புதன், 30 மே, 2012

வைத்தமாநிதி 34

மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்த வலையைத் தொடர்பவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். சில நாட்களாகவே (வாரங்களாகவே) அடியேனால் தினசரி பதிவிட முடியவில்லை. தினசரி என்றில்லாவிட்டாலும்கூட ஒரு ஒழுங்கான கால இடைவெளியில்கூட பதிவுகளை இடமுடியவில்லை. தட்டச்சிட்டு பதிவுகளை இட, அடியேனை ஆட்கொண்டிருக்கும் ஒருவிதமான சோம்பேறித்தனம் பெரும் இடைஞ்சலாயுள்ளது. தவிரவும், இன்னொரு முக்கியமான நூலை இட வேண்டியுள்ளது. வைத்தமாநிதி போன்ற நூல்கள் இலக்கிய ரசனையுடன் படித்து இன்புறத் தக்கவை. ஆனால் இனி இடப்போவதோ நாம் அவசியம் தெரிந்து கொண்டே ஆக வேண்டிய விஷயங்களை எளிமையாகச் சொல்லும் நூல். அதை உடனே வெளியிட வேண்டுமென்று அடியேன் பெரிதும் மதிக்கின்ற திரு வி. எஸ். ஸ்வாமி விருப்பம் தெரிவித்திருந்தார். தானே நூல் முழுவதையும் தட்டச்சிட்டுத் தருவதாக, நம் எல்லாருக்கும் வைதிக விஷயங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும் வழிகாட்டி வரும் ஸ்ரீ என்.வி.ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி முன்வந்து ஒரு பெரும்பகுதியைத் தட்டச்சிட்டு அனுப்பியும் விட்டார். எனவே, இந்த வைத்தமாநிதியின் இறுதிப் பகுதிகளை ஸ்கான் செய்தே இங்கு இட்டிருக்கிறேன். வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய நூலினை (வழக்கம்போல் 50 வருடத்திற்கு முன் வெளியான பழைய நூல்தான்) இங்கு இட ஆரம்பிக்கிறேன். “வைத்தமாநிதி”யை அனுபவிக்கும் அன்பர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். 

IMG_0001
IMG_0002
IMG_0003
IMG_0004IMG_0005
IMG_0006
IMG_0007
IMG_0008

………..நாளை நிறைவுறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக