலோகமும், சீலமில்லாச் சிறியனேலும் என்கிற பாட்டுக்கு அர்த்தாந்தரரூபமாக ஒரு சுலோகமும், நண்ணாதார் முறுவலிப்ப என்பதற்கு அர்த்தாந்தரமாக இரண்டு சுலோகமும், பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட ஒவ்வொரு பத்தில் உள்ள பத்துத் திருவாய்மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களைக் கூறும் 10 சுலோகங்களுமாக 114 சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன. இவை மேலே அந்தந்தத் திருவாய்மொழிகளுக்கு முன்பு அச்சிடப்பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக