சனி, 5 செப்டம்பர், 2009

9ன் பெருமை சொல்லவும் அரிதே

[ WARNING : இது நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனாலும் சொல்லி விடுகிறேன். நீங்கள் கீழே படிக்கப் போவது அடியேன் வழக்கம்போல் நான் படித்த புத்தகத்திலிருந்து இங்கே எழுதுவதுதான். ஏதோ அடியேனுக்கு நிறைய விஷயம் தெரியும்போல என யாராவது நினைத்துவிடக் கூடாது என்பதற்காக இந்த "துக்ளக்"பாணி எச்சரிக்கை! விஷய தானம் செப்டம்பர் மாத "Your Family Friend" இதழ்]

இந்திய இதிஹாஸங்கள், சரித்திரங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் , 9, 18 ஆகிய எண்களுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை.

தேவாஸுர யுத்தங்கள் நடந்த கால அளவு == 18 ஆண்டுகள். (18 =1+8 = 9)

ராம-ராவண யுத்தம் நடந்தது == 18 மாதங்கள் (18= 1+8=9)

மஹாபாரதத்தில் உள்ள பருவங்கள் == 18 (1+8=9)

பகவத்கீதையில் உள்ள அத்தியாயங்கள் == 18 (1+8=9)

பாரதப்போரில் ஈடுபட்ட சேனைகள் == 18 அக்ஷௌஹிணி (1+8=9)

பீஷ்மர் தர்மருக்குச் சொன்ன அரசரின் கடமைகள் == 18 (1+8=9)

மஹாபாரத யுத்தத்தில் ஈடுபட்ட சேனை ஒரு அக்ஷௌஹிணியில்

ரதங்கள் இருபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எழுபது. 21870 == கூட்டுத் தொகை 21870 = 18=9

யானைகள் இருபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எழுபது 21870 = 18 =9

காலாட்கள் ஒரு லக்ஷத்தி ஒம்பதாயிரத்துமுன்னூற்றி ஐம்பது =109350= 18=9

குதிரைகள் அறுபத்திஐயாயிரத்துஅறுநூற்றுப்பத்து = 65610 = 18 = 9

அரசரின் சின்னங்கள் 18 = 9

அரசன் வழங்கும் தண்டனை வகைகள் 18 = 9

காளை வடிவில் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்ல வந்த அரிஷ்டன் என்ற அரக்கனைக் காலால் எட்டி உதைத்து காளை போய் விழுந்த தூரம் 18 அடி = 9

ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணருடன் சண்டையிட்டுத் தோற்றது 18 தடவைகள் = 18 = 9

க்ருத யுகத்தின் ஆண்டுகள் 17,28,000 கூட்டுத்தொகை 18 = 9

த்ரேதா யுகத்தின் ஆண்டுகள் 12,96,000 கூட்டினால் 18 = 9

த்வாபர யுகத்தின் ஆண்டுகள் 8,64,000 கூட்டினால் 18 = 9

கலியுகத்தின் ஆண்டுகள் 4,32,000 கூட்டினால் 18 = 9

ஒரு கல்பத்தின் மொத்த ஆண்டுகள் 6048,00,00,000 கூட்டினால் 18 = 9

பாரதப் போர் முடிந்து த்ருதராஷ்ட்ர மன்னன் வாழ்ந்த ஆண்டுகள் 18 = 9

நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள் 43,20,000 கூட்டுத் தொகை 18 = 9

ஒரு மன்வந்திரத்தின் மொத்த ஆண்டுகள் 432,00,00,000 கூட்டுத்தொகை = 18 =9

மனித உடலுக்கு வாசல் = 9

நல்ல அரசனின் குணங்கள் 36 = 3+6 = 9

பாரத யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணரின் உதவியால்தான் தன் 100 பிள்ளைகளையும் கொன்று வெற்றி பெற்றார்கள் என்று கோபம் கொண்ட காந்தாரி ஸ்ரீகிருஷ்ணரும் அவரது உறவினர்களும் "இன்று முதல் 36வது ஆண்டில் கொல்லப்படுவார்கள்" என்று சபித்தாள். 36ன் கூட்டுத் தொகை 3+6 = 9

யுதிஷ்டிரர் பாரதப்போர் முடிந்து நல்லாட்சி செய்த ஆண்டுகள் 36 = 3+6 = 9

தமிழ்ச்சங்க நூல்கள் பதிணெண்கீழ்க்கணக்கு, பதிணெண்மேல்கணக்கு, கலம்பகத்தின் உறுப்புகள் 18 = 9

சித்தர்கள் மொத்தம் 18 பேர் = 1+8 = 9

சபரிமலை ஐயப்பன் கொயில் படிகள் 18 = 9

காவிரி நதி பெருக்கெடுக்கும் நாள் ஆடி 18 = 1+8 = 9

தமிழக விவசாயிகள் விதை விடும் சுபநாள் ஆடி 9

கஜனி முகமது இந்தியாவின்மீது படையெடுத்தது 18 முறை = 1+8 =9

2 கருத்துகள்:

  1. அப்படியே, ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு என்று மிச்சமிருக்கும் எட்டு எண்களையும், பூஜ்யத்தையும் பற்றியுமே இப்படி எழுதிக் கொண்டே போகலாம்!

    பாவம், அவைகள் மட்டும் என்ன பாவம் செய்தன:-))

    பதிலளிநீக்கு
  2. அப்படி யாரும் எழுதி அது அடியேன் கண்ணில் படும்போது கண்டிப்பாக இங்கு இட்டு விடுகிறேன். அல்லது அவை எங்கிருக்குமென்று நீங்கள் சொன்னால் தேடிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு