செவ்வாய், 21 ஜூலை, 2009

திருப்பாதுகமாலை

21. விம்பவெதிர் விம்பப்பத்ததி
711. மாயன ரண்மனை மங்கையர்கட்
காயந லப்படி மக்கலமா
வேயதெ ருள்வடி வென்றெனுமத்
தூயப தாவனி போற்றுதுமே. 1

712. அணியுனை யரங்கமா லணிந்தொ துங்குகாற்
பணியது பேணியப் போது மப்பனுக்
கணவரி பாது! நின் கண்க ருத்துமான்
இணையுரு மேவநின் றெதிர்வி ளங்குவான். 2

713. திருவரி பாதுகாய்! திகழு நின்னிடை
வருமுன தெண்டிசைப் பாலர் தம்முருத்
தெரியெதிர் நீழல்கண் டீசர் வேறுநீ
தருமொரு சங்கையிற் போல்வ ணங்குவார். 3

714. தொழவரு சுராசுரர் மோலி யவ்வவை
யெழுமுன் தண்ணலில் விம்ப மாயிரம்
பொழிதலி லாங்குடன் போத பாதுகாய்!
வழிவரு மவர்க்கிடு வண்ண நண்ணுவாய். 4

715. தேவர்க ணினக்கென வீந்த பாகுடம்
மேவரு ணாரணன் பாது! நின்னிடைப்
பூவரு விம்பமின் பூக்க வவ்வவை
ஆவலி னீயுவந் தாத ரித்தவாம். 5

716. கனநெடு கற்கசக் கற்க ளான்றயான்
வனமலர் பாதமெவ் வாறு தாங்குவல்
எனவரி தாண்மலர் நீழ லாமரை
மினினிறை பாதுனத் தவிசி லேந்தியே!. 6

717. உனையரி தாளினிற் புனையு மக்கணம்
இனவரி மீதெதிர் நீழ லிற்பரன்
வனமலி தன்னொரு வடத லந்திகழ்
நனவுரு பாது! நன் றறிவு றுத்துவன். 7

718. உனதிடை பணிந்தெதிர் பலித்த புங்கவர்
வனையரி திருவிழா வவதி யிற்பினும்
நனியெதிர் துளங்களில் நாடி நின்கணே
இனிதவ ராடவ பிரத மென்னவாம். 8

719. பலவுன கற்களிற் கண்டு தன்னுருக்
கலிதரு மூழிதோ றந்த ணர்பலர்
இலகுவி லிற்றையே யியற்றி யோவென
மலரவ னையுற மலர்தி பாதுகாய்!. 9

720. அணிதிரு வரங்கமா லணிந்து பாதுனைப்
பணைமிக வொதுங்கவந் தப்பு ரத்தவன்
துணைவிய ருருக்கணின் கண்டு ளங்களில்
இணையவ ரூசலாட் டென்று தோன்றுமே. 10

721. தவநிதி பாதுகாய்! தாழ்ந்து நின்முனோர்
நவையறு பின்னவ னரசி யல்வகை
நுவலவு னன்மணி யூடு றாசனக்
கவினொளிர் தன துருக் கண்டு வெள்கினன். 11

722. நிலவடி யிடத்திட விராமன் மீண்டுனைக்
கலவுன மணிக்களிற் கவியி ராக்கதர்
வலவனொ டடிநிலாய்! வயங்க வாங்குளோர்
பொலியுனை விளங்கவான் யான நோக்கினார். 12

723. உலகின ரிடுக்கணன் றொடுக்கு நீதிநீர்
மலிமணி பாது! நின் மணிக்க ணத்தொளிர்
நலமிகு சாமரை நீயு றிஞ்சுமாற்
றலரது கீர்த்தியாஞ் சீர்த்தி நாறுமே. 13

724. உலகுக ணோக்கநீ யுவந்து லாவுகால்
உலகுக ணின்கணே ரெதிர்து ளங்களில்
உலகுக ளன்றுதன் குக்கி வைத்தளித்
திலகவ னென்னதா ணிலை! விளங்குவாய். 14

725. உவணமு வந்தரி யூர வானவர்
அவர்படி யூர்வர்தாம் பாது னோடவன்
புவிசெல வும்பர்தம் பிம்ப முன்னிடை
அவிர்தலி லொத்தொரு வாக ராவரே 15

726. ஒளியினளி யமைக்குமணி யிமைக்கும் பாதூ!
ஒருங்குசுரர் மகளிருனை வணங்க வாங்கே
தெளியுருவத் திருநிகழுந் தேவி! நின்கண்
தெரியுமவ ருருவமெனும் விரக தொன்றிற்
கிளரெழிலந் நரவளியன் றொடைப டைத்த
பேதைதமைக் காணவுடனாண வென்றோ
களிமிகநின் னவையறுமா மேனி நீமக்
கடலிலொரு குடியெனவந் தாடு வாரே. 16

727. அத்தனடை நத்துமணிச் சோதி மல்கும்
அடிநிலை! யுன் னிடையமல வரங்க னத்தன்
ஒத்ததிருப் பதகமல மலர்த்தி நின்னோ
டுய்யவிது வையமென நடந்து நாடு
மொத்தமுமே யத்தனது கோயின் மீண்டு
மொய்யதிரு வோடுபணிப் பள்ளி யேறித்
தொத்துமுனைக் கழற்றியுமம் மெத்தை யோடு
முனிலொளிர் தன் முகிலுருவத் திலகுவானே. 17

728. உகவைமிக வுனையிறைவ னணிந்து பாவால்!
உலகடைய நடந்தருளே சுரந்த ளிக்கும்
தகவிலிரு மருங்குதிரு நெருங்கு கோலந்
தருதிருபூ மடந்தையர்க ணடந்த வாறே
அகமகிழ வவருனையே யிமையா துன்னும்
அருமையினின் மணியிலவர் நிலவு நேரிற்
றிகழழகன் திருவடியின் சேவை நீயே
தெளியவர் தமக்குமருள் புரிகின் றாயே. 18

729. தொல்லிறைவன் முனந்துவரை வயங்கு மோரை
யொருபதினா றாயிரவர்க் கொவ்வோர் மேனி
ஒல்லவிலொவ் வொருவருட னுளங்க லந்த
உத்தமனவ் வொத்தனணி யேறு நின்சீர்
வல்லரியின் வரிகளென விளங்கு கல்லின்
வளரொளிமீ தெதிர்விளங்கு முறையில் வள்ளல்
பல்லுருவம் படைத்தரிபா தொருத்தி நின்கண்
படிந்தொருதன் படிக்கேழில் பரிதெ ரிப்பான். 19

730. தாணக நின்கண் ணாநக மேனீ
நீணல மேறும் நீரெதிர் நீமம்
சேணும தந்நேர் விம்பெதிர் விம்பம்
மாணரி பாதிம் மாதிரி சாலும். 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக