திங்கள், 21 செப்டம்பர், 2009

வாழ்த்துவோம்

கலி முற்றுகிறது. அக்கிரமங்கள், அநியாயங்கள் பெருகுகின்றன. நல்லவர்கள் நலிகிறார்கள். ஊரை ஏய்த்து வாழ்கிறவர்கள் செழிக்கிறார்கள். பெருமாள் பொறுமையாக இருக்கிறாரே என்றெல்லாம் நம் சிந்தனை பல நேரங்களில் ஓடும். நாம் நினைப்பதில், வருந்துவதில் அர்த்தமோ, உண்மையோ இல்லாமல் இல்லை. ஆனால் பெருமாள் பொறுமையாக இருக்க சில காரணங்கள் உண்டு. அங்கங்கே சில நல்ல இதயங்கள் ஆரவாரமில்லாமல் சில நற்பணிகள் செய்து கலியின் வலிமையைக் கூடக் குறைக்கின்ற அளவில் செயல்படுவது அவைகளில் ஒன்றாக இருக்கலாம். உதாரணத்திற்கு இந்த ஞாயிற்றுக் கிழமை தினமணி கதிரில் வந்த ஒரு செய்தி. தனி ஒரு மனிதராக 35 வருடங்களாக அன்னதானம் செய்து வரும் பேராசிரியர் திரு விஜயநாராயணசாமி பற்றிய அந்த செய்தியை முழுவதும் படித்தால் பிரமிப்பாயிருக்கிறது. முடிந்தவர்கள் உதவலாம். மற்றவர்கள் தாங்கள் தினமும் செய்யும் ப்ரார்த்தனைகளில் இந்தப் பணி மேலும் சிறக்க வேண்டிக் கொள்ளலாம்.

anna

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக