திங்கள், 18 அக்டோபர், 2010

திருப்புல்லாணியில் விஜயதசமி

விஜயதசமித் திருநாளான இன்று திருப்புல்லாணியில் ஸ்ரீஆதிஜகன்னாதப் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டு கிராமத்தின் ஈசான்ய மூலையில் வன்னி மரத்தடியில் (இப்போது மரம் இல்லை. எனவே அந்த பாவனையில், ஒரு வன்னிமரக் கிளையை தற்காலிகமாக நட்டுவைத்து) அம்பு எய்தி ரக்ஷித்து ஆஸ்தானம் திரும்பினார். பல, பல வருடங்களுக்குப் பின் யானை முன் செல்ல புறப்பாடு நடந்தது. எங்கிருந்தோ எங்கேயோ சென்றுகொண்டிருந்த யானையும், பாகனும் தற்செயலாய் புறப்பாடு ஆகும்போது வர, அதை அடியோங்கள் பயன்படுத்திக் கொண்டு நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டோம்.  ஒரு சிறு வீடியோ இங்கு

திருப்புல்லாணியில் விஜயதசமி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக