சனி, 11 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

நிகமனத்தில் ஆறு சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அதில் 128-ம் சுலோகத்தில் பத்துப் பத்துக்களினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணவிசேஷங்களைக் காட்டா நின்றுகொண்டு, திருவாய்மொழிக்கு ப்ரதானார்த்தமாய், கீழ் நிரூபித்த ச்ரிய:பதியாகிற பகவான் தன்னை அடைவதற்குத் தானே உபாயம் என்பதை மறுபடியும் வற்புறுத்துகிறார், மேல் 128-ம் சுலோகத்தின் அர்த்தம் கீழே நம்மாழ்வாரின் வைபவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

127-ம் சுலோகத்தில் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பவர்களின் மனோபாவம் இருக்கும்படியை வெளியிட்டருளுகிறார்.

ச்ரிய:பதியாய் எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் முதலிய வைகளை யுடையவனாய் ஸர்வஜ்ஞனாய், ஸர்வ சக்தியாய், ஸமஸ்த சேதனாசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் இருக்கும் பகவான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்ட ரக்ஷண பரத்தையுடைய நமக்கு இனி முக்திபெறுவதற்குச் செய்ய வேண்டிய கார்யம் என்ன? நமக்கு கிட்டாதது என்ன? என்ன துக்கம் ஏற்படப்போகிறது? இனி யாருக்குக் கடவோம்? இவை ஒன்றுமில்லையென்றபடி. இப்படிப்பட்ட அத்யவஸாயத்தைப் பெற்றவர்கள் ஸர்வோந்நதர் என்று திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கும் ப்ரபந்தங்கள் பல இருந்தபோதிலும் அவைகளுக்கு இத்திருவாய்மொழியின் பெருமையில்லை. இந்த ப்ரபந்தமொன்றுமே மற்ற சாஸ்திரங்களில் ஸாரமாக அறிய வேண்டும் என்று கூறப்பட்ட அர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் ஸாரதமமான அர்த்தத்தைக் கூறுகின்றது என்று இதன் ஸர்வோத்தமத்வத்தை வெளியிடுகிறார் 128-ம் சுலோகத்தில். இதன் தாத்பர்யம் முகவுரையில் 68-ம் பக்கம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேல் இரண்டு சுலோகங்களிலும் இந்த க்ரந்தத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்ட அர்த்தங்களே ப்ரமாணதமங்கள் என்றும், இப்ரபந்தத்தின் அவதார வைலக்ஷண்யத்தாலும் இது மற்ற ப்ரபந்தங்களை! விட உத்க்ருஷ்டமானது என்றும் நிரூபித்தருளுகிறார். அதாவது இத்த ஸங்க்ரஹமே எம்பெருமானும் அவனுடைய அடியார்களான பாகவதர்களும் உகப்பதாயிருக்கும் என்றபடி

இத்தம் - இவ்வாறு ஸத்ஸம்ப்ரதாயக்ரமஸமதிகத --எம்பெருமான் தொடக்கமாக ஸ்வாசார்யரான கிடாம்பி இராமானுசப் பிள்ளான் வரையிலான ஆசார்ய பரம்பரையினால் அடையப்பட்டதாய். அதாவது அவர்களுடைய க்ரந்தங்களினாலும் அவர்களுடைய உபதேசத்தினாலும் அவர்களுடைய அனுக்ரஹத்தினாலும் தாம் பெற்றதாய்

அசேஷ வர்ணார்ஹவேத -- எல்லா வர்ணத்தார்களும் அதிகரிக்கக் கூடிய வேதமாய் இருக்கும் திருவாய்மொழியில்

ச்ரத்தாசுத்தாசயாநாம் – ருசியையுடையவர்களாய் அத்தால் பரிசுத்த மான மனதுடன் கூடியவர்களான பாகவதோத்தமர்களுக்கு

அநகம் கெளதுகம் வேங்கடேச: அகடயத் - வென்றிப் புகழ் திருவேங்கடநாதனாய் அவதரித்தவர் எல்லையில்லாத சந்தோஷத்தை உண்டாக்கினார்.

தஸ்ய ஸம்யக்த்வே -- இது உண்மை என்பதைக்கூறும் விஷயத்தில் ஸாக்ஷாச்சடரிபு: அதவாஸர்வஸாக்ஷீஸ ஸாக்ஷீ - ஆழ்வார்தாமேயும் அன்றிக்கே எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாய் இருக்கும் ஸர்வேச்வரன் தானும் ஸாக்ஷியாக ஆவர்கள்,

ஸாவத்யத்வேபிபி பஜதாம் அப்ரகம்ப்யானுகம்ப ஸோடும் ப்ரபவதி ஸாவத்யத்வேபி என்று நைச்யானுஸந்தானம் செய்கிறபடி. இதில் யாதொரு தோஷமுமில்லை. அப்படி எங்காவது தோஷமிருந்தாலும் கூட ஆச்ரிதர்களிடத்தில் நிரவதிக ப்ரீதியையுடைய பகவான் அதைப் பொறுத்தருளுவன் என்றபடி. இங்கு தமிழ் மறைகளின் அனுபவ பரீவாஹமான ஸ்ரீஸ்தோத்திரத்திற்கு வ்யாக்யானமிட்டருளி அதன் இறுதியில்,

‘उपनिषदुपधेयस्तोत्रतात्पर्यमेतत् यतिपतिरवधत्ते यामुनार्य स्वय वा’

என்றனுஸந்தித்திருப்பது நினைக்கத்தக்கதாகும்,

இந்த க்ரந்த அவதரணத்தின் சீர்மையை வெளியிடாநின்று கொண்டும் இதன் வக்த்ரு வைலக்ஷண்யத்தை நிரூபித்துக் கொண்டும் க்ரந்தத்தை உபஸம்ஹாரம் செய்து, இது எம்பெருமான் திருவுள்ளமுகந்ததாயிருக்கும் என்று ஸாத்விகத்யாகம் செய்தருளுகிருர்,

சரணாகதிவேதம் என்று கொண்டாடப்படும் பெருமையை உடைய ஸ்ரீராமாயணம் சோகத்தின் பரீவாஹமாய் உண்டானது. ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்திருந்த இரண்டு க்ரெளஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற வேடனைப் பார்த்ததினால் உண்டான துக்கத்தின் மிகுதியினாலன்றோ ராமாயணம் உண்டாயிற்று,

அப்படியே அர்ஜுனனுடைய துக்கத்தைப் பொறுக்கமுடியாதவனாய்த் தன்னுடைய அபார காருண்யத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன் கீதோபநிஷத்தை வெளியிட்டான். ஆழ்வார் திருவாய்மொழியோ பகவானுடைய எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை உள்ளபடியே அனுபவித்துத் தாம் அனுபவித்தபடியே பேசும் ப்ரபந்தமாகையினால் அவை இரண்டிலும் இதற்கு வாசி காட்டப்பட்டது.

சோகாச்லோகத்வம் அப்யாகதஇதி நயத - சோகத்தின் பரீவாஹத்தினால் ச்லோகம் உண்டாயிற்று என்கிற ந்யாயத்தினால்,

சுத்தபோதார்ணவோத்யந் நாதா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத: - ஆழ்வாருடைய மயர்வற்ற மதியான ஸமுத்திரத்தில் உண்டாகியதாய், அனேகம் விதங்களான பகவதனுபவ பரீவாஹமாகிய-அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களில் ஒன்றை அனுபவிக்கப்புக்கு, அது மற்றொரு குணானுபவத்தில் மூட்ட, இப்படியே மேன்மேலும் அவனுடைய கல்யாண குணங்க்ளைப் பல விதமாக அனுபவித்ததின் பரீவாஹமாக வெளிப்பட்டதன்றோ இத்திருவாய்ம்மொழி என்றபடி.

‘ச்ராவ்யவேதாத்’ என்பதினால் இது மிகவும் ச்ராவ்யமான வேதம். அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களையே ப்ரதி பாதிக்கிறபடியினாலே மனதிற்கு ஆஹ்லாதத்தை உண்டாக்குகிறபடியினால் கேட்கத்தக்கது என்பதும், இசையுடன் கானம் செய்யப்பட வேண்டியதாகையால் எல்லோருடைய மனதைக் கவரக்கூடியது என்பதும், எல்லா வர்ணத்தாராலும் கேட்கத்தக்கது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

வேதாந்தாசார்யக ஸ்ரீபஹுமதபஹுவித் வேங்கடேசோத்த்ருதா – வேங்கடேச: என்று அவதார ப்ரபாவமும், ‘வேதாந்தாசார்யக’ என்று பிறந்து படைத்த ப்ரபாவமும், பஹுமத பஹுவித் என்று ஆசார்யர்களின் அணுக்ரஹத்தினால் பெற்ற ஏற்றமும், அதடியாகத் தாம் பெற்ற பாகவதர்களின் பஹுமானமும் தெரிவிக்கப்படுகின்றன.

“ரம்யா " இத்யாதி - ச்ராவ்ய வேதமான திருவாய்மொழியிலிருந்து வேங்கடேசனால் கடைந்தெடுக்கப்பட்டு, மாலையாகக் கோக்கப்பட்ட இந்தத் தாத்பர்ய ரத்னாவளியானது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும் என்று ஸாத்விக த்யாகம் செய்தருளியபடி. ஸ்ரீசரணாகதி கத்யத்தில் “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்ஸ்வ” என்பதற்கு ஸ்வாமிதேசிகன் தாமே ஸ்ரீரங்கம் என்றது மற்ற ஸத்வோத்தர க்ஷேத்திரங்களுக்கு உபலக்ஷணமாகக் கடவது என்று நிர்வஹித்தருளியதைப் பின்பற்றி, இங்கே ஸ்ரீரங்கநாதன் ப்ரீதி அடைவான் என்றதும் இத்திருவாய்மொழியைத் திருச்செவி சாற்றியருளுகிற மற்ற நூற்றேழு திருப்பதிகளிலுமுள்ள எம்பெருமான்களும் ப்ரீதி அடைவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.

ஆக இப்படிக் கீழ் ஸ்ரீ தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம் இவற்றைக் கொண்டு திருவாய்மொழியின் அர்த்தஸங்க்ரதாம் உபபாதிக்கப்பட்டது. ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதந குண ஸ்தோமகர்ப்பம் முநீந்த்ர:” என்கிறபடியே திருவாய்மொழியில் ஒவ்வொரு பாட்டும் பகவானுடைய குணங்களை உட்பொதிந்துக் கொண்டிருக்கும். ஆனாலும் சில பாட்டுக்களின் ஸங்க்ரஹ சுலோகத்தில் குணம் ஸ்பஷ்டமாகக் கூறப்படவில்லை, சில இடங்களில் ஆதி பதத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றை விவரிக்கவேண்டும் என்று சிலருக்கு அபிப்ராயம். ஆகிலும் ஸ்வாமிதாமே ஸ்ரீதத்துவமுக்தா கலாபத்தின் இறுதியில் அருளிச்செய்திருப்பதை அடியொற்றி அவற்றை விவரிக்க வில்லை. மேலும் ஸ்வாமியின் வாக்கைக்கொண்டே நிரூபிக்கப்படும் குணவிசேஷங்களுக்கு ஸத்ருசமாக மற்றெரு பதத்தைக் குறிப்பிடுவதும் அபசாரமாகுமன்றோ என்று அவை விவரிக்கப்படவில்லை,

பிற்பட்ட வ்யாக்யாதாக்களான ஒன்பதினாயிரப்படிக்காரருக்கும் பதினெண்ணாயிரப் படிக்காரருக்கும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி சுலோகத்தில் எந்தப் பதம் எந்தப் பாட்டின் அர்த்த ஸங்க்ரஹம் என்கிற விஷயத்தில் சிற்சில இடங்களில் அபிப்ராய பேதம் காணப்படுகிறது. கூடிய வரையில் இவர்களைப் பின்பற்றியே திருவாறாயிரப்படிக்கு அனுகுணமாக ப்ரதிபாதித்த குணங்கள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக