வியாழன், 18 பிப்ரவரி, 2016

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்ஸவம்

New Doc 27_1

திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் பங்குனி ப்ரும்மோத்ஸவம் வரும் மன்மத பங்குனி 2ம் நாள் (15-03-2016) அன்று த்வஜாரோஹணத்துடன் துவங்க உள்ளது. 18-3-2016 நான்காம் திருநாள் இரட்டை கருட ஸேவை. ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி. அன்று காலை பெருமாள் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்துக்கு எழுந்தருளி விசேஷ அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளி இரவில் ஸ்ரீபட்டாபிராமன் உடன்வர இருவரும் இரட்டை கருட வாகனத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருள்வர்.  20-3-2016ல் திருக்கல்யாண உத்ஸவம். 23-3-2016ல் திருத்தேர் உத்ஸவமும், 24-3-2016ல் பெருமாளும் இராமனும் சேதுக்கரை எழுந்தருளி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் அதன்பின் பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் மூவருக்கும் சேதுக்கரை ஸ்ரீஹனுமார் சந்நிதியில் ஏக ஆசனத்தில் திருமஞ்சனமும், கூடவே ஹனுமாருக்கும் திருமஞ்சனமும் நடைபெறும். 25-3-2016ல் ஸ்ரீவானமாமலை மடத்துக்கு, பெருமாள் பிராட்டிமாருடன் விடையாற்றி உத்ஸவத்துக்கு எழுந்தருளி விசேஷ அலங்கார திருமஞ்சனமும் நடைபெறும். உத்ஸவத்தில் சென்னை ஸ்ரீவரவரமுனி சம்பந்தி கைங்கர்ய சபையினரால் அருளிச் செயல் கைங்கர்யம் நடைபெறுகிறது. உத்ஸவத்தின் அனைத்து தினங்களிலும் ஸ்ரீமத் ஆண்டவன் நியமனப்படி, ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ததீயாராதனம் இருவேளையும் நடைபெறும். அனைவரும் வந்து பெருமாள் உத்ஸவத்தில் கலந்து கொள்ள திருப்புல்லாணிவாசியாக அழைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக