திங்கள், 5 செப்டம்பர், 2011

திருப்புல்லாணியில் ஆவணி ஸ்வாதி!

மூலை கருடன்! எத்தனை பேர்கள் பார்த்திருப்பீர்கள்! எத்தனை ஊர்களில் இப்படி மூலை கருடன் என்று விசேஷமாக இருக்கின்றது என்பது அடியேனுக்குத் தெரியாது. ஆழ்வார்திருநகரி, திருக்கோஷ்டியூர், திருப்புல்லாணி போன்ற சில இடங்களிலே மட்டும் இப்படி மூலை கருடன் விசேஷமாக அமைந்திருக்கிறார். அதென்ன மூலை கருடன்? பெருமாள் கோவில் திருமதில் சுவர்களில் ஈசான்ய மூலையில் இருப்பதால் இவர் மூலை கருடன்.

இப்படி திருப்புல்லாணியில் கம்பீரமாக ஈசான்ய மூலையில் இருக்கும் கருடன் அபார சக்தி படைத்தவர். இங்குள்ளவர்களுக்கு, என்ன கோரிக்கை என்றாலும் நடத்திக் கொடுப்பவர். இவரைப் ப்ரார்த்தித்து ஒரு சிதறு காய் போட்டால் எப்பேர்ப்பட்ட சிரமமான காரியம் என்றாலும் எளிதாக நடந்து விடுவதை அனுபவிப்பவர்கள் நாங்கள். இவருக்கு ஆடி ஸ்வாதி அன்று மட்டும் மிக விசேஷமாகத் திருமஞ்சனங்கள் நடைபெற்று அமிர்தகலசம் படைப்பது எங்களூர் வழக்கம். அன்று இன்னொரு விசேஷம் கூட. மற்றைய நாட்களில் கோவிலில் எந்த விசேஷம் என்றாலும் முதல் மரியாதை இராமநாதபுரம் ராஜாவுக்கோ அல்லது அவர் ப்ரதிநிதிகளுக்கோதான். உபயதாரர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு மரியாதை என்பது அப்புறம்தான். ஆனால் இந்த ஸ்வாதியில், முதல் மரியாதை ஆழ்வார்கள் சார்பில் கோவில் முதல் தீர்த்தகாரருக்கு அப்புறம்தான் ராஜாவுக்கு!

திருமஞ்சனம் என்று எளிதாக எழுதிவிட்டேன். ஆனால் அதைப் பண்ணுவதற்குள் ஆலய அர்ச்சக, கைங்கர்யபரர்கள் படும் சிரமம் சொல்லி முடியாது. ஒரே ஒரு பாதம் மட்டும் வைக்கும் அளவில் இருக்கும் இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் நின்று அவர்கள் திருமஞ்சனம் செய்ய வேண்டும். கொஞ்சம் தவறினாலும் 30 அடியில் கீழே தரையில் விழ வேண்டியதுதான்.

இப்படி சென்ற ஆடியில் ஸ்வாதியில் விசேஷமாகத் திருமஞ்சனங்கள் நடைபெற்றபோது பெரிய அழகியசிங்கர் தற்செயலாக அங்கு வந்திருந்து முழுமையாக அனுபவித்து ஆனந்தப் பட்டதை ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அப்பொழுதே அவர் ஆவணி ஸ்வாதியில் மீண்டும் ஒரு முறை விசேஷமாகத் திருமஞ்சனம் செய்ய வேண்டுமென்று திருவுளப் பட்டதை, ஆலயத்தாரும் ஏற்றுக் கொண்டு அதன்படி இந்த ஆவணியில் மிக விசேஷமாக நடந்த திருமஞ்சனத்தின்போது இரண்டு அழகியசிங்கர்களும் எழுந்தருளி கண்டு களித்த காட்சிகளை திருப்புல்லாணி ஸ்ரீ அஹோபில மடம் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் தனது காமிராவில் பதிவு செய்திருக்கிறார்.

திருமஞ்சனத்தை மட்டும் கண்டு களித்துவிட்டுப் போகாமல், இரண்டு ஆசார்யர்களும் மிக்க பரிவுடன் தங்களைச் சூழ்ந்து நின்ற ஆடுகளின் மீதும் வாத்ஸல்யத்துடன் கருணை மழை பெய்திருக்கிறார்கள். தினமும் தங்கள் வாக்கால் உலகெங்கும் இருக்கும் சிஷ்ய வர்க்கத்தாருக்கு செவிக்கு உணவு இடுபவர்கள் அந்த ஆடுகளுக்கு வயிற்றுக்குப் பிடித்தமான உணவு அளிப்பதையும் ---- முந்திரிப் பருப்பாம், ஒரு கிலோவுக்கு மேல் இருக்குமாம், அதன்பின் ஏராளமான வாழைப் பழங்களாம் முத்துகிருஷ்ணன் சொன்னார் –  அவர் பதிந்திருக்கிறார். அந்த புகைப் படங்கள் இங்கு

Avani Swathi at Thiruppullani

2 கருத்துகள்:

  1. பெயரில்லா8:21 PM

    Reԁuсe hеat; sіmmer, uncovered, foг
    35 to 40minutes or to desirеd consistency, stirring occasiοnally.
    Pеter Piρer Pizza Coupons-Peter Piper Pizza Coupons:Peter Piper Pizza can
    be a fаmily pizza chaіn operating 45 company restaurants and
    60 franchisеs inside the U. Ιt also contains asorbic аcid,
    beet ροwder, dry уeast, ԁefatted soу flour, malic
    acіd, monocalcіum phosphate, modifiеԁ coгn starсh, natural flavoгs,
    rehydrated enzyme moԁified chеesе, sodium bіcaгbonаte, sorbitan
    mοnstearаte, and xanthan gum.

    Alѕo vіsit mу pаge :
    : pizza pan avon ohio

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா7:14 PM

    Үеѕ! Finally someone writeѕ about augen lаsern.


    Here is my pagе ... mouse click the next webpage

    பதிலளிநீக்கு