வியாழன், 24 மார்ச், 2011

திருப்புல்லாணி தீர்த்தவாரி

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் பத்தாம் நாளன்று காலையில் ஸ்ரீஆதிஜெகன்னாதப் பெருமாள் பெரிய திருவடியிலும், ஸ்ரீ பட்டாபிராமன் அநும வாகனத்திலும் சேதுக்கரைக்கு எழுந்தருளி சேதுவைக் கடாக்ஷிக்க, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சேதுவில் தீர்த்தவாரி கண்டருளினார். அதன்பின் சேதுக்கரையிலுள்ள ஸ்ரீ ஜெயவீர ஹநுமார் சந்நிதியில் ஏக ஆசனத்தில் பெருமாள், சக்கரவர்த்தித் திருமகன், சக்கரத்தாழ்வார் மூவருக்கும், அதே நேரத்தில் ஸ்ரீஜெயவீர ஹநுமாருக்கும் வெகு விசேஷமாக அலங்காரத் திருமஞ்சனங்கள், வேத பாராயண முழக்கத்துடன் நடைபெற்று, இரவு இருவரும் திருப்புல்லாணி கோவிலை அடைந்து, பெருமாளுக்குத் தாயார் கதவடைக்க ப்ரளயகலகம் தீர்த்தக்காரரால் சேவிக்கப் பட்டு நடை திறந்து நம்மாழ்வார் இருவரையும் சமாதானப் படுத்தி அதன்பின் பெருமாள் சந்திரப் பிரபையில் புறப்பாடு கண்டருளி மறுநாள் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வானமாமலை மடத்துக்கு எழுந்தருளி விடாயத்தி உத்ஸவ அலங்கார திருமஞ்சனங்கள் கண்டருளி, இரவு நாச்சிமாருடன் சர்வாலங்கார சுந்தரராய் திருவீதிப்புறப்பாடு கண்டருளியதுடன் பங்குனி உத்ஸவம் இனிதே நிறைவுற்றது.

align="justify"> 

       திருப்புல்லாணியில் கரண்ட் என்பது எப்போ வருமோ எப்போ போகுமோ என்ற நிலையில் விரிவாக எழுத முடியவில்லை. இந்த ஒரு பாராவைக் கூட முந்தாநாள் ஆரம்பித்து இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறேன். தீர்த்தவாரியும், அதைத் தொடர்ந்த திருமஞ்சனமும் வீடியோக்களாக இங்கே!

தீர்த்தவாரி

 

சேதுக்கரையில் திருமஞ்சனம்

(சற்று பெரிய வீடியோ! தெரிவதற்கு சிலருக்கு தாமதமாகலாம்! )

 

 

வேதபாராயணத்தினால் பெருமாளைக் குளிரச் செய்தவர்கள்

மதுராந்தகம் ஸ்ரீஅஹோபில மடம் பாடசாலை வாத்யார் ஸ்வாமியுடன் வித்யார்த்திகள்.

DSC02605 

திருச்சானூர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம பாடசாலை வித்யார்த்திகள்

DSC02608

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக