திங்கள், 20 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

எம்பெருமானார் திருவாய்மொழிக்குத் தம் சிஷ்யர்களில் ப்ரதானமானவரும், தம்மால் ஜ்ஞான புத்திரரென்று அபிமானிக்கப்பட்டவரும், தமக்குப் பிறகு உபய வேதாந்த ஸிம்ஹாஸனத்தில் மூர்த்தாபிஷிக்தருமான திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கொண்டு திருவாறாயிரப்படி என்னும் வ்யாக்யானத்தை வெளியிட்டு, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்கு முதல் முதலிலே ப்ரவசனம் செய்தருளினார். சந்தமிகு தமிழ் மறைகளின் அனுஸந்தானத்தின் பரீவாஹமாய்ப் பெரிய முதலியார் அருளிச்செய்த ஸ்தோத்திரத்தைப் பல தடவை அனுஸந்தானம் செய்ததினால் ஸுப்ரதிஷ்டிதமான ஜ்ஞானத்தால் எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யத்தில் திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களையே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யம் மங்கள சுலோகத்துக்கு மூலம்

'துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய்

இன்பமில் வெந்நரகாகி இனியநல் வான் சுவர்க்கங்களுமாய்

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால்

இன்புறுமிவ் விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்ல லிலனே

என்னும் திருவாய்மொழிப்பாட்டு ( 3-10-7) இதின் திருவாறாயிரம் -- "நிகில ஜகதுதய விபவ லயாதிலீலனாய்" என்று. "இன்புறும் இவ்விளையாட்டுடையான்" என்றதையே எம்பெருமானார்

अखिलभुवनजन्मस्थेमभङ्गादिलीले

என்றருளிச் செய்திருப்பது. அப்படியே ஆழ்வார் முதல் திருவாய்மொழியில் 7ம் பாட்டில்

உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து, உளன் சுர்மிகு சுருதியுள் என்றதையே

श्रुतिशिरअसि विदिप्ते ब्रह्माणि श्रीनिवासे என்றருளிச் செய்திருக்கிறார். உபக்ரமம் இப்படி. மேல் உபஸம்ஹாரம் எப்படி எனப் பராமர்சிப்போம். இறுதி ஸூத்திரம் 'இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தினால் முக்தி அடைந்தவன் மறுபடியும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை -- அப்படியே ச்ருதிகளில் கூறப்பட்டிருப்பதினால்' என்பது. இதன் ஸ்ரீபாஷ்யத்தில் பகவத் ஸங்கல்பத்தினால் ஆத்மா முக்தி அடைகிறபடியினாலே பகவான் ஸ்வதந்த்ரன். அவன் திருப்பி அனுப்பாவிட்டால் என் செய்வது என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் இந்த ஸூத்திரத்தில் கூறப்படுகிறது என அவதாரிகையை அருளிச் செய்து திருப்பி அனுப்பமாட்டான் என்பதற்கு ப்ரமாணம் வேதங்களே -- எப்படி எம்பெருமான் உளன் என்று வேதங்களிலிருந்து அறியப்படுகிறதோ அப்படியே அவன் திருப்பி அனுப்பமாட்டான் என்பதையும் அந்த வேதங்களே கூறுகின்றன என்று அப்படிக் கூறும் வேதவாக்யங்களை உதாஹரித்து வேதங்களுக்குத் துல்ய ப்ரமாணமான ஸ்ரீகீதோபநிஷத் சுலோகத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஸூத்திரத்தில் சகாரம்கூட இல்லாமையினால் மேல் உபஸம்ஹாரம் செய்யவேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் "ந ச " என்று ஆரம்பித்து இப்படித் திருப்பி அனுப்பாமைக்குக் காரணத்தை மற்றொரு விதத்தில் உபபாதித்திருக்கிறார். இதற்கு மூலம் ஆழ்வாருடைய

"மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவனோ

என்கிற திருவாய்மொழி 1-7-4ம் பாட்டே. எப்படி வேதங்கள் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை உபபாதிப்பதில் உத்தம ப்ரமாணங்களாக நிற்கின்றனவோ, அதைப்போலவே திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பகவானை உள்ளபடியே ப்ரத்யக்ஷீகரித்து தாம் அனுபவித்தபடியை வெளியிடுகிற திருவாய்மொழியும் உத்தமமான ப்ரமாணமென்று திருவுள்ளம் பற்றி, எம்பெருமானார் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கீழ் உதாஹரிக்கப்பட்டதான ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பாட்டை அப்படியே ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸூத்திரகாரரோ ராஜாஜ்ஞை போலே வேதங்கள் கூறா நிற்கும் என்றார். அகில த்ராமிட ப்ரஹ்மதர்சியாகிய ஆழ்வாரோ அந்தக் காரணத்தை மேலே நிரூபிக்கப்போகிறவராய் பகவான் முக்தனைத் திருப்பி அனுப்பமாட்டானேயாகிலும் முக்தனே திரும்பி வந்துவிட்டால் புனராவ்ருத்தியில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டதாகாதே என்பதற்காக இந்த அம்சத்தை மட்டும் விசேஷித்து உபபாதித்தருளினார் என்பதும், இதற்குக் கீழ்ப்பாட்டில், "என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே" என்பதை அனுவதிக்கிறார் என்பதும் இங்கு விவக்ஷிதமாகக் கடவது. ஸ்ரீபாஷ்ய பங்க்தியும், எம்பெருமானாருடைய காலக்ஷேபத்தின் ஸங்க்ரஹமான திருவாறாயிரப்படி பங்க்தியும் உதாஹரிக்கப்படுகின்றன.

नचउच्छिन्नकर्मबन्धस्य असंकुचितज्ञानस्यपरत्रह्मानुभवैकस्वभावस्य तदेकप्रेियस्य अनवधिकातिशयानन्दं व्रह्मानुभवतः अन्यापेक्षातदर्थीीरम्भाद्यसंभवात् पुन रावृत्तिशङ्का । न च परमपुरुषः•••

திருவாய்மொழிப்பாட்டின் திருவாறாயிரப்படி பங்க்தி

"இப்படி எம்பெருமானோடு ப்ரவ்ருத்தமான ஸம்ச்லேஷத்திற்கு ஒருபடியாலும் மேல் அழிவில்லை என்கிறார். தன் திறத்தில் எனக்குள்ள அஜ்ஞானமெல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்தருளி, தன்னுடைய கல்யாணமான குண ஸ்வரூபங்களை அத்யந்த விசதமாம்படி எனக்குக் காட்டியருளித் தனக்கு ஸத்ருசரான அயர்வறும் அமரர்களோடு ஸம்ச்லேஷிக்குமாப்போலே என்னோடு ஸம்ச்லேஷித்தருளியவனை எங்ஙனே விடும்படி என்கிறார்" -- என்பது. இங்கு "ஒருபடியாலும் அழிவில்லை" என்பதற்கு இதற்கு வ்யாக்யானமான இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தில் "என்னுடைய அஜ்ஞானமடியாகவும் விஷயாந்தர ஸங்கமடியாகவும் பகவத் ஸ்வாதந்த்ர்வமடியாகவும் என்னுடைய பாக்யஹானியடியாகவும் என்றபடி" என்று. கீழ் வேதவாக்யங்களுக்கு மேற்கோளாக ஸ்ரீகீதா ச்லோகத்தை உதாஹரித்தாற்போலே இந்த த்ரமிடோபநிஷத்துக்கும் மேற்கோளாக மற்றொரு கீதாச்லோகத்தை உதாஹரித்து உபஸம்ஹாரம் செய்தருளியிருக்கிறார் இப்படியே ஸ்ரீகீதாபாஷ்ய கத்யாதிகளிலும் பல ப்ரகரணங்களில் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைப் பின்பற்றியே நிரூபித்தருளியிருக்கிறார்.

ஸ்ரீதேசிகன் இந்த ஆழ்வாருடைய பெருமைகளைப் பேசியிருக்கும் ப்ரகாரங்களை நிரூபிப்பதானால் அது ஒரு தனிப் புஸ்தகமாகும். ஆகையினால் அவற்றின் ஸங்க்ரஹம் மட்டும் செய்யப்படுகிறது. நம்முடைய விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை இந்தக் கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தருளியவர் இவரே என்றும், இவற்றை மீண்டும் ஸ்ரீமந் நாதமுனிகளும் உபதேசித்தருளியவர் என்றும் ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தியில் ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் திருவாய்மொழி முகத்தாலும் யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் -- இவரை ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தநையாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்" இத்யாதியாக அனுஸந்தித்திருக்கிறார்.

நம்மாழ்வாருக்கும் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் நடுவில் பல வருஷங்கள் கழிந்துவிட்டதே என்பதற்கு ஸமாதானத்தை ஸ்ரீஸ்தோத்ரபாஷ்யத்தில்

कालविप्रकर्षेपि परमपुरुषसंकल्पात् कदाचित् प्रादुर्भूय सास्त्रादपि सर्वोपनिषदुपदेष्टारं என்றருளிச் செய்திருக்கிறார். இவருடைய அருளினால் "திருமால் தாளில் தலைவைத்தோம்" என்று அருளிச் செய்திருப்பதினால் இவருடைய க்ருபையில்லாவிடில் பகவானுடைய திருவடிகள் நமக்குக் கிட்டாது என வெளியிட்டிருக்கிறார். இவருடைய ப்ரபாவத்தை द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्बुदं என்று வாசாமகோசரம் என நிரூபித்தருளினார். எம்பெருமான் நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழி 1000 பாட்டுக்கள் பாடிய பிறகே தன்னை உளனாக எண்ணி, அதற்கு ப்ரதியாகத் தானும் அவர் விஷயமாக 1000 பாட்டுக்களைப் பாடவேண்டும் என்ற அபிலாக்ஷையைத் தான் குருவரராய்த் தோன்றி ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்து தீர்த்துக்கொண்டான். இவ்வம்சத்தை ஸ்ரீதேசிகன் தாமே ஸமாக்யா பத்ததியில் நம்மாழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒன்று என்று நிரூபித்திருப்பதினாலும், நாதபத்ததியில் பாதுகைகளின் நாதம் திருவாய்மொழிப் பாசுரங்களின் அனுதாதம் என்று அனுஸந்தித்திருப்பதினாலும், க்ரந்தத்தை "ஸந்த:" என்று தொடக்கம் செய்து "ஸந்த:" என்று முடித்திருப்பதினாலும் ஸூசிப்பித்திருக்கிறார். இவருடைய முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திற்கு ஸ்ரீஉபகார ஸங்க்ரஹம் என்னும் ரஹஸ்யத்தில் வ்யாக்யானம் அருளிச் செய்திருக்கிறார். திருவாய்மொழிப் பாசுரங்களின் அர்த்தத்தை ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளீ, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம், ஸ்ரீநிகம பரிமளம் இவைகளில் வெளியிட்டுள்ளார். இவருடைய சில பாட்டுக்களின் உண்மையான அர்த்தங்களை ப்ரமாணோபபத்திகளுடன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் முதலிய க்ரந்தத்தில் நிரூபித்தருளினார். இவர் நெடுமாற்கடிமையில் அனுஸந்தித்தருளிய அர்த்த விசேஷங்களையே புருஷார்த்தகாஷ்டாதிகாரத்தில் ஸங்க்ரஹித்திருத் தருளினார். இவருடைய திருவாக்கின் ப்ரபாவத்தை "அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன" என்றும் நிரூபித்திருக்கிறார்.

'ஒரு மதியன்பர் உளங்கவர்ந்தன', 'குருகையில் வந்து கொழுப்படக்கிய குலபதி' என்று இவருடைய ப்ரபாவத்தையும் பேசியுள்ளார். ஸ்ரீகீதாசார்யன் ஸாதுபரித்ராணார்த்தமாக அவதரிக்கிறேன் என்றது இவரையே ப்ரதானமாகக் குறிக்கும் என்று ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் ஸூசிப்பித்தார். அதாவது,

"न हि अमिषां अन्नपानं ताम्बूलादि धारण पोषणादिकं, किं तु अहं कृष्ण एव"

இவர் 'உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்' என்பதைப் பின்பற்றியதாகும். இப்படியே இவர் 'கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்' என்றனுஸந்தித்ததையே

कृष्णःतत्वं परं तत्परमापि च हितं तत्पदैकाश्रयत्वं'

என்று கீதையின் பொருளாக ஸங்க்ரஹித்துள்ளார். பகவானுடைய திருக்கண்களின் சோபையை இவர் 'தாமரைக்காடுகள்' என்றனுஸந்தித்திருப்பதைப் பின்பற்றி

पुण्डरीकवन्लुण्ठाकलोचन

என்றனுஸந்தித்தருளினார்.

ஸ்ரீப்ரபந்தஸாரத்தில் 'முன்னுரைத்த' என்று இவர் ப்ரபந்தங்கள் விஷயமாக ஒரு பாட்டு அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவருடைய த்ராக்ஷா மதுரம் போன்ற ஸ்ரீஸூக்திகளை அனுஸந்தித்ததினால் உத்கர்ஷம் பெற்ற தம் வாக்குகள் ப்ரஹ்மாதிகள் விரும்பியும் பெறாத ஓர் ஏற்றம் பெற்றவைகளாய் நிற்கும் என்றனுஸந்தித்திருக்கிறார். கீழ்ப் பல இடங்களில் இவரைக்கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

இவருடையவும் இவருடைய ப்ரபந்தங்களின் ஏற்றத்தையும் மற்றவர்கள் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் கீழ் முன்னுரையில் 42ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவி சக்கரவர்த்தியென இக்காலத்தில் விசேஷித்துக் கொண்டாடப்படும் கம்பனாலும் இவர் விஷயமாக சடகோபர் அந்தாதி என்னும் க்ரந்தத்தில் இவருடைய பெருமை நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக