வெள்ளி, 2 ஜூலை, 2010

மாதவிப் பந்தல்

இங்கு ஏற்கனவே சில முறை "மாதவிப் பந்தல்" என்னும் வலைப் பூவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆழ்வார்களை அனுபவிப்பதற்காகவே பிறந்தவர்கள்போல் அங்கு திருவாளர்கள் ரங்கன், ரவிசங்கர், ராகவன் போன்றோர் கூட்டணியமைத்து படிப்பவர்களை ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் மயங்க வைக்கும், அதில் தொடர்ந்து ஆழவைக்கும் மிக உன்னதமான பணியை வெகு சிறப்பாகச் செய்து வருகிறார்கள். அவர்களின் இலக்கு இளைய தலைமுறையை அருளிச் செயல்களில் திளைக்கவைத்து நமது ஒப்பற்ற  சனாதன நெறிகளைப் புரிந்து பின்பற்ற வைப்பது. (இதை அவர்கள் எந்த இடத்திலும் டமாரமடிக்கவில்லை) அதற்காக இளைய சமுதாயத்தைக் கவர்வதற்காக அருமையான படங்கள், எம்பி3 இசைத் தகடுகள், காணொளிக் காட்சிகள் (வீடியோ) என்று இடையிடையே நுழைத்துக் கலக்குவார்கள். எங்கிருந்துதான் அவைகளைச் சேகரிப்பார்களோ தெரியாது. அவர்கள் இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களே அவர்கள் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதற்கு நல்ல ஆதாரம். 
அவர்கள் வலைப் பூவிலிருந்து ஒரு அருமையான படம் இங்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக