வியாழன், 7 மே, 2009

திருப்புல்லாணி – சித்திரை 8ம் நாள்

ragu 001

திருப்புல்லாணி திருப்புல்லாணி சித்திரைத் திருநாளின்8ம்நாளாகிய

இன்று மாலை ஸ்ரீராமன் வேட்டைக்கு எழுந்தருளிய காட்சிகள் இங்கு உள்ளன.






ஒரு பாக்யசாலிக் குடும்பம்

அந்த நாளில் மன்னராட்சி காலத்தில் கிராமங்களில் முனுசுப் பிள்ளை என அழைக்கப்பட்ட கிராம ஹெட்மேன்களுக்கு மன்னருக்கு அடுத்தபடியாக எல்லா அதிகாரங்களும் இருந்து வந்தன. திருப்புல்லாணியில் இருந்த முனுசுப் பிள்ளையை கௌரவிக்க அந்த நாளில் செய்த ஏற்பாடு இன்றுமுனுசுகள் இல்லாவிட்டாலும் தொடர்வது அந்தக் குடும்பத்தார் செய்த பெரும் பாக்யம். மற்ற நாட்களில் எல்லாம் வீதிப் புறப்பாட்டின் போது அவரவர்கள் வீட்டு வாயிலில் ஓரிரு நிமிடங்கள் நின்று உபகாரங்களை ஏற்கு

ம் பெருமாளும், இராமனும் 8ம் திருநாள் வேட்டைக்கு ஏளும்போது வேட்டையாடிய பிறகு வழக்கமான பெரிய திருவீதிப் புறப்பாடு தவிர்த்து மாட வீதிக்குள் நுழைந்து அங்கு முதலில் இருக்கும் முனுசுப் பிள்ளை வீட்டு வாயிலில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்து அங்கு திருக்கண் கண்டருளி அனுக்ரஹம் செய்யும் அந்த மரியாதை இன்றும் பதவிகள் எதுவும் இல்லையாயினும் அவர்கள் வம்சத்தவருக்கு அளிக்கப் பட்டு வருகிறது. இங்கு அந்தக் காட்சிகள் சில உள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக